Posts

Showing posts from July, 2015

நாடு என்றால் என்ன?

Image
நாடு என்றால் என்ன? தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன என்பதை ஒருவாறு விளக்கி, பின்பு கள்ளர் நாட்டின் வரலாற்றைத் தெரிந்த வரை கூறுகிறோம். வடக்கில் வேங்கடமலையும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லலையாகவுடைய நிலம் நெடுங்காலம் தமிகம் என வழங்கப்படுவதாயிற்று. தமிழகமானது தொன்று தொட்டு முடியடை வேந்தர்களான சேர, பாண்டிய, சோழர்களால் ஆட்சிபுரியப்பெற்று வந்தது. அதனாலே தமிழகம் சேரமண்டலம் எனவும், பாண்டி மண்டலம் எனவும், சோழ மண்டலம் எனவும் மூன்று பிரிவுகளையுடையதாயிற்று. இவை மண்டலம் என்னும் பெயரானன்றி நாடு என்னும் பெயரானும் வழங்கும். பின்பு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்னும் பிரிவுகளும் உண்டாயின. இம்மண்டலங்களின் எல்லை, அளவுகளைப் பின்வரும் தனிப்பாடல்கள் உணர்த்தும். சேர மண்டலம் வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோ

அரசமரபு பாய்மரக்கப்பல்கள்

Image
13ம் நூற்றாண்டு அரசமரபு பாய்மரக்கப்பல்கள் தண்ணீர் உட்புகுதலை தடுக்க ஏற்றவாறு அடித்தளங்களைக் கொண்டிருந்தன. இவ்வகைக் கப்பல்களில் சில சோழ கடற்படை பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது

அக்காலக் கப்பல்கள்

Image
ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மகனின் ஆட்சிக்காலத்தில் சிக்கலான வகைப்பாட்டுக் கடற்கலங்கள வகைள் மற்றும் அதன் பயன்பாடு என்பன இருந்தன. அவற்றில் எஞ்சிய கடற்கள வகைகளின் பெயர் மற்றும் பயன்பாட்டு என்பன கீழ் வருமாறு. தாரணி - ஆழ்கடல் போருக்காக வடிவமைக்கப்பட்ட தற்கால அழிப்பு கடற்கலங்களுக்குச் சமமானது. லூலா - சிறு போர் மற்றும் வழித்துணை கடமைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட தற்கால வழித்துணைக்கப்பல்களுக்குச் சமமானது. வஜிரா - சிறியளவு ஆயுதம்தரித்த, விரைவுத் தாக்குதல் போர்க்கப்பல். திரிசடை - பெரியளவில் ஆயுதம் தரித்த இரண்டுக்கு மேற்பட்ட இலக்குகள் சண்டையிடக்கூடிய என அறிக்கையிடப்பட்ட போர்க்கப்பல்கள் அல்லது போர்க்கலங்கள். இவை வேகம் மற்றும் தாக்குதல் என்பவற்றைவிட அதன் கட்டுமானத்தில் தங்கியிருந்தன. அக்காலக் கப்பல்கள் ஒரு சிறிய ஈரூடகப்படையை வேலைக்கமர்தியபோதும், இவ்வகைக் கப்பலில் அவர்களுக்குத் தனி அறைகள் மற்றும் பயிற்சி பகுதியில் என்பவற்றைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இக்கப்பல் சமநிலையற்ற போர் நடவடிக்கை ஈடுபடக்கூடியது என்று கூறப்படுகிறது. இவ்வகை கடற்களங்களைத்தவிர அரச உல்லாசப்படகுகளும் இருந்தன. அவை பின்வரும

சோழர் கடற்படை3

Image
சோழர் கடற்படை 500 வருடங்களாகப் போரில் ஈடுபட்டுள்ளது. இதில் தொடர்ச்சியான சிறு சண்டைகள் முதல் போர்கள்வரை அடங்கும். தீபகற்பத்தை கட்டுப்படுத்த பாண்டியருக்கும் சோழருக்கும் இடையிலான 5ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு பல கதைகளையும் நாடோடிக் கதைகளயும் உருவாக்கியது. குறிப்பிடத் தக்க போர் நடவடிக்கைகள் பின்வருமாறு பாண்டியர் போர் வெற்றி (கி.பி 1172) பாண்டியர் போர் வெற்றி (கி.பி 1167) பாலி போர்க் கப்பல்கள் அழிப்பு (1148) கலிங்க படையெடுப்பு கடற் சண்டைகள் (1081-83) இரண்டாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (கி.பி. 1025-1028) முதலாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (கி.பி. 1022 CE -1025) கடாரம் மீதான சோழர் படையெடுப்பு (1024-1025) கம்போஜா எனப்பட்ட கம்போடியா இணைப்பு (கி.பி ?-996) இலங்கை மீது படையெடுப்பு (கி.பி 993–1077) பல்லவ கடற்படையுடன் மோதல்கள் (கி.பி 903 - 908) ஆட்சேர்ப்பும் சேவையும் கப்பற்படைத்தலைவர்கள் கடற்படை வீரர் ஆட்சேர்ப்பு, பயிற்சி போன்ற விடங்களில் சுதந்திரமாகச் செயற்பட சோழ சக்கரவர்த்திகள் அனுமதி அளித்திருந்தனர். அங்குச் சிக்கலான சோதனைகள் மற்றும் மதிப்பீடு இருக்கவில்லை. எக்குடிமகனும் அல்லது

சோழர் கடற்படை2

Image
சோழர் கடற்படை கலப்பு பதவிக் கட்டமைப்பு கொண்டிருந்தது. அவர்கள் கடற்படை பதவிகளையும், தரைப்படையிலிருந்து பெறப்பட்ட பதவிகளையும் கொண்டிருந்தனர் சோழர் கடற்படையானது கடற்படை பதவி மற்றும் தரைப்படை பதவி முறைகளைப் பயன்படுத்தியது. தற்கால பதவி முறைகளும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, தரைப்படை கப்டன் கடற்படை லெப்டிணட் தரத்திற்கும், கடற்படை கப்டன் தரைப்படை கேணல் தரத்திற்கும் சமமானது. மற்றவை முற்றிலும் வேறுபட்டன. சில பதவித் தர ஒப்பீடுகள் பின்வருமாறு: மிகச்சிறந்த படைத்தலைவர் :சக்கரவர்த்தி - பேரரசன் கடற்படையின் கட்டளை அதிகாரி :ஜலதிபத்தி - கடற்படையின் கடற்படைத் தலைவருக்குச் சமம் போர்க்கப்பல்களின் படைத்தலைவர் : பிரிவு+ அதிபதி அல்லது தேவர்/ன் அல்லது நாயகன் - கடற்படை துணைத் தலைவருக்குச் சமம் போர்க்கப்பல்களின் படைப்பிரிவு படைத்தலைவர் : கனதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம் குழு படைத்தலைவர் : மண்டலதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம் கப்பல் படைத்தலைவர் : கலபதி - கப்டன் தரத்திற்குச் சமம் கப்பலின் ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி : காப்பு - ஆயுதங்களுக்களு

சோழர் கடற்படை 1

Image
சோழர் கடற்படை செயற்பாடுகள் பற்றிய ஆரம்ப குறிப்பு கி.பி. முதலாம் நூற்றாண்டு வெளி மூலங்களில் காணப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் (தற்போது பூம்புகார்) பற்றிய உரோமர் குறிப்பு எவ்வாறு அரசனின் கடற்படையினால் வாணிப கடற்கலங்கள் கடற்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டன என்றும் அது காவிரி ஆற்றின் வாயிலில் அமைந்த இயற்கைத் துறைமுகம் என்றும் விபரிக்கின்றது இக்கால கடற் ரீதியான செயற்பாடுகள் பற்றிய, சில அகழ்ந்தெடுக்கப்பட்ட மரத்தாலான அலங்காரத் தட்டு பழைய நகர் அருகில் இடம்பெற்ற கடல் நிகழ்வுகளின் ச ித்தரிப்பு தவிர்த்த சிறு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளன. ஆயினும், சோழ கடற்ச் செயற்பாடுகள்பற்றிய அதிகமான நுழைபுலம் செங்கடல் செலவிலிருந்து சேர்க்கப்பட்டது. இதில் குறிப்பிடப்படாத வர்த்தகர் பெறுமதியான பொருட்களுடனான வாணிப கடற்கலங்களுக்குத் துணையாகச் செல்லும் கப்பல்களின் செயற்பாடுகள் பற்றி விவரிக்கிறார். இந்த ஆரம்ப கால கடற்கலங்கள் ஒருவித ஆரம்ப நிலை நெருப்பு எறி கருவி அல்லது கவண் முறையிலமைந்த ஆயுதத்திணைக் கொண்டு காணப்பட்டது. சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும். இவற

சோழப் பேரரசு1

Image
வரலாற்றாளர்கள் சோழ ஆட்சியினை மூன்று புரிந்துகொள்ளக்கூடிய கட்டங்களாகப் பிரிக்கின்றனர். முதலாவது காலகட்டம் முற்காலச் சோழர்கள் காலம். இரண்டாவது காலம் இடைக்காலச் சோழர்கள் காலமாகவும், கடைசிக் காலகட்டம் சாளுக்கிய சோழர் காலமாகவும் உள்ளது. சோழர்கள் 9ம் நூற்றாண்டு அரைப்பகுதி முதல் 13ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தங்கள் வல்லமையின் உயரத்தில் காணப்பட்டனர் முதலாம் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராசேந்திர சோழன் காலத்தில் சோழப் பேரரசு ஆசியாவில் ஓர் இராணுவ, பொருளாதார, கலாச்சார சக்தியாக விளங்கியத ு 1010 முதல் 1200 வரையான காலப்பகுதியில் சோழரின் நிலப்பகுதிகள் மாலைதீவுகளிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி ஆறு வரை விரிவடைந்தது. இராஜராஜ சோழன் தென்னிந்தியா தீபகற்பத்தை வெற்றி கொண்டு, இலங்கையின் பகுதிகள் மற்றும் மாலைதீவுகளின் கைப்பற்றப்பட்ட பகுதிகளை இணைத்தார் இராசேந்திர சோழன் அனுப்பிய வெற்றிகரமான திட்டமிடப்பட்ட பயணம் வட இந்தியாவின் கங்கை ஆறு வரை சென்று, பாடலிபுத்திரம் மகிபாலவின் பாலப் பேரரசை தோற்கடித்தது. அவர் அவுத்திரேலியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான மலாய் தீவுக்கூட்ட பேரரவு மீது வெற்றிகரமா

விரதமே மகத்தான மருத்துவம்!

Image
விரதமே மகத்தான மருத்துவம்! இயற்கை விஞ்ஞான சித்தர் ஐயா நம்மாழ்வார் பாப்புரெட்டியார் கூறியவை.: இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, ''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். 'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fast

கண்டராதித்தர்

Image
கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை. கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தார். கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்

அரிஞ்சய சோழன்

Image
அரிஞ்சய சோழன் இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி. 956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து சுந்தர சோழன் அரியணையில் அமர்ந்தான்.

உத்தம சோழன்

Image
உத்தம சோழன், சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான்.

சுந்தர சோழன்

Image
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு  அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான். கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான். சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான். காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன்

விக்கிரம சோழன்

Image
விக்கிரம சோழன் (1122-1135) முதலாம் குலோத்துங்கனுக்கும் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூடப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. விக்கிரமசோழ உலா எனும் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம். வேங்கிப் போர் சாளுக்கிய மன்னனாகிய விக்கிரமாதித்தனின் மறைவுக்கு பின் சாளுக்கிய அரசர்கள் வலுவிழந்தனர். அது மட்டும் இல்லாமல் தங்களின் மரபு வழி  பூமியாகிய வேங்கியை இழக்க விக்ரம சோழனும் விரும்பவில்லை ஆதலால் தனது மகன் அபயகுலோத்துங்கனின் தலைமையில் ஒரு படையினை வெங்கிக்கு அனுப்பி வைத்தான். சோழர்களுக்குத் துணையாக சோட நாட்டுத் தலைவர்களாகிய கொனகண்டேஸ்வரனும் கிரிபச்சிமாவும் துணை இருந்தனர். இந்த போரின் மூலம் சோழ தேசம் எந்த எல்லையையும் விக்கிரம சோழனின் காலத்தில் இழக்காமல் இருந்தது. கலிங்கப் போர் குலோத்துங்கனின் காலத்திற்கு பின்பு இவன் காலத்திலும் கலிங்கப் போர் நடைபெற்றதாக குறிப்புகள் உள்ளன. முதலாம் குலோத்துங்கனின் காலத்திலும் விக்கிரம சோழனே படைகளுடன் சென்று

ஆதித்த கரிகாலன்2

Image
ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. இரண்டாம் ஆதித்தன் கொலை:குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம

விசயாலய சோழன்

Image
பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விசயாலய சோழன் ஆவான். விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான். திருப்புறம்பயம் தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செ

முதலாம் பராந்தக சோழன்

Image
முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான். இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்ட