Posts

Showing posts from January, 2019

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்

Image
பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்! புலவர் முத்து வேங்கடேசன் பாண்டித்துரைத் தேவர் "செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!  செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். "சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார். அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார். சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அட

இரண்டாவது கல்வெட்டு இராஜராஜ சோழனின் கல்வெட்டு

Image
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மாவட்டத்தில் வாரந்தோறும் வரலாற்று ஆவணங்களை தேடி அதனை ஆவணப்படுத்தி வருகின்றனர். அதன்படி தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ள பழைய சிவன் கோயில் அருகில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இராயண்டபுரம் - தொண்டமானூர் செல்லும் வழியில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன்கோயில் அருகில் உள்ள பாறையில் சோழர்காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகளில் 3 சிதைந்த நிலையிலும் 3 நல்ல நிலையிலும் உள்ளன. இக்கல்வெட்டுகளைச் படித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் இக்கல்வெட்டுகள் சோழ அரசன் முதலாம் இராஜராஜனின் காலத்தில்  வெட்டப்பட்டுள்ளது என்றும் இக்கல்வெட்டு இங்குள்ள சிவன் கோயிலுக்கு விளக்கெரிக்க ஆடுகளை தானம் செய்த விவரம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் முதல் கல்வெட்டில் வாணகோப்பாடி பெண்ணைத் தென்கரையில் இராஜகண்டபுரத்தில்  உள்ள கானநங்கை என்ற கொற்றவை தெய்வத்திற்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகளை மும்முடிச் சோழ வாணகோவராயன் என்ற தொங்கல மறவன் என்ற இப்

அன்னபூரணி கப்பல்

Image
அட்லாண்டிக் கடலை கடந்த  தமிழ்க்கப்பல் ஆட்லாண்டிக் கடலை கடந்து இலங்கையி gvல் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க்கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக்கப்பல் இதுவே என தெரிகிறது. 1938ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக்கப்பல் வணிகம் செய்து வந்தனர். கொச்சின், ரங்கூன் முதல் அரபு நாடுகள் வரை அவர்களின் பாய்மரக்கப்பல்கள் சென்று வந்தன. 1938ல் வளவை மாரியம்மன் தீர்த்த்திருவிழாவில் கலந்துகொண்ட அன்னபூரணி எனும் கப்பலின் அழகில் மயங்கிய வில்லியம் ராபின்சன் எனும் அமெரிக்கர் அந்த கப்பலை விலைக்கு வாங்கினார். அதை பாஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஐந்து தமிழ் மாலுமிகளுக்கு வழங்கபட்டது கனகரத்தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் கிளம்பிய அக்கப்பல் மாலுமிகள் யாருமே அமெரிக்காவை முன், பின் கண்டதில்லை. சூயஸ் கால்வாய் வழியாக சென்று ஐரோப்பா வழியே அமெரிக்கா செல்லவேண்டும். கொலம்பஸின் கடல்பயணத்தை மிஞ்சிய தூரம். கொலம்பஸிடம் மூன்று கப்பல்களும் நூற்றுக்கணக்கான மாலுமிகள் இருந்தனர். இவர்கள் ஐந்தே பேர். அத்தனை தடைகளையும் தாண்டி பாஸ்டன் துறைமுகத்துக்கு மூன்ற

துளசி மகா நாடு

Image
துளசி மகா நாடு :பழங்கனாங்குடி,துவாக்குடி,காந்தளூர்,பொய்கைக்குடி ,இலந்தைப்பட்டி,நடராஜபுரம்,அசூர் இந்த ஏழு ஊர்கள் சேர்ந்தது...

மழவராயர்கள்

Image
மழவராயர்கள்  பட்டப்பெயர் சோழர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மழவன். மழவன்கோட்டை (மகழன்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மழவராயன், மழுவாளி, எனவும் வழங்கப்பட்டது. மழபாடி என்னும் தேவார சிவதல நகரத்தையும், மழவராயநல்லூர், மழவராயன்காடு, மழவரயன்குடிக்காடு, மழவராயன்பட்டி, மழவங்காடு (மழவனிக்காடு) மழவராயன்பேட்டை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி என்ற பட்டங்களை பெற்றனர். மழவரென்ற சொல்லுக்கு வீரர்,இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம்.மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், அதியமாங்களுக்கும் பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு(

ஒரே #நாளில் தூக்கிலிடப்பட்ட501கள்ளர்கள்

Image
******#ஒரே #நாளில் #தூக்கிலிடப்பட்ட501***** ****************#கள்ளர்கள்******************* மருத நாயகம் என்கிற யூசப் கானுக்கு கிபி1759ல் மதுரை கவர்னராக பிரிட்டிஸ் கவுன்சில் அறிவித்து, ஒட்டு மொத்த மதுரையும் பிரிட்டிஸ் கம்பெனியின் காலடியில் கொண்டு வர அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட மருதநாயகம் மதுரையை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், தென்னகத்தில் உள்ள மற்ற பாளையக்காரர்களை அச்சுருத்தவும், மிகவும் கொடுரூரமான நடவடிக்ககைகளை கையாளுகிறார். இதனை மருத நாயகத்துடன் இறுதி வரை பயணம் செய்த பிரெஞ்சு வீரர் M.Marchant வாக்குமூலமாக அளித்துள்ளார். அப்படி அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியது: மருத நாயகம் மதுரையின் கவர்னராக ஆனவுடன், பாளையக்காரர்களின் புரட்சியை அடக்க, மதுரையில் தன்னை எதிர்த்த மேலூர் நாட்டு கள்ளர் தலைவரையும், அவருக்காக சண்டையிட்ட 500கள்ளர்களையும்.....! ஒரே நாளில் மருதநாயகம் தூக்கிலிட்டார், இந்த கொடுரூரமான சம்பவம் அனைத்து தென் பாளையக்காரர்களையும் அச்சுருத்தியது, பல பாளையக்காரர்கள் புரட்சியை கைவிட்டு அமைதிக்கு திரும்பினர் என்றும் வாக்குமூலம் அளிக்கிறார். அந்த கள்ளர் தலைவரை மதுரை