Posts

Showing posts from December, 2018

அண்ணல் பேயத்தேவர்

Image
அண்ணல் பேயத்தேவர் ========================= கர்னல் பென்னிகுக் தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் மறைந்திருக்கும் இரத்த சரித்தித்தை பற்றி யாருக்கும் தெரியாது. முல்லை பெரியார் அணை கட்டும் போது அதன் உடனிருந்து அனை கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மற்ற சமூகத்தவரை காட்டிலும் 4000 கும் மேற்பட்ட கள்ளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அந்த காலகட்டத்தில் வனவிலங்கு மற்றும் மலேரியா காய்ச்சலுக்கும் பலியானோர் எண்ணிக்கை கணக்கில்லா. இதில் அதிகம் உயிர் தியாகம் செய்தவர்கள் கள்ளர்களே, மேலும் கர்னல் பென்னி குக் துணையாகவும், பாதுகாப்பகவும் இருந்தவர்கள் கள்ளர்களே. அதில் முதன்மையனவர் அண்ணல் பேயத்தேவர். உசிலம்பட்டி வட்டாரம் அம்மன் முத்தன்பட்டி என்ற கிராமத்தில் 178 ஆண்டுகளுக்கு முன் 1840 இல் மொக்கையதேவருக்கு ஒரே மகனாக பிறந்தார் அண்ணல் பேயத்தேவர். அவரது தாயார் இவரை பெற்று எடுத்து கொடுத்த பெருமையோடு உடல்நல குறைவால் இறைவனடி சேர்த்துவிடுகிறார்.

துலுக்கரிடம் இருந்து சோழ தேசத்தை காத்த புதுக்கோட்டை தொண்டைமான்:-

Image
துலுக்கரிடம் இருந்து சோழ தேசத்தை காத்த புதுக்கோட்டை தொண்டைமான்:- சாதாரண சிப்பாயாக இருந்து படிப்படியாக மைசூரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஐதர் அலி மாபெரும் படைபலத்தை பெற்று தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினான். ஆங்கிலேயரும் ப்ரெஞ்சுகாரரும் அதிகாரப்போட்டியில் இருந்தப்போது ப்ரெஞ்சு அரசாங்கத்துக்கு பேராதரவை அளித்து வந்தான். கிபி 1779 ல் ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு காரர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவு பற்றி எரிய, போர் மேகங்கள் தென்னிந்தியாவிலும் சூழ்ந்தது. ப்ரெஞ்சு காரர்களின் மாகே துறைமுகத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், இதனால் ஐதர் அலிக்கு வெளிநாட்டில் இருந்து வந்துக்கொண்டிருந்த போர் தளவாடங்களின் வருகை நின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக ப்ரெஞ்சு காரர்கள் தலைமையில் பெரும் கூட்டணியை உருவாக்க எண்ணினார் ஐதர் அலி. கிபி 1780 , ஜுலை மாதம் பெரும்படை கொண்டு மைசூரில் இருந்து கிளம்பிய ஐதர், இரு வாரங்களில் பல குறுநிலமன்னர்களை வென்றான். அடுத்து மதுரையை தாக்கிய ஐதர் அலி 11 கிராமங்களை தீக்கிரையாக்கினான். நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்களை தன்னுடன்

ஸ்ரீ கந்தழீஸ்வரர் ஆலயம். குன்றத்தூர்

Image
ஸ்ரீ  கந்தழீஸ்வரர் ஆலயம். குன்றத்தூர் சென்னை. சோழர்காலக் கோயில் இது குன்றத்தூரானது பெரியபுராணம் படைத்த சேக்கிழார் பிறந்த ஊர் இது. ஒரு காலத்தில், சைவ,வைணவ, சாக்த, கொளமார வழிபாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்ட  இடம் குன்றத்தூர் ஆகும்.  'கந்து' என்றால் மரம். ஆதிகாலத்துமுதல், மரத்தைக் கடவுளாக பாவித்து வந்த மக்கள், பின்னர் அம்மரம் முதிர்ந்த பின் அதை மையமாக வைத்துக் கோவில் எழுப்பியுள்ளனர். அந்தக் கோயிலே கந்தழீஸ்வரர் ஆலயம். முருகன் பூஜித்த சிவன்: தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழித்து பின் மனம் அமைதி பெற திருத்தணி நோக்கி புறப்பட்டார் முருகன். குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது.  முருகன் கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில், வலது புறம் சேக்கிழாரின் கோவில் உள்ளது. இடப் புறம் அடுத்தடுத்து சிவ, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. சேக்கிழ