Posts

Showing posts from August, 2015

ராஜ ராஜனின் வெற்றிகள்

Image
ராஜ ராஜனின் ஆட்சித்திறனுக்கு அப்பால் அவன் போரில் கண்ட வெற்றிகள் மட்டுமே எந்தப்பேரரசனும் கண்டிராத வெற்றிகள் எனத்துணிந்து கூறலாம்.உண்மையில் ஹானிபல்.சீசர்,அலெக்ஸாண்டர்,நெப்போலியன் ஆகியோரை மிஞ்சக்கூடிய அளவிற்கு ராஜ ராஜன் தான் சென்ற இடம் எல்லாம் வெற்றி கண்டான்.இவனுடைய படை மகா சேனை என அழைக்கப்பட்டது. காலாட்படை,குதிரைப்படை.யானைப்படை எண்ணற்றவை.20 லட்சம் வீரர்களும் அறுபதாயிரம் யானைகளும் எண்ணற்றக்குதிரைகளும் இருந்ததாகக்கூறப்படுகிறது.அதல்லாமல் 600 போர்க்கப்பல்கள் இருந்தன.அந்தக்காலத்தில் எவ்வித தொலைத்தொடர்புக்கருவிகளும் இல்லை.எப்படி இவர்களை நிர்வாகம் செய்தான் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.ஏதோ ஒரு சிற்றரசன் அவன் மெய்க்கீர்த்தியில் ராஜ ராஜன் வெற்றிளைத்தொகுத்து தந்துள்ளான்............................".காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி,............வேங்கை நாடும் கங்கை பாடியும்,..........தடிகை பாடியும் துளம்ப பாடியும்,..........குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்,..........முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,..........இரட்ட பாடி ஏழரை இலக்கமும்,.......... முன்னீர்ப் பழ்ந்தீவுப் பன்னீராயிரமும் கொண்டு , த

நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?

Image
"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன? நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே"

பூலித்தேவன் (1715–1767)

Image
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

பூழி நாடு

Image
பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்ட ி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.

பூலித்தேவன் தலைமுறை.

Image
தலைமுறை.....,பெயர்,...... ஆட்சியாண்டுகள்............ ........ 1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன்............... . 1378–1424 2 வடக்காத்தான் பூலித்தேவன் ..................1424–145 8 3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன்.. 1513–1548 4 சமசதி பூலித்தேவன் .......................... .........1548–1572 5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன்... ..........1572–1600 6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன்.......... 1600–1610 7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் ...............1610–1638 8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் ..........1638–1663 9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன்... .......1663–1726 10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன்.......... 1726–1767 வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.

புலித்தேவன் செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர்.

Image
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் மதுரை,திருவில்லிப்புத்தூர் ,திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்கள ுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும் வழங்கப்பட்டன.இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும். பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர். சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணி

பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர்

Image
  பூலித்தேவர்:.........  ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இ தனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர். பாளையத்திலிருந்து வரும் வருமானத

விடுதலைப்போராட்டத்தில் புலித்தேவனின் பங்கு

Image
விடுதலைப்போராட்டத்தில் பங்கு 1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப ்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது. 1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார். 1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மா

பூலித்தேவரின் மறைவு

Image
பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்

புலித்தேவன் செப்பேடு கண்டுபிடிப்பு

Image
விடுதலைப் போரை முதலில் துவக்கிய புலித்தேவன் செப்பேடு கண்டுபிடிப்பு விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் செப்பேடு, திருச்செங்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் புலித்தேவன். வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755ம் ஆண்டு புலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப ் படையை எதிர்த்த முதல் போர். புலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்துள்ளார். அச்செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேட்டை ஆய்வு செய்த ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் செ.ராசு பின்வரும் தகவல்களைக் கூறினார். சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர், பூலித்தேவன் என அழைக்கப்பட்டது என்றும், அவரது முழுப்பெயர் “காத்தப்ப பூலித்தேவன்’ என

பூலித்தேவர்

Image
பூலித்தேவர்தான் தென் பாளையப்பட்டுகளின் படைகளின் தலைவராக இருந்துள்ளார்.இவரது ஆதிக்கத்தில் மேற்கு நாட்டின் மறவர் பாளையங்களும் திருநெல்வேலியின் இதர பாளையங்களும் இருந்துள்ளது. திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் பாளையக்காரர்கள் அனைவரும் மதிக்கும் மிக மரியாதைக்குரியவராகவும் சர்வதிகாரம் பெற்ற சுதேச தலைவராக இருந்துள்ளார் எனவும் கூறுகிறார்.இன்றை பல வரலாற்று ஆய்வாளர்கள் தென்காசியின் ஆளுமை பாண்டிய மன்னனுக்கு பிறகு பூலித்தேவர்களிடமே இருந்து வந்தது என கூறுகின்றனர்.இத்தனையும் கூறும் ஆய்வாளர்கள் பூலித்தேவர் என்பது ”பூழியன்” என்ற பூழித்தேவர் என்ற பாண்டியரின் கிளை வழியினர் என்பதும் பாண்டியர்களின் வழித்தோன்றல் என கூற மறுப்பது ஏனோ? பூழியன் என்பது பாண்டியரின் வழித்தோன்றல்களான பாண்டியர்களேயாகும்.

இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்.

Image
இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்.......... 1.இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இந் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது. 2.பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது. 3.உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது. 4.காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது.

கள்ளர்குடி

Image
தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விளங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன. சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர் குலத்தவர் நா

கள்ளர்குடி

Image
தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விளங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன. சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர் குலத்தவர் நா

காந்தளூர் போர்

Image
காந்தளூர் போர்:..........ராஜ ராஜன் ஆட்சியில் நடந்த எண்ணற்ற போர்களின் வெற்றிகளில் அவன் காலக் கல்வெட்டுக்களில் புகழ்ந்து பேசப்படுவது காந்தளூர்ச்சாலைக் களமறுத்த செய்தியேயாகும்.இன்றைய திருவனந்த புரத்தின் ஒரு பகுதியே காந்தளூர்ச்சாலை.நகரின் பழம்பெரும் பகுதியும் அதுவே.இன்றும் அதன் நடு வீதி "பழஞ்சாலை" அல்லது "நெடுஞ்சாலை" என வழங்கப்படுகிறது.பெரிய கடை வீதியாகவும் வாணிகஸ்தலமாகவும் உள்ளது.தமிழருமதிக அளவில் வாழும் பகுதியும் இது தான்.சேர நாட்டுத்தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்த அரண்மனையும் ஆய் மன ்னன் மரபில் வந்த திருவாங்கூர் மன்னன் அரண்மனையும் இங்கு உள்ளது.அக்காலத்தில் இது சேர மன்னர்களின் தலை சிறந்த துறைமுகமாகவும் பெரிய வாணிகஸ்தலமாகவும் இருந்தது.மேலும் அவர்களது கடற்படையின் மைய தளமாகவும் செயல் பட்டது..ஆட்சித்தொடக்கத்திலேயே ராஜராஜனின் தென் திசைப்படையெடுப்பு காந்தளூர்ச்சாலையை நோக்கியே இருந்தது.இப்போருக்குக்காரணம் சேரனிடம் ராஜ ராஜன் அனுப்பியிருந்த அரசு நெறிக்கு மாறு பட்டு தூதனை அவன் உதகையில் சிறை வைத்ததேயாகும்.இச்செய்தி கேட்ட பேரரசனின் பெரும் படை தென் திசை காணாத அளவு சுழன்று அடித்தது.சோழ

தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளறையில் உள்ள சிவலிங்கம்

Image
தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப்பெரியது.அதற்கு ஆதி சைவரைக்கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்வித்த போது மருந்து இளகிப் பந்தனம் ஆகவில்லை.ராஜராஜன் மனம் நொந்தான்.அது சமயம் சைவ முனிவரான கருவூர்த்தேவர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து செவ்வனே பந்தனம் செய்வித்தார் என கருவூர் புராணம் சொல்கிறது.இக்கருவூரார் தஞ்சைப்பெரிய கோயிலின் மீது பதிகம் பாடியுள்ளார்.அப்பதிகம் ஒன்பதாம் திருமறையில் இடம் பெற்றுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்...........காமராஜர்

Image
மேலே நிற்பவர்கள்: இடமிருந்து வலம்...சோமசுந்தர பாரதியார்,சத்தியமூர்த்தி,குருசாமி முதலியார்,வேதநாயகம் பிள்ளை.............நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள்:வரதராஜுலு நாயுடு,வ ஊ சிதம்பரம் பிள்ளை,பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்...........கீழே அமர்ந்திருப்பவர்கள்:முத்துசாமி ஆசாரி,சீனிவாசன்,காமராஜர்

ஆதித்த சோழன்

Image
ஆதித்த சோழன்[871-907]திருப்புறம்ப ியப் போருக்குப்பின் கி பி 881ல் கடைசிப் பல்லவ மன்னன் அபராஜித்தனைக்கொன்று தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்றினான்.பின்னர் கொங்கு நாட்டையும் கைப்பற்றினான் என்று நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டகப் தொகைப் பாடல் தெரிவிக்கிறது............. .."சிங்கத்துருவனைச் செற்றவன்.......சிற்றம்பலம் முகடு.......கொங்கின் கனகம் அளித்த....... ஆதித்தன்".

இளஞ்சேட் சென்னி

Image
கரிகால் சோழனின் தந்தையான சோழப் பேரரசன் இளஞ்சேட் சென்னி மௌரியப் பேரரசன் அசோகனின் படைகளை முறியடித்து விரட்டினான்.அதுவே செருப்பாழிப்போர் ஆகும்.சோழ நாட்டு எல்லையிலேயே மௌரியப்படைகள் பல முறை நைய்யப்புடைக்கப்பட்டன.சேரப ்படைகளும் பாண்டியர் படைகளும் சோழருக்கு உதவின.இளஞ்சேட்சென்னி மௌரியப்படைகளைஅவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பாதபடி துளுவ நாட்டிற்கே துரத்திக்கொண்டு சென்றான்.துளுவ நாட்டிலேயே மௌரியர் தடம் அழியும ் வரைப் போரிட்டான்.பாழிக்கோட்டை தரைமட்டம் ஆக்கப்பட்டது.செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியின் பெரும்புகழ் இளையன் சேந்தன் கொற்றனாரால் பாடப்பட்டுள்ளது........... "எழு உத்தினி தோள் சோழர் பெருமகன்.......விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ்சென்னி.......குட ிக் கடனாகலின் குறைவினை சென்னி.......செம்புறழ் புறிசை பாழி நூறி.......வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.......கொன்ற யானை......."தமிழகத்தப் போரால் வெல்லமுடியாது என்று உணர்ந்த அசோகன் சமயபோர்வையில் உள்ளே நுழைய முற்பட்டான்.பௌத்த, சமண மதத்தினரை அனுப்பி வைத்தான்.

கோச்சடையான் என்னும் ரணதீரன்

Image
"கொங்கலரும் நறும் பொழில்வாய்க்.......குயிலோடு மயில் அகவும்.......மங்களாபுரம் என்னும் மாநகருள்.....மாரதரை எறிந்தழித்து".இப்பாடல் கோச்சடையானைப்பற்றியது.அரிகேசரி மாற வர்மனுக்குப்பின் பட்டம் தரித்த பாண்டியமன்னன் கோச்சடையான் என்னும் ரணதீரன். இவன் ஆட்சிக்காலம் கி பி 670 முதல் 710 வரை.இவன் தென்ன வானவன்.செம்பியன் ,சோழன்,மதுர கர்நாடகன்,கொங்கர் கோமான் என்னும் புகழ்ப்பெயர்கள் தாங்கியவன்.இவை அவன் வெற்றிகளைக்குறிக்கின்றன.மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தனை திருச்சிராப்பள்ளிக்க ு அருகில் உள்ள மருதூரிலும், மங்களாபுரத்திலும் [இன்றையமங்களூர்] போரில் வென்று புறங்காட்டி ஓடச்செய்தவன் கோச்சடையான்..........."பொருதூறும் கடல் தானையை.......மருதூரில் மாண்பு அழித்து"............எனப்பாடப்பெற்றுள்ளான்.மங்களூரில் அவன் வெற்றிகொண்டது மராட்டிய மன்னனைத்தான்.மாரதரை எனப் பாட்டில் வருவது மராட்டியரையே குறிக்கும்.இவர்கள் சாளுக்கியர்களே ஆவர் என பல சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆடி அமாவாசை

Image
  ஆடி அமாவாசை.............. அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்தது

கரி காலன் வடதிசைப் படையெடுப்பைப் பற்றி

Image
கரி காலன் வடதிசைப் படையெடுப்பைப் பற்றி சிலப்பதிகாரத்தில் இயங்கோவடிகள்.....................".இருநில மருங்கில் பொரு நரைப் பெறா அச்..........செருவெங்காதலின் திருமாவளவன்........புண்ணித்திசைமுகம் போகிய அந்நாள்............இமையவர் உறையும் சிமையப்பிடர்த்தலைக்..........கொடுவரி ஒற்றிக் கொள்கையில் பெயர்வோற்கு..........மாநீர் வேலி வச்சிர நந்நாட்டுக் கோன் இறைக் கொடுத்தக் கொற்ற பந்தரும்..........மகத நநாட்டு வாழ்வாய் வேந்தன்..........பகை புறுத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்..........அவந்தி வே ந்தன் உவந்தன்னக் கொடுத்த..........நிலந்தோங்கு மரபின் தோரண வாயிலும்"............கரிகாலனுடைய வெற்றியின் விளைவுகள் இங்கே கூறப்படுகின்றன.தென்னாட்டில் போர் செய்ய வாய்ப்புகள் குறைந்ததால் தோள்கள் தினவெடுத்து வட நாட்டிற்கு கரிகாலன் படையெடுத்ததாகக் கூறுகிறார் இளங்கோவடிகள்.கரிகாலன் இமயத்தின் நெற்றி,பிடரி இருபுறமும் தன் புலிப்பொறி நாட்டினான்.வச்சிர நாட்டு மன்னன் முத்துப்பந்தலும் ,மகத நாட்டு வேந்தன் பட்டி மண்டபம்மும் அவந்தி வேந்தன் தோரண வாயிலும் அளித்தான் எனக் குறிப்பிடுகிறார்.இங்கு வச்சிர அவந்தி மகத நாட்டு மன்னர்க

தேவருக்கு சொந்தமாக 32 கிராமங்கள்

Image
தேவர் இறக்கும் போது அவருக்கு சொந்தமாக 32 கிராமங்கள் இருந்தன.அவை:.......கமுதி வட்டம்.......உட்கடை கல்லுப்பட்டி,உட்கடை காவல் பட்டி.மேலராம நதி,தவசிக்குறிச்சி,பசும்பொன்,செய்யாமங்கலம்,கோழிகொத்தி,நல்லூர் கூறிக்கோட்டம்,கடமங்கலம்,அபிராமம் தெரு,பாக்குவெட்டி,ஆலையூர்,காட்டுப்பக்குளம்,பெரிய உடையனாதபுரம்,நல்லூர் நெடுங்குளம்,கீழமுடி மன்னார் கோட்டை,வலையமுக்குளம்,குறையறாசித்தான்,வேதபுரம் செட்டிக்குளம்,காட்டு சோடயேந்தல்,தனாமடை,மணியக்காரன்பட்டி,செம்பைக்குளம்,நகரத்தார் குறிச்சி,கீழராமநதி,காக்குகுடி,மண்டலமாணிக்கம்.......திருச்சுழி வட்டம்:.......சிட்ட வண்ணாங்குளம்,நரிக்குடி,புளிச்சகுளம்,வி,மணக்குளம்.......,அருப்புக்கோட்டைவட்டம்:.......மேல பார்க்குளம்............மொத்தம் 1832 ஏக்கர்

தேவரின் உயில்

Image
தேவரின் உயில் படி அவர் சொத்துக்கள் அனைத்தையும் உரிமையாக்கிக்கொண்டவர்கள் 16 பேர்...........வெள்ளைச்சாமித்தேவர்-கல்லுப்பட்டி,ராமச்சந்திர தேவர்-கல்லுப்பட்டி,நாகநாதத்தேவர்-தவசிக்குறிச்சி,ஜானகி அம்மாள்-கல்லுப்பட்டி,வடிவேலம்மாள்-குண்டு குளம்,ராமசாமி தேவர்-முதுகளத்தூர்.செல்லமுத்து தேவர்-உடைய நாத புரம் நல்லக்குட்டி தேவர்- பசும் பொன்,முத்துராசுப்பிள்ளை-கல்லுப்பட்டி,சின்னத்தம்பி தேவர் -பசும் பொன்,சன்னாசி குடும்பன் [ஹரிஜன்]- பசும்பொன்,வீரன் குடும்பன்[ஹரிஜன்]பசும்பொன்,பெருமாள்-அருப்புக்க ோட்டை,அய்யா சிவன்-வீர சோளம்,குருசாமி பிள்ளை- திருச்சுழி,முத்துச்செல்ல தேவர்- மதுரை...........இதில் வடிவேலம்மாள்,ஜானகி அம்மாள்,ராமச்சந்திர தேவர் ,செல்லமுத்து தேவர் தவிர மற்ற 12 பேர்களும் ஒன்று கூடி தேவர் எழுதி வைத்த சொத்துக்களை வைத்து" பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தர்ம பரிபாலன ஸ்தாபனம்" என்று ஒரு தர்மஸ்தாபனம் ஆரம்பித்தனர்.கமுதி தேவர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

குற்றப்பரம்பரை சட்டம்.......1915

Image
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டு வரப்பட்டது.பிரெஞ்சுப்புரட்சியின் விளைவாகப்பிறந்தது இந்த சட்டம்.ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இனக்குழுக்களைக்கண்டறிந்து அவர்களைக்கைது செய்து சிறையில் அடைப்பதே இந்த சட்டம்.வெளியில் விட்டாலும் தினசரி காவல் நிலையத்தில் கைரேகை வைக்க வேண்டும்.பஞ்சாபில் முதலில் அமுலுக்கு வந்தது.பிறகு தென் மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டது.தென் தமிழகத்தில் கள்ளர்கள்,மறவர்கள்,வலையர்கள்,குறவர்கள்,படையாட்சிகள்,வேப்பூர் பறையர்கள் மீது இந்த சட்டம் பாய்ந் தது. ஆனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக கள்ளர்கள் தான்.அதிலும் குறிப்பாக பிற மலைக்கள்ளர்கள்.இந்த சட்டப்படி அதில் குற்றம் சாட்டப்பட்ட இனத்தவர்கள் தினசரி காவல் நிலையத்தில் கைரேகை வைக்க வேண்டும்.அன்று படிப்பறிவில்லாதவர்கள் தான் அதிகம்..கைது செய்யப்பட்டவர்களை சுரங்க வேலைக்கும்,தொழிற்சாலைகளுக்கும் கூட வெள்ளையர்கள் பயன் படுத்திக்கொண்டார்கள்.1015ல் வந்த சட்டத்தின் மூலம் 1920 வரை 1772 பேர் கைது செய்யப்பட்டார்கள்.அதன் விளைவாக ஏப்ரல் 3,1920ல் பெருங்கமாநல்லூரில் இன்னொரு ஜாலியன் வால பாக் போன்ற கலவரம் வெடித்தது.அவ்

குற்றப்பரம்பரை சட்டம்

Image
1937 பொது த்தேர்தலில் வெற்றி பெற்றால் குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்குவதாக வாக்குக்கொடுத்திருந்தது காங்கிரஸ் கட்சி ஆனால் தேவரின் குரலுக்கு அதன் பிறகும் செவி சாய்க்கவில்லை.ஜூலை 27 1938ல் அருப்புக்கோட்டைக்கூட்டத்தில் பேசிய தேவரரசு அலுவலகங்களும் காவல் துறையும் தேசத்துரோகிகளாக செயல் படுகின்றன என்றார்."வீரம் மிக்க பரம்பரையில் வந்தவர்கள் நீங்கள்.நீங்கள் என்ன கோழைகளா?"எனப்பேசினார்.அவர் மீது வழக்குப்போடப்பட்டது, அதன் பிறகு திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் இது பற்றிய விவாதம் நடந்து அச்சட்ட த்தை நீக்க தீர்மானம் போடப்பட்டது. அதன் பின் ராஜாஜி மதுரை வந்த போது கம்பத்திலிருந்து பெரும் திரளாக மக்களை சேர்த்து ஊர்வலமாக வந்து அச்சட்டதை நீக்க்கோரி மனு கொடு.த்தார்.ஊர்வலத்தில் கூட்டம் 2 மைல் நீளத்திற்கு இருந்தது.அப்போது தான் தேவரின் செல்வாக்கு அனைவருக்கும் புரிந்தது.இருந்தாலும் ராஜாஜி அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. அரசு அதிகாரிகள் கள்ளர்கள் எவ்வளவு முரடர்கள் என கவர்னருக்கு தெரியப்படுத்த உசிலம்பட்டி அருகில் சிந்துப்பட்டி கிராமத்தில் ஒரு ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்தார்.கள்ளர்கள் காளைகளை அடக்குவதைப்பா

நேதாஜி.......தேவர்

Image
டிசம்பர் 1949 நேதாஜி பத்திரிகை தொடங்கி 11 மாதங்கள் ஆகி விட்டது.கல்கத்தாவில் இருந்து நேதாஜியின் சகோதரர் சரத் சந்திர போஸ் அழைப்பை ஏற்று தேவர் கல்கத்தா சென்றார்.அவரை சென்ட்ரல் நிலையம் வரை வந்து சசி வர்ணத்தேவர் வழியனுப்பினார்.அதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் தேவரைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை.தேவர் இறந்து விட்டார் என வதந்திகள் பரவின.ஆனால் தேவர் சீன எல்லைப்பகுதியில் தங்கியிருந்ததாகத் தெரிகிறது.வரும்போது கேரளா வழியாக மதுரை வந்தடைந்தார்.தோற்றம் மாறியிருந்தது.மீசையை எடுத்து விட்டு தலைமுடியை நீளமாக வளர்த்திருந்தார்.ஜனவரி23 1951ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தில் பேசினார்.அப்போது நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறார்.திபெத் சீன எல்லைப்பகுதியில் அவரைப்பார்த்து விட்டு அவருடன் இருந்தேன் என்றார். அச்செய்தி அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வெளியானது.அது ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆடிவெள்ளியில் அம்மன் அருள் பெறுவோம்!!!

Image
ஆடிவெள்ளியில் அம்மன் அருள் பெறுவோம்!!! ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் தனிச் சிறப்பு மிக்கவையாக சொல்லப்பட்டுள்ளன. இந்த நாட்களில் அம்மனுக்கு கூழ்வார்த்தும்; வேப்பிலை, மஞ்சள் அரைத்துப் பூசியும்; பாற்குடம், முளைப்பாரி எடுத்தும் வழிபடுவது சிறப்பான பலன்தரும் என்பது ஐதிகம். ஆண், பெண் இருபாலரும் தீமிதித்து வழிபடுவதும் உண்டு. ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது. இந்த நாட்களில் கோயில்களிலும் அம்மனுக்க ு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், பூஜைகள் செய்வர். இவற்றுள் தனிச் சிறப்பானது சாகம்பரி அலங்கார பூஜை. முழுக்க முழுக்க காய்கனிகளால் அம்மனை அலங்கரித்து நடத்தப்படுவதே இந்த பூஜை. இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால், ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம். தருமை ஆதீனக் கோயில்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் நவசக்தி வழிபாடு நடைபெறும். சிவாச்சாரியார்கள் ஒன்பதுபேர், ஒன்பதுவித மலர்களால், நவசக்தியரையும் ஒரே சமயத்தில் அர்ச்சிப்பார்கள். இதுவே நவசக்தி அர்ச்சனை. இந்த பூஜையில் சர்வபூதமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பல

தேவர்.........அண்ணாதுரை

Image
1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா ஆண்டு மதுரையில் ஒரு வாரம் விமரிசையாகக்கொண்டாடப்பட்டது.புலவர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். சேலத்தை சார்ந்த ஒரு சிறுமி சொற்பொழிவு ஆற்றினாள். அதன் பிறகு பசிய அண்ணாதுரை பழைய காலமாக இருந்தால் இந்த சிறுமியை ஞானப்பால் குடித்தவர் என்று பாராட்டி தூக்கி வைத்துக்கொண்டாடுவார்கள். மேலும் அவர் பேசிய கருத்துக்கள் திருஞான சம்பந்தரை சாடுவதாக இருந்தது.அதைக்கேட்ட தேவருக்கு கோபம் வந்தது.அங்கு கூடி யிருந்த பலருக்கும் அதே கோபம் அண்ணாதுரை மீது.ஆனால் அடுத்து பேசிய பி டி ராஜன் "கருப்புச்சட்டைக்காரர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அவர் யோக்யமானவர் இல்லை" எனக்கூறிவிட முடியாது என்றார்.அன்று தேவர் பேசாமல் ஏனோ விட்டு விட்டார்.அடுத்த நாள் தேவர் தமது சொற்பொழிவில் அண்ணாதுரையை கடுமையாக சாடினார்.பி டி ராஜனுக்கும் அறிவுரை வழங்குவது போல் அவர் பேச்சு அமைந்தது."தெய்வ வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்களை வெளியில் பேசச் சொல்லுங்கள்.இங்கு தெய்வ வீட்டில் அது பற்றி பேசக்கூடாது

தேவர்.......எம் ஜி ஆர்

Image
ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, ஆயிரம் வருடங்களுக்கு பின்பும் சரி, தேவர் மாதிரி சுத்த வீரர் பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை.அவ்வளவு பெரிய மேதையை நினைக்கும் போதே வணங்கத் தோன்றுகிறது...........எம் ஜி ஆர்

வள்ளலார் பாடல்களை வெளிக் கொணர்ந்த தேவர்:.

Image
வள்ளலார் பாடல்களை வெளிக் கொணர்ந்த தேவர்:...........வடலூரில் ஆண்டு தோறும் தைப்பூசத்திருவிழா நடக்கும்.ஆப்படி ஒரு விழாவின் போது வள்ளலாரின் அருட்பா பற்றி பேச தேவர் வந்திருந்தார்.மேடையில் அருகில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஓமாந்தூர் ராமசமி ரெட்டியாரும் அமர்ந்திருந்தார்.தேவர் பேச ஆரம்பிக்கும் முன்னர் ரெட்டியார் அவர் காதில் ஏதோ சொல்ல அதற்கு தேவர்" விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று பேச ஆரம்பித்தார்.ஒரு மணி நேரம் அருட்பாவில் மூழ்கி முத்தெடுத்தார்.அந்த உரையை மக்கள் அனைவரும்  கேட்டு ஆனந்தமாக ரசித்தனர்.இறுதியில் ரெட்டியாரை ஒரு பார்வை பார்த்து விட்டு ராமலிங்க அடிகளார் "ஓலைச்சுவடியில் எழுதி வைத்த இன்னும் 9 பாடல்கள் அச்சுக்கு வராமல் ரகசியமாக அவரது உறவினர் ஒருவர் வைத்துக்கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.அப்பாடல்களை அவரே வெளியிடுவாரா அல்லது நானே வெளியிடட்டுமா ?"எனக்கேட்க கூட்டத்தில் இருந்து பதில் இல்லை."அந்த பாடல்களை மடத்துக்கு தந்து வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள்" என வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் பதில் இல்லை".சரி நானே பாடுகிறேன்" என்று தேவர் அப்படல்கள