Posts

Showing posts from 2020

#உலகின்_முதலாவது #சிவன்_கோயில்...

Image
#உலகின்_முதலாவது  #சிவன்_கோயில்... சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.  நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ  அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம். 3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.  *தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம். மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும்   தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில். தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :- 1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. 2. உத்தரகோச மங்கை கோவில் சு

சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :-

Image
சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :- ****************************************************** இன்று சிதம்பரம் நடராசர் கோயிலின் நிர்வாகம் தங்களிடம் உள்ளது, சிதம்பரம் கோயிலில் முடி சூட்டுவதால் நாங்களே சோழ வம்சத்தினர் என அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இவர்களின் கூற்றை தொல்லியல் துறை பொருட்படுத்தவில்லை. தங்களை சோழர் வம்சம் என கூறிக்கொள்ளும் சூரப்பர்கள் இதுவரை பதில் அளிக்காத பல புதிர்களில் சிலவற்றை காண்போம். அக்னி குலம் :- ************** சோழர்கள் தங்களை காசிபர் வழியில் சூரிய குலத்தில் உதித்தவர்கள் என செப்பேடுகளில் குறித்துள்ளனர். ஆனால் பிச்சாவரத்தார்களோ தங்களை அக்னி குலம் என கூறிக்கொள்கின்றனர். சம்பு மகரிஷி செய்த யாகத்தில் சிவ பெருமானின் நெற்றியில் இருந்து வந்த நெருப்புத்துளி அந்த யாகத்தில் விழுந்து வீர வன்னிய ராஜா வந்ததாகவும் அவர் வழியில் தாங்கள் வந்ததாக கூறுகின்றனர். ஆனால் சோ