Posts

Showing posts from September, 2016

திருமங்கையாழ்வார்

Image
திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவர்க்கும் மனைவி வல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.  பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது.  நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.  இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால்

இளஞ்சேட்சென்னி

Image
இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர். கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது. இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச்

குலோத்துங்க சோழன்

Image
சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம். இந்த ஊருக்கு திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே இராசேந்திரச் சோழன் இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான். கம்பகேசுவரர் திருக்கோயிலின் கோபுரம். இங்கு சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள். சௌராட்டிரர் பிற்காலத்தில் இங்கு காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா சமூகத்தைச்சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும்

மானம்பாடி

Image
மானம்பாடி கும்பகோணம்- திருப்பனந்தாள் பெருவழியில் சோழபுரத்தை ஒட்டி மானம்பாடி என்னும் சிற்றூர் ஒன்றுள்ளது. இங்குள்ள சிவாலயம் இராஜேந்திரனின் பிறிதோர் படைப்பான பழையாறை பஞ்சவன் மாதேவீச்சரத்தினை ஒத்தே காணப்படுகிறது. இவ்வழகிய கற்றளியில் தென்புரத்தில் நடராஜப் பெருமாளின் தேவகோஷ்டம் ஒன்றுள்ளது. இக்கோஷ்டத்தை ஒட்டிய சுவரில் மாமன்னன் இராஜேந்திர சோழனும் அவனது தேவியும் மற்றும் சுற்றத்தாரும் ஆடல்வல்லானை வணங்கும் கோலத்தில் காட்சி நல்குகின்றனர்.

கர்நாடகத்தில் நீர் பாசனம்

Image
பெரிய அணையில் இருந்து 200கி.மீ. தொலைவில் உள்ள சிறு சிறு குளங்களுக்கு கூட கர்நாடகத்தில் பெரிய குழாய்கள் மூலம் நீர் கொண்டுவந்து எவ்வாறு நிரப்புகிறார்கள் பாருங்கள்.... அவர்களிடம் ஆற்றின் பெருநீருக்குப் பதிலாக ,சிறுநீராவது கேட்டுப்பெற்று குடித்தாலாவது நீர் மேலாண்மை பற்றி சற்றேனும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறிவு வரும்.... இங்கு தாலி அறுப்பு போராட்டத்திலும், கைதிக்கு அபிசேகம் ஆராதனை செய்வதிலும்,தேர்தல் நிதி வேண்டும் என்று உண்டியல் குழுக்குவதிலும் நேரம் சரியாக இருக்கிறது...மக்களை பற்றி சிந்திக்க எங்கு நேரம் இருக்கிறது?!..... இந்த மாதிரி தண்ணி கெடைக்காம விவசாய நிலங்களை சுருக்குனா தானே மீத்தேன் திட்டம் நிறைவேற்ற முடியும்,கெயில் பைப் லைன் போட முடியும், கோக் பெப்சி கம்பெனி கட்ட முடியும், இன்னும் எல்லா இடங்களிலும் சிப்காட் நிறுவனம் ஆரம்பித்து நாசமா போக முடியும்.. அணை,ஏரி , குட்டை போன்றவை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்தபட்டது.. கிணறு,குளம் போன்றவை குடிநீர் ஆதரங்கள்... விவசாயத்துக்கு சேரவேண்டிய நீரை குடிநீருக்கு கொடுத்ததால் பணம் தின்னி நாய்கள் குடிநீர் ஆதாரங்களை அழித்துவிட்டனர்... விவச

செப்பேடுகள்

Image
செப்பேடுகள்:-------தமிழில் ராமாயணக் காவியத்தைப்பாடிய கம்பருக்குக் குலோத்துங்க சோழன் நன்கொடை வழங்கிய போது இவ்வாறு எழுதினான்."பூமி ஆகாசம் உள்ள வரைக்கும் --பொன்னி நதி உள்ள வரைக்கும் --குலோத்துங்க சோழ ராசா --கையெழுத்து நாட்டிக் --கம்பருக்குத் தந்தோம்!!!".

மருது பாண்டிய மன்னர்கள்

Image
இந்திய சுதந்திரத்துக்கு அன்றே  குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையிட்

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர்

Image
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[2] அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.     கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்     இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ

சங்கரன் கோயில் ஆடித்தவசுத் திருவிழா

Image
சங்கரன் கோயில் ஆடித்தவசுத்திருவிழா.........சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான். கொடியேற்று விழா ஆண்டுதோறும் ஆனிமாதம் சதுர்த்தி திதியும், மகம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், சங்க்கரநயினார் கோவில் திருத்தலத்தின் தென்பகுதியில் கோயில் கொண்டிருப்ப

சங்கரன் கோயில் சரித்திர வரலாறு

Image
சங்கரன் கோயில் சரித்திர வரலாறு -கல்வெட்டு தச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு 200-வது பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம். சாலிவாகன சகாப்தம் 945 ( கி.பி. 1022 ) கொல்லம் ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்க்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 கொல்லம் ஆண்டு 349-இல் சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்க்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார். பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார். இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது. உக்கிரபாண்டியர் இக்க

சங்கரன் கோயிலின் உள்ளே

Image
சங்கரன் கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு - 2002 ) மேலும் இவ்விடத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வில் யாரும் இன்றுவரை ஈடுபடவில்லை என்றும் 90 வயதுக்கு மேல் உள்ளோர் கூறுகின்றனர். புற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இதுதான் உண்மையான வரலாறு. புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை. எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்

சங்கரன் கோயில்

Image
சங்கரன் கோயில்... மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான். உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அர

நெல்லையப்பர் கோயில்

Image
நெல்லையப்பர் கோயில்...இக்கோயிலில் தினசரி பூசைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 10 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். மேலும் இங்கு ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று பிற திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. சிறப்புக்கள்     சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.     சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.     திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது     அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.,     சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.     32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.     இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.தங்கத் தேரும் உண்டு

சுந்தரேசுவரர்

Image
மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ..........சிறப்புகள்     சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.     சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.     சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.     சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் கு

புராணம்

Image
புராணம்.......... மீனாட்சியின் இளம் வயது கதை மிகவும் தெய்வீகமாக இருக்கும் அதே நேரத்தில் வீரம் ததும்புவதாகவும் இருக்கிறது. மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்க வில்லை. வாரிசு இல்லாமல் மனம் வருந்திய அந்த மன்னன், பிள்ளை வரம் வேண்டி பல்வேறு யாகங்கள் செய்தான். அந்த யாகத்தீயிலிருந்து மூன்று வயது குழந்தை மீனாட்சி தோன்றியது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததாக சரித்திரத்தில் சொல்லப்படுகிறது. மன்னன் இதனால் குழப்பமும் பயமும் அடைந்தான். அப்போது ஒரு அசரீரி ஒலி, மீனாட்சி எப்போது தன் துணையைக் காண்கிறாளோ அப்போது அந்தக் குறை காணாமல் போகும் என்று கூறியது. மீனாட்சி மிக செல்வச் செழிப்பான சூழ்நிலையில், வீரமான இளவரசியாக வளரத் தொடங்கினாள். பெற்றோரின் மறைவிற்கு முன்னரே, மிக இளம் வயதில் மதுரையின் அரசியாக செங்கோலோச்சத் தொடங்கினாள். இந்திரன் தவிர அனைத்து தேவர்களிடமும் போர் செய்து அதில் வெற்றி பெற்றாள். இறுதியாக சிவன் மீது போர்செய்ய கைலாயத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த சூழ்நிலையில், இறைவன் சிவனிடம் தன் மனதைக் கொடுத்தாள். கைலாசத்தில் போருக்காகச் சென்றபோது மீனாட்சி,

மீனாட்சியம்மன் கோயில் திருவிழாக்கள்

Image
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சித்திரை  சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்திராசூரன், விஸ்வரூபன் என்ற இருவரை இந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

Image
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

மீனாட்சியம்மன்

Image
மதுரை மீனாட்சியம்மன் கோயில்..........கலையழகு மிக்க மண்டபங்கள் கோயில் கிழக்கு வாயில் அஷ்டசக்தி மண்டபம் கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.     அஷ்டசக்தி மண்டபம்,     மீனாட்சி நாயக்கர் மண்டபம்,     முதலி மண்டபம்,     ஊஞ்சல் மண்டபம்,     கம்பத்தடி மண்டபம்,     கிளிக்கூட்டு மண்டபம்     மங்கையர்க்கரசி மண்டபம்,     சேர்வைக்காரர் மண்டபம்     திருகல்யாண கல்யாண மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன.

தேவர்

Image
தேவர் அய்யாவின் பெருந்தன்மை -----1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர் . அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார் ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் பெருமகனார் கேட்கிறார். அப்படி பசும்பொன் பெருமகனார் கேட்டதற்குக் காரணம், இன்று போல் 18 வயது வந்தோரெல்லாம் அன்று வாக்களிக்க முடியாது. யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் பெருமகனார் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “தேவரையா! எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன்

சிவலிங்கம்

Image
அம்மை அப்பனின் வடிவம் சிவலிங்கம் ..! "இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே" -ஆசான் திருமூலர்- சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழ்ச்சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டது. இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை)  வடிவமே. இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே. சிவமும்,  சக்தியும், நாதமும், விந்துவும் கலந்து சிவசக்தி, நாதவிந்தாகப் படைப்புக்கள் நடைபெறுகின்றன. இந்த அண்டங்கள் எல்லாம் சிவசக்தியின் வடிவாதலால் அதனை (Universe is in the form of Energy) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால், ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள். ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவவமாகிய ஓம் எனும் ஓங்காரத்தில் அகரம் சிவம், உகரம் சக்தி, மகரம் மலம், நாதம் மாயை, விந்து உயிர் ஆகும். இவற

ஒரு ரூபாய் நோட்டு

Image
1917ஆம் ஆண்டு வெளி வந்த இந்திய ஒரு  ரூபாய் நோட்டு 

மருதுபாண்டியர்களின் ஆயுதங்கள்

Image
மருதுபாண்டியர்களின் போர்க்களம் பற்றிய சுவாரசியமான செய்திகள்: மருது பாண்டியர்கள் ஈடுபட்ட போர்களில் பயன்படுத்திய ஆயுதங்கள் வளரி,எரியீட்டி,சுண்டுவில்,வேலலகு,கத்தி,சூலம்,சக்கரம்,வாலா,வேல்,வாள்,ஈட்டி,சமுதாடு( ஒரு வகைக் கத்தி),வில்-அம்பு,கட்டாரி,கோணவேல்,வில்லுருண்டை,வல்லயம்,நேரிசம்( எறிபடை=javelin) பிண்டிபாலம்,கல்வெடி,கயத்து வெடி,துப்பாக்கி,பீரங்கி,சஞ்சாலி( ஒரு வகைப் பெரிய பிரங்கி= Fungal)சரகோபி தனது போராளி இயக்கத்திற்கு வேண்டிய வெடிமருந்து ( வர்ணம்)ப் பொருட்களைத் தமது பட்டறையில் தயாரித்தனர்,அந்த இடம் சிவகங்கையின் தெற்கு எல்லை கீழ வாணியங்குடி கிராமத்தின் நடுவில் "வாணப்பட்டறை" எனுமிடம் உள்ளதுஅதன் அருகில் கொத்தளத்தார் மேடு எனக்கிராமத்தார் குறிப்பிடும் மேடு உள்ளது.இன்று வாணப்பட்டறையின் 22×15 காலடி எஞ்சிய செங்கற் கட்டுமான பகுதியினை மட்டும் உள்ளது.இங்கு வெடிமருந்து தொழில்சாலையும் இராணுவ நிலையும் இருந்திருக்க வேண்டும் .இதனால் தான் காளையார் கோவிலை தாக்கும் முன் கர்னல் அக்னியு சோழபுரத்திலிருந்து கும்பினிப்படையை வாணியங்குடியை நோக்கி செலுத்தி மருதுபாண்டியரின் வெடிமருந்து சாலையை அழித்

கள்ளர்களின் வரலாறு

Image
கள்ளர்களின் வரலாறு 1. சங்க இலக்கியங்களில் கள்ளர் என்ற சொல் மன்னர்களை அழைக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2. சீவக சிந்தாமணியில் 741-ம் செய்யுளுக்கு உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரை எழுதும்பொழுது கள்ளர் என்ற சொல்லுக்கு அரசர் என்றே பொருள் கூறியுள்ளார். 3. இது போன்ற எண்ணற்ற சங்ககால இலக்கியச் சான்றுகள் வரலாற்று நெடுகிலும் காணக் கிடைக்கின்றன. 4. 1311-ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து தாக்கியுள்ளனர். 5. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள். 6. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார். 7. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக் கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய மொழியில் சேக சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார். 8. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை

சமயப்பண்புகள்

Image
காசி இந்து பல்கலைக்கழகத்தில் அதன் துணை வேந்தர் உலகப்புகழ்வாய்ந்த அறிஞர் சி.பி .இராமசாமி அய்யர் தலைமையில் ” இந்து சமயப்பண்புகள் ” பற்றி அரியதோர் ஆங்கில உரையாற்றினார் தேவர் அய்யா . அதை கேட்டு வியந்த அறிஞர் சி.பி .இராமசாமி அய்யர் “உலகில் பெரும்பகுதியை ஆங்கிலம் ஆள்கிறது .ஆனால் அந்த ஆங்கில மொழியை எங்கள் தமிழ்நாட்டு பசும்பொன் சிங்கம் மூன்று மணிநேரம் அடக்கி ஆண்டுவிட்டது என்று உணர்ச்சிப்பொங்க புகழுரைத்தார்.

மனிதனும் தெய்வமாகலாம்

Image
 ·  மனித னும் தெய்வமாகலாம் அவனுடைய நடத்தையால் என்பதை நிரூபித்து காட்டியவர் தேவர் பெருமான் அவர்கள்!!!. காவி உடுத்திய துறவி விவேகனந்தர் என்றால், காவி உடுத்தாத கடவுள் பசும்பொன் தேவர்!!!. அறியாதவர்க்கு தேவர் ஜாதி!!!. புரியாதவர்க்கு தேவர் மனிதன்!!!. ஏழைகளுக்கு தேவர் தலைவர்!!!. முற்றும் துறந்த முனிவருக்கு தேவர் துறவி!!!. தேவரை நினைத்து வணங்குவோருக்கு அவர் கடவுள்!!!.

வெட்டறுவா தாங்கி வீசுகிற பூமி !!!

Image
வெட்டறுவா தாங்கி வீசுகிற பூமி !!!   வெள்ளைக்கொடி தூக்கி வந்தவனும் நீயே !!! -----போற்றிப் பாடடி பெண்ணே !!! தேவர் காலடி மண்ணே !!!