Posts

Showing posts from December, 2017

சேரமான் பெருமாள்

Image
சேரமான் பெருமாள் சேரமான் பெருமாளும் கொங்கு நாடும் சேரமான் கயிலை சென்றது.......... வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம் கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால் கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல் தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே (கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு 'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில், ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குட

கோயில் விமானம்

Image
தமிழ்நாட்டுக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டுள்ளது, எனவே அது ஷடங்க விமானம் என அழைக்கப்படுகிறது. அவை:     அதிட்டானம்     பித்தி     பிரஸ்தரம்     கிரீவம்     சிகரம்     கலசம் இந்த ஆறு அங்கங்களும் மனிதனுடைய பாதம், கால், தோள், கழுத்து, தலை, முடி (கிரீடம்) ஆகிய உறுப்புகளுக்கு இணையாகக் கொள்ளப்படுகின்றன. அதிட்டானம் விமானத்தின் ஆறு அங்கங்களில் முதலாவதாக அமையும் இந்த அதிட்டானம் ஒரு அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மேல்தான் மீதமுள்ள ஐந்து அங்கங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்படுகிறது. இந்த அதிட்டானம் பற்றிய செய்திகள் கட்டடக்கலை நூலான மானசாரத்தில் இடம் பெற்றுள்ளன. மானசாரத்தில் அதிட்டானம் 18 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை     பாதபந்த அதிட்டானம்     உரசுபந்த அதிட்டானம்     பிரதிபந்த அதிட்டானம்     குமுதபந்த அதிட்டானம்     பத்ம சேகர அதிட்டானம்     புஷ்பபுஷ்கல அதிட்டானம்     ஸ்ரீபந்த அதிட்டானம்     மச்ச பந்த அதிட்டானம்     ஸ்ரெனி பந்த அதிட்டானம்     பத்மபந்த அதிட்டானம்     கும்ப பந்த அதிட்டானம்     வப்ரபந்த அதிட்டானம்     வஜ்ரபந்த அதிட்டானம்     ஸ்ரீ

இராஜேந்திரசோழனின்பங்களிப்பு

Image
சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் கி.பி. 1012 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான். ஈழத்தின் மீதான படையெடுப்பு...முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்

இராஜேந்திரன்

Image
சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான். இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தயாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காலஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

கிள்ளிவளவன்

Image
கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன் கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் த்ன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான். சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன்

திருப்புறம்பயம் போர்

Image
திருப்புறம்பயம் போர் தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் ------ பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் திருப்புறம்பியத்தில் நடந்த போரில் சுமார் மூன்றரை லட்சம் வீரர்கள் இறந்தனர்.------ விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிரு

இராமநாதர்

Image
இராமநாதர். இராமேச்சுரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற அநுமார் திரும்பிவரக் காலந்தாழ்த்தமையால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த இலிங்கத்தை இராமபிரான் பூசித்தார். அவரே இராமநாதர் எனப் பெயர்பெறுவர். அநுமான் கொண்டுவந்த இலிங்கத்தை மூலலிங்கத்தின் வடபால் எழுந்தருள்வித்தார். அவரே விசுவலிங்கம் எனப் பெயர்பெறுவர். இறைவியாரின் திருப்பெயர் - மலைவளர் காதலி. இத்திருப் பெயரை ஞானசம்பந்தப்பெருந்தகையார் ``ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா`` என எடுத்து ஆண்டிருக்கின்றார். தீர்த்தம் - அக்நி தீர்த்தம், ராம தீர்த்தம், இலக்குமண தீர்த்தம், தனுக்கோடி முதலியன. இது சோதி லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. இத்தலத்தைப்பற்றி ``மறவாளிலங்கையிறைமகனை உதைத்த பழியால் மருண்டு, அரியன்று அறவாள் நேமியளித்தவனையருச்சித்தகன்ற அணிநகர்`` எனப் பரஞ்சோதியார், திருவிளையாடற் புராணம் அருச்சனைப்படலத்தில் கூறியுள்ளார். இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது என்னும் பெ

சங்ககாலத்திற்கு முன்பிருந்த சோழர்கள்

Image
சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள். சங்ககாலதிற்கு முன்பிருந்த சோழர்கள். (தமிழர் வரலாறு - History of Tamil ) புறநானூறு பாடல்களில் இருந்து பெறப்பட்ட சோழமன்னர்களின் பெயர்கள். தோராயமாக அறியபட்ட அவர்களின் ஆட்சி காலங்கள். ஏறி ஒலியன் வேந்தி 3023 B.C.E மாந்துவாழி C. 2980 B.C.E எல் மெய் நன்னன் C. 2945 B.C.E கீழை கிஞ்சுவன் C. 2995 B.C.E வாழிசை நன்னன் C. 2865 B.C.E. மெய் கியகுசி ஏற்று C. 2820 B.C.E. ஆய் குழி அகுசி ஏற்று C. 2810 B.C.E. திழகன் மாந்தி C. 2800 B.C.E. மாந்தி வேலன் C. 2770 B.C.E. ஆய் அடும்பன் C. 2725 B.C.E. ஆய் நெடுஞ செட் சோழ தகையன் C. 2710 B.C.E. எல் மெய் ஆக்குவன் (அ) கீழ் நெடு மன்னன் C. 2680 B.C.E. முடிகோ மெய் காளையன் தகையன் C. 2650 B.C.E. இளங்கோ கீழ் காளையன் தகையன் (எ) இலங்கீழ் நன்னன் C. 2645 B.C.E - இவருடைய சகோதரர் ஆய் கீழ் நன்னனால் கடம்பர் வழி தோற்றம். காளையன் குடின்ஞான் C. 2630 B.C.E. நெடுங்காளையான் தகயன் C. 2615 B.C.E. வேங்கை நெடுவேல் வரையன் C.2614 B.C.E. வேட்கால் குடின்ஞான் C. 2600 B.C.E. மெய்வேல் வரையன் C. 2590 B.C.E. சிபி வேந்தி C. 2580 B.C.E. பருநோ

நடராஜ தத்துவம்

Image
நடராஜ தத்துவம் என்பது ஆனந்த தாண்டவம் ஆடும் நடராசரின் தோற்றத்தினை விளக்குவதாகும். நடராசர் இந்துக் கடவுளான சிவபெருமானின் நடனத் தோற்றமாவார். இந்நடனக் கோலத்தில் சிதம்பரத்தில் பதஞ்சிலி முனிவருக்காக சிவன் ஆடினார். நடரசாசரின் தோற்றத்தைப் பற்றி பின்வரும் பாடல்கள் விளக்குகின்றன. கொடிமேல் இடபமும் கோவணகீளும் ஓர் கொக்கிறகும் அடிமேல் கழலும் அகலத்தினில் நீறும் ஐவ்வாய் அரவும் முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் முவிலைய வடிவேல் வடிவும் என் கண்ணுள் எப்போதும் வருகின்றனவே! குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே -திருநாவுக்கரசர் ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தமாக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே -திருமூலர் தோற்ற விளக்கம் நடராசரின் தோற்றத்தில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம் அண்ட சராசரங்கள், தெய்வ தத்துவங்களும் அடக்கம்.     திருமுகம்: எல்லையற்ற அழகும் இ

உருத்திரன்

Image
உருத்திரன் (Rudra) என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானால் அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ஆவார். இவர் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் அறியப்பெறுகிறார். உருத்ரன் படைக்கும் கடவுளான பிரம்மனின் மகன் என்று வாயுபுராணம் கூறுகிறது. பிரம்மா தனக்கு தன்னைப் போலவே ஒரு குழந்தை வேண்டுமென நினைத்த பொழுது ருத்தரன் அவர் மடியின் மீது தோன்றினார். அத்துடன் அழுதுகொண்டே இருந்தார். அதற்கு பிரம்மா காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வேண்டுமென அக்குழந்தை கூறியது. பிரம்மா அக்குழந்தைக்கு ருத்ரன் என்று பெயரிட்டார்.

சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை.

Image
சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை.பகவத் கீதையில் கிருஷ்ணர் ,"மாதங்களில் நான் மார்கழி என்றும்,நட்சத்திரங்களில் நான் திருவாதிரை "என்றும் கூறியுள்ளார்.அதில் இருந்து திருவாதிரையின் பெருமை விளங்கும்.அதே போன்று மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று சிவன் கோயில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பல்வேறு பலன்களையும் ,வளங்களையும் அள்ளித்தரும் வழிபாடாக உள்ளது.நடராஜரின் ஆருத்ரா தரிசனம் அவரது ஐந்தொழில்களான  ஆக்கல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடைபெறுகிறது.திருவாதிரை நாளில் சிவபெருமான் ஆடிய ருத்ர தாண்டவத்தைப்பார்த்து மகாவிஷ்ணு மெய்சிலிர்த்தார்.மார்கழி மாத திருவாதிரை அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்

Image
நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்பவை சிவபெருமான் பரதநாட்டியத்தின் கரணங்களான 108 கரணங்களையும் ஆடியதாகும். ஆணின் நடனம் தாண்டவம் என்று பெயர் பெறுவதால், இந்தக் கரண நடனங்கள் நூற்றியெட்டு தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆடல் வல்லான் கோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரத்தில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களையும் ஆடும் பெண் சிற்பங்கள் காணப்படுகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் இந்த நூற்றியெட்டு தாண்டவங்களில் என்பத்து ஒரு தாண்டவங்கள் காணப்படுகின்றன. நடன கலையில் தலைவனாக இருந்து பரத முனிவருக்கு பரதநாட்டியம் கற்பித்த சிவபெருமான், ஆனந்த தாண்டவத்திற்கும், பிரளய தாண்டவத்திற்கும் இடையே நூற்றியெட்டு தாண்டவங்களை ஆடுகிறார். இது நூற்றெட்டுத் தாண்டவபேதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. கரணங்களின் பெயர்கள்     தாளபுஷ்பபுடம்     வர்த்திதம்     வலிதோருகம்     அபவித்தம்     ஸமானதம்     லீனம்     ஸ்வஸ்திக ரேசிதம்     மண்டல ஸ்வஸ்திகம்     நிகுட்டம்     அர்தத நிகுட்டம்     கடிச்சன்னம்     அர்த்த ரேசிதம்     வக்ஷஸ்வஸ்திகம்     உன்மத்தம்     ஸ்வஸ்திகம்     பிருஷ்டஸ்வஸ்திகம்     த

முதல் தமிழ் சங்கம்.

Image
முதல் தமிழ் சங்கம். (தலைச்சங்கம் அல்லது முதல் சங்கம்) கி.மு. 5000 – கி.மு. 3000 வரை. பழம்பாண்டியமன்னனான “காய் சினவழதி” என்பவனால் முதல் சங்கம் நிறுவப்பட்டது. பழம் பாண்டி நாட்டின் தலைநகராக குமரியாற்றங்கரையில் வீற்றிருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். மன்னன் காய்சினவழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை, 89 பாண்டிய மன்னர்கள் அச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தமிழை ஆய்தனர். அவர்களின் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார் தென்மதுரையை தலைநகராகக் கொண்டு முதல் சங்கம் கி.மு. 5000 முதல் கி.மு. 3000 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புடன் வளர்ச்சி பெற்று வந்துதது. அக்காலத்தில் ஈழம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பக்றுளியாற்றிற்கும் குமரிக்கோட்டிற்கும் இடையே இருந்த பெரும் நிலப்பகுதியே பழம் பாண்டிய நாடு. இதன் தலைநகர் தென்மதுரை. ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள், மலைகள், ஆறுகள், காடுகள் கொண்ட நாடு பாண்டிய நாடு என அடியார்க்கு நல்லார் கூறுகிறார். தி

சேயோன்

Image
பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார். மத்திய அமெரிக்காவின் மாயன் நாகரிகமும், கிழக்காசிய நாடுகளில் ஜாவா, பாலி முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்து எழுதிய சர்.ஜான் மார்ஷல் என்பவர் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது என கூறுகிறார். மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அ

தொல்போர்க்குடி

Image
தொல்போர்க்குடி முக்குலமும் ..முக்குலம் தந்த மூவேந்தர்களும் (தொடர்--1) புறப்பொருள் வெண்பாமாலை பாடல் 35 ல் அய்யனாரிதனார் 13--குடிநிலை..கரந்தைப் படலத்தில் எழுதியுள்ளது(Text )  வருமாறு:-                                    கரந்தைப் படலம்       13  குடிநிலை      மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்...கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று..      மண்செறிந்த இந்த நிலவுலகினிடத்தே, பழைமையும் தறுகண்மையும்  கொண்டு, அவற்றின் சிறப்பாற்    பிறர் எல்லாம் அறியும்படியான புகழுடனே விளங்கும் மறக்குடியினது வரலாற்றை உரைப்பது, குடிநிலை    ஆகும்.         பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்        வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்         கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு         முற்றோன்றி மூத்தக் குடி பொருள்:-- பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்து கொண்ட தெளிந்து ஆரவாரிக்கும் ஊழிக்கடல்                        வெள்ளமானது விட்டு நீங்கியதாக, அதன்பின் முற்பட மலைதோன்றி மண்ணானது தோன்றாதிருந்த அந்தப் பழங்காலத்திலேயே, எல்லா மக்கள் குடியினும் முற்படத் தோன்றி, வாளாண்-- மையுடன்முதிர்ச்சிபெ

மார்க்கசீர்ஷம்

Image
மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும் இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி என ஆண்டாள் ,பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.

மார்கழிக்கோலங்கள்...

Image

மார்கழித்திங்கள்

Image
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

கன்னிகாதானம்

Image
மதுரை மீனாட்சியம்மன் கோயில்,புது மண்டபத்தில் உள்ள "கன்னிகாதானம்" காட்சியைக்கூறும் கற்சிலை.

சங்க இலக்கியங்களில் திருவரங்கம்

Image
  சங்க இலக்கியங்களில் திருவரங்கம் கோயில் ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதசுவாமி கோயில் இராஜகோபுரம். சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது. மாமுது மறையோன் வந்திருந் தோனை யாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் வீங்குநீ

அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில்

Image
அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில்,நாட்டரசன் கோட்டை-----கோயில் துவக்கத்தில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகள் மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்டிருந்தன. அதையடுத்து அம்மனுக்கு அலங்கார மண்டபம், அபூர்வ சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வெகு உயரமான ராஜகோபுரத்தை அடுத்து சொக்காட்டாஞ்சாரி  என்ற கர்ணக்கால் மண்டபம் அபூர்வ வேலைபாடுகளுடன் பொறியியல் நுணுக்கத்துடன் நகரத்தார்களால் எழுப்பப்பட்டது. கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. அம்மனுக்கு மர வாகனங்களும், வெள்ளிக்கேடயம், வெள்ளிக்குதிரை, வெள்ளி ரதம் ஆகியவை இருக்கின்றன.--------------------------------------------------சோழநாட்டில் பிறந்த கம்பன், மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ? என சோழ மன்னனைப் பழித்துப் பாடிவிட்டு, செட்டி நாட்டுப் பகுதிக்கு தனது இறுதிக் காலத்தைக் கழித்த கம்பன் நாட்டரசன் கோட்டையில் மாண்டான் என்று நம்பப்படுகிறது. அவனது சமாதிக் கோயில் இவ்வூரில் அமைந்திருக்கிறது. கம்பன் தான் இயற்றிய இராமகாதையை அரங்கேற்றிய பங்குனி மாதம் அத்த நாளில் இச்சமாதிக் கோயில் வளாகத்தில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம

ரமணமகரிஷி

Image
ரமண மஹரிஷி (டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி அத்வைத வேதாந்த நெறியை போதித்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற, உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம், ரமணாச்ரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ம் அகவையில் மானா மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தான

காஞ்சி காமாட்சியம்மன்

Image
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-------------அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்

காஞ்சி ஏகாம்பரம்

Image
திருக்கச்சியேகம்பம் - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும். இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம