பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும்

பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும்
அந்த நக‌ரத்தின் பெருமையையும் செல்வ மிகுதியையும் வாணிகத்தையும் வாயாரப் பாட வேண்டுமென்று உருத்திரங்கண்ணனார் எண்ணினார். அதோடு கரிகால் வளவனுடைய வரலாற்றையும் அந்தப் பாட்டில் இணைக்க விரும்பினார். பல நாள் சிந்தித்து,"பட்டினப் பாலை" என்ற நீண்ட பாட்டை இயற்றி முடித்தார். 301. அடிகளைக் கொண்ட அந்தப் பாட்டு, காதலன் ஒருவன் சொல்வதுபோல அமைந்திருக்கிறது. இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருளைத் தேடும் பொருட்டுத் தன் காதலியைப் பிரிந்து செல்லலாம் என்று முதலில் அவன் நினைக்கிறான். பிறகு அவளைப் பிரிவது துன்பத்தைத் தரும் என்ற எண்ணம உண்டாகிறது. அப்போது தன் நெஞ்சைப் பார்த்து, "காவிரிப்பூம்பட்டினத்தைப் பெற்றாலும், கரிகாலனுடைய வேலைக் காட்டிலும் வெம்மையான பாலை நிலத்தைக் கடந்து நான் வரமாட்டேன்; என்னுடைய காதலியின் தோள் அம் மன்னனுடைய செங்கோலை விடத் தண்மையை உடையது" என்று சொல்கிறான். இப்படிச் சொல்லும் போக்கில் காவிரிப்பூம் பட்டினத்தின் பெருமையையும், கரிகாலனுடைய புகழையுமே புலவர் விரித்துரைக்கிறார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

வீரம் விதைக்க பட்ட நாள்

திருவண்ணாமலை மலை ஒரு எரிமலை