Posts

Showing posts from March, 2018

மழவராயர்

Image
மழவர்------மழவராயர்------ மழவர் என்பார் மற்றொரு பழைய குலத்தார் ஆவர். அன்னார் சிறந்த படை வீரர். முடிவேந்தர்களும் அவர் உதவியை நாடினர். அக்குலத்தார்க்கும், தமிழ் இராச குலத்தார்க்கும், உறவு முறை இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று அக் குலத்தார் பெயரைத் தாங்கி நிற்கின்றது.       “மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே       மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே” என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால் உண்டாக்கப் பட்டதாகும். மழவர் பாடி என்பது மழபாடியாயிற்று.

கள்ளர்குடி(Royal blood)

Image
கள்ளர்குடி(Royal blood) தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விளங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோன்றல்களாகவும், தொடர்புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவும் மாற்றம் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் காணப்படுகின்றன. சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாட்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் மு

நாங்கள் பாண்டியர்

Image
(நாங்கள் பாண்டியர் என்று சொல்லுபவர்கள் இது போன்று கல்வெட்டுகளை காண்பித்தால் நன்றாக இருக்கும்)* *மாறவர்மன் என்றாலும் மறவர் பெருமான் என்று தான் அர்த்தம். மறவரை தவிர பாண்டியநாட்டு பூர்வீக குடி யாருமில்லை*. "மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27) "மறம்கெழு தானை அரசருள்ளும் அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர் மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர் புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338) "திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:13:5) "திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்"(புறம்:179)" "வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா" என்பது மன்னன் பாண்டியனை பற்றி காதலுற்ற மகளிர் பாடுவதாக "முத்தொள்ளாயிரம்" என்னும் சங்க கால நூலில் இடம்பெற்ற பாடல் வரி அது. மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர்கள்: *மாறன் *வழுதி *தென்னவன் *பாண்டியன்... என்பதாகும். மேலே பாடலில் "வன்கண்ணன்" என மன்னன் பாண்டியன் குறிக்கப்படுகிறான். சங்க கால நூல்களை ஆயும்பொழுது மறவன்தான் வன்கண்ணன்

தேவர் பட்டம்

Image
தேவர் பட்டம் மறவர்களைத் "தேவர்" என்று அழைப்பது சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி சோழநாட்டின் அரசர்களுள் இராஜராஜசோழத் தேவர்,இராசேந்திர சோழத் தேவர் என பெயர் வைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் இராமநாதபுரம் மறவர்களுக்கு 'செம்பியன்' என்ற பெயரும் உண்டு. 'செம்பியன்' என்றால் 'சோழன்' என்பது பொருள்.அதனாலேயே இச் செம்பிநாட்டு மறவர்கள் ஆதியில் சோழநாட்டை சேர்ந்தவர்கள் என்று 'அபிதான சிந்தாமணி' நூல்  கூறுகின்றது. சோழநாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வந்து குடியேறிய மறவர்கள் 'செம்பிய நாட்டு மறவர்கள்'. என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சேதுபதி மன்னர்கள் செம்பி நாட்டு பிரிவை சார்ந்தவர்கள். இவர்களின் நாடு 'கீழ் செம்பி நாடு' என்றும் 'வடதலை செம்பி நாடு' என்றும் கல்வெட்டுகளில் குறிக்கபட்டுள்ளனர். இராமநாதபுரம் வரும் முன் சேதுபதிகளின் முன்னோர் துகவூர் கூற்றத்துக் காத்தூரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்ப்பால் விரையாத கண்டனில் இருந்தனர் எனச் செப்பேடுகள் கூறுகின்றன.

சேதுபதிகளின் முன்னோர்கள்

Image
சேதுபதிகளின் முன்னோர்கள் யார் என்று ஆராய்ந்தால் அது சோழர்கள் ஆண்ட நிலபகுதியை நோக்கி அழைத்து செல்கிறது இவர்களுக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த பதிவில் விரிவாக காண்போம் பாண்டியர்கள் யார் என்றால் பெரும்பாலர்ருக்கு தெரியும் மறவர்கள் என்று கூறுவார்கள் சோழர்கள் யார் என்று கேட்டால்  தெரிவதில்லை காரணம் வரலாற்றை மறந்துபோய்விட்டோம் சரி சேதுபதிகள் யார் என்று கேட்டால் சற்றென்று மறவர்கள் என்கிறார்கள் இதுவே அவர்கள் முன்னோர்கள் யார் என்று கேட்டால் தெரியாது என் பயணம் இவர்களை நோக்கி தான் தொடரும்....... வரலாறு

சேதுபதிகள் சோழன் மறவரே

Image
சேதுபதிகள் சோழன் மறவரே ஆன்நிரைகளைக் கவர்ந்து செல்லல்வெட்சி ஆகும். அதனை மீட்டுச்செல்வது கரந்தை என்பர். படைத்தொழில் வலிமையுடையமறவர்களே இதில் ஈடுபடுவர். இம்மறவர்களுள் சிறந்தவர்தமிழ்நாட்டு மறவர் குடியினர் ஆவார். வெட்சி மறவரை ஆறலைப்பார், கள்வர்எனவும் கரந்தை மறவரை வயவர், மீளியர் எனவும் அழைப்பர்.  இதனைக்குறிப்பிடும் பதிவு வருமாறு “இவர் தொன்றுதொட்டேதமக்கியல்பாயுள்ள வீரச் செயலானும்வில்–வாள் முதலாய படைத்தொழில்வலிமையாலுமே தம்முயிர் வாழ்தலிற்சிறந்த தமிழ்நாட்டு மறவர்குடியினராவர். “வில்லேர் வாழ்க்கைவிழுத்தொடை மறவர்”  என்றார்அகநானூற்றினும் (35)  இம்மறவரையேவில்லேருழவர், வாளுழவர், மழவர், வீரர் முதலிய பல பெயர்களாற் கூறுவர்முன்னோர். இவர் நிரைகவர்ந்துஆறலைத்துக் குறைகொள்ளுங்கொடுந்தொழிலாற் றம்முயிரோம்பும்வெட்சி மறவர் எனவும் அவ்வெட்சிமறவரை முனையிற் சிதற வீழ்த்துஅவராற் கவரப்பட்ட நிரைகளை மீட்டுஆறலையர் மற்காத்துப் பிறருயிரோம்புமுகத்தாற் றம்முயிர் வாழுங் கரந்தைமறவர் எனவும் இரு திறத்தினராவர். இதனை “ஆகுபெயர்த்துத் தருதலும்”(பொ.புறத்.5)  என்னுந்தொல்காப்பியத்துநச்சினார்க்கினியருரையானும்“தனிமணியிரட்

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள்

Image
புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் பட்டப்பெயர் --------------------------------------- ஊர்ப்பெயர் ------------------------------------------------------------------------------ 1. சீவலவன் ----------------------- பொன்னமராவதி 2. கிழவன் --------------------------- நெரிஞ்சிக்குடி 3. பெற்றான் குவாவன் சத்ரு கேசரி --------------------- கோட்டியூர் 4. அதளையூர் நாட்டுப்பேரரையன் ----------------------- மாங்குடி 5. மதுரை மறவர் ------------------------ ஒல்லையூர் 6. ஐநூற்றுவ நம்பி பேரரையன் ------------------------ விரச்சிலை 7. கண்டுபோகாப் பேரரையன் --------------------------- விரச்சிலை 8. காண்டீபன் சோலைமலை அழகாமுரியர் ---------------------------- விரச்சிலை 9. அம்புராய பேரரையன் --------------------------- விராச்சிலை 10. பெரிய கண்டன் --------------------------- விரச்சிலை 11. சின்னக்கண்ணுண்டான் --------------------------- விராச்சிலை 12. ராமிண்டான் --------------------------- விராச்சிலை 13. வழிக்கால் நாட்டி விராச்சிலை 14. வணங்காமுடி சாந்தி மதுவன் ---------------------

சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள்

Image
சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் செப்பேடுகள் "அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி புற்ங்கண்டல் அல்லால் இனைபடை தானை அரசரோடு உறினும் கனைதொடை நாணும், கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை மருப்பின் திருந்து மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து ஓடா மறவர் பொருள் கொண்டு புன்செயின் அல்லதை அன்போடு அருள் புறம் மாறிய ஆரிடை அத்தம்.--"கடுங்கோ சேரமான்". பொருள்: சேனையணிகள் சூழ,அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்ச மாட்டர்கள்.சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைந்து அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர், அவர் மீது கணைதொடுப்பது தம் வீரத்துக்கு தகுதியற்றது என்று வெட்கம் கொண்டு நாணை தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல் அவ்வொலிகேட்டே அரசரோடு வந்த பெரும் படையினரும் பின் முதுகுகாட்டி ஓடுவர். அத்தகைய கொடிய ஆற்றல்கொண்டவர்,பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள். அவர்கள் ஆராவாரமாக வருவது கடிய துடியின் ஒலியோடு கேட்கும். வன்மைகொண்ட பார்வையும் வலி மிகுந்த கழுத்தும் உடைய கலைமானின் கொம்புகலைப் போல,அவர்களது மீச

ஆதிசங்கரபகவத்பாதாள்

ஆதிசங்கரபகவத்பாதாள் தனது திக்விஜயத்திற்கு பிறகு,மோக்ஷபுரி என போற்றப்படும், காஞ்சிமாநகரத்தை வந்தடைகிறார்;; அங்கே தனக்கென ஒரு ஆஸ்ரமத்தை அமைத்திக் கொண்டார்; தனது 32 வயதிற்குள் வியக்க தக்கும் வகையில் சாதனை புரிந்தார்.. அவரின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்:- பிறந்தது-- கலி வருடம் 2593(கி.மு 509);; சந்நியாசம் மேற்கொண்டது-- கலி 2603(கி.மு 499);; த்வாரகா மடத்தை அமைத்து அதன் தலைவராக ஹஸ்தமாலகரை நியமித்தது-- கலி 2611(கி.மு 491);; சீடர் தோடகாச்சாரியாரை தலைவராகக் கொண்டு ஜோதிஷ் மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2616(கி.மு 486);; பத்மபாதரை தலைவராக்கி கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2617(கி.மு 485);; சிருங்கேரியில் சீடர் சுரேஸ்வரை தலைவராக்கி சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார் ---கலி 2618(கி.மு 484);;;ஸர்வக்ஞ பீடமென காமகோடி பீடத்தை காஞ்சியில் உருவாக்கினார்--- கலி 2620(கி.மு 482);; ஆதி சங்கரர் காஞ்சியில் முக்தியடைந்தார்--கலி 2625(கி.மு477);; இவர் கைலாசத்திலிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களை கொண்டு வந்தார்;; அவைகள் இப்போதும் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:- முக்தி லிங்கம்--கேதார்நாத்;; வர லிங்கம்--நேபாளம்;;