Posts

Showing posts from February, 2021

போர்க்குடிகள்

Image
பிரிட்டீசார் பார்வையில் முக்குலத்தோர்:  100 தகவல்கள்..... கிபி 1891 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Census of india- Madras எனும் நூலில் போர்க்குடிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ் சாதிகள் முக்குலத்தோர் மட்டுமே.  கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார்கள் போர்க்குடிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். முக்குலத்தோரான கள்ளர்,  மறவர் மற்றும் அகமுடையாரின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கிபி 1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Caste and tribe's of southern india எனும் தெளிவாக தரப்பட்டுள்ளது. பிரிட்டீசார் தாங்கள் நேரில் கண்டவற்றை தங்களது புரிதலுக்கு ஏற்ப பதிவு செய்துள்ளனர். இந்நூலில் உள்ள சில அரிய தகவல்களை காண்போம்.. 1906 ஆம் ஆண்டை நோக்கி செல்வோம்.... 👉01) தஞ்சாவூர்,  திருச்சிராப்பள்ளி,  மதுரை ஆகிய மாவட்டங்களிலும் புதுக்கோட்டைப் பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படும் நடுத்தர உடல்வாகும்,  கறுத்த நிறமும் கொண்ட பழங்குடி மக்கள் கள்ளர்கள்.  👉02) பல்லவர் நாடான தொண்டை மண்டலமே கள்ளர்கள் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த நாடாகும். இந்த வகுப்பின் தலைவரான புதுக்கோட்டை மன்னர் இன்றும் தொண்டைமான் என அழைக்கப்படுகிறார். 👉03) 1891 கணக்கெடுப்

முதலாம் ராஜேந்திரன்

Image
 முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.....        இலங்கை மன்னரிடமிருந்து #இரத்தினக்கிரீடத்தை (பாண்டியமணிமுடி) கைப்பற்றும் சோழவேந்தா் #ராஜேந்திரசோழதேவர் படம் : அண்ணன் Deiva Arts   #அற்புதமானபடைப்பு .....படம் உபயம்.....அமர்நாத் அருள்