Posts

Showing posts from June, 2019

கவின்மிகு கம்போடியா

Image
# கவின்மிகு கம்போடியா -  3 # வரலாற்றின் முதல் வியட்நாமிய மன்னன் ஒரு தமிழ் மன்னன் ! புரட்சி செய்து நாட்டைப்பிடித்தப்பாண்டியன் ! இவையெல்லாம் குறிப்பிடும் மன்னன் ஒரு தமிழ் பாண்டியன் மன்னன் ஸ்ரீ மாறன்என்றால்  நம்ப இயலுமா ? ஆனால் ஆதாரங்கள் தருவது சீன வரலாறும் , பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர்களும் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும் .இனி விரியாக அந்த புரட்சிப்பாண்டியனைப்பற்றி ப பார்ப்போம் .  சம்பா எனப்படும் இன்றைய வியட்நாமில் ஸ்ரீமாறனின் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இது திருமாறன் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பாண்டிய மன்னனே என்று அறியப்படுகிறது  அந்தப்பகுதியில்  புனான்வம்சம்  என்ற பெயரில்  ஒரு சிறப்பான ஆட்சி இரண்டாம் நூற்றாண்டு முதல் இருந்ததை சீன இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. மேலும் புனான் என்பதற்கு இது வரை சரியானப்பொருள்  தெரியவில்லை.பனவன் என்ற பாண்டியனின் பட்டமோ அல்லது புனல் நாடு என்பதன் திரிபாகவோ இது இருக்கலாம். பிற்காலத்தில் அந்த இடத்தை தண்ணீர் நாடு என்றே அவர்கள் மொழியிலும் அழைத்தனர். மேலும் இந்திர விழாவுக்கு இணையான நீர் விழாவும் பெரிய அளவில் எடுத

திருப்பாச்சூர்

Image
கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - தமிழகத்தில் ஒரு ஆன்மீக மர்மம்.! திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது. இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவ பெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக

மகுடம் தாங்கிய மன்னாதி மன்னனைபற்றி

Image
👑மகுடம் தாங்கிய மன்னாதி மன்னனைபற்றி  இந்த பதிவு..  *தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார்  கோவில் தீபம்:* சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காகக் கொடுத்த நன்கொடைகள் ஏராளம் இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர். மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார். ‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவிலின் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார். ‘திட்டம் என்ன மன்னா?’ அமைச்சர் கேட்டார். ‘அதோ அந்தத்திரு விளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்திக் கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும

கள்ளர்_குல_இருக்குவேளிர்

Image
#பிற்கால_சோழ_சாம்ராஜ்ஜியம்********* [#கள்ளர்_குல_இருக்குவேளிர்... சோழர் என்ற வார்த்தையை கேட்டாலே உள் நெஞ்சில் இருந்து ஒரு உறுமல் சத்தம் எப்போதும் ஒலிக்கும். அப்படிபட்ட சோழ வரலாற்றை முறையான கல்வெட்டு ஆதாரங்கள் மூலமாக அவர் யார் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் முறையாக தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால் சுயநலமிக்க சில கோமாளி சொல்லாறாச்சி மூடர்களால் உண்மை வரலாற்றை தூங்க வைத்து விட்டார்கள். அவ்வாறு சோழர் வரலாற்றில் தூங்கிய விடையம் தான் கொடும்பாளூரை ஆட்சி செய்த இருக்குவேளிர் அரச மரபு. ஆம் மிகவும் வீரமிக்க இந்த இருக்குவேளிர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர் என்பது தமிழ் குடி மக்கள் 99%பேர்களுக்கு தெரியாது, ஏன் கள்ளர் குடிமக்களுக்கே தெரியாது. அப்படிபட்ட கள்ளர் குல கொடும்பாளூர் இருக்குவேளிரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே கொடும்பாளுர் நகரம் ‘கொடும்பை’ (கள்ளர்களின் பட்டப்பெயர்களில் கொடும்புறார் என்று இன்றும் உள்ளது)என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது பழங்காலத்தில் ‘இருக்குவேளூர்’ என்ற பெயர

திருமறைகாடு

Image
திருமறைகாடு தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறை

ராஜராஜ சோழன் வெட்டிய கவிநாடு ஏரியின் வரலாறு :

Image
ராஜராஜ சோழன் வெட்டிய கவிநாடு ஏரியின் வரலாறு : கவிநாடு ஏரி புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து விராலிமலை செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஏரி முதலில் கி.பி 872 ல் மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னரால் சிறிய அளவில் வெட்டப்பட்டு பராமரிப்பின்றி கிடந்தது பின்பு கி.பி 10 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் ஏரி #2000 ஏக்கர் அளவிற்கு வெட்டப்பட்டு மதகுகள் கட்டப்பட்டது இது மிகச்சிறந்த தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டது இது வேகமாக வரும் தண்ணீரை தன்னுள் அடக்கி பாசனத்திற்கேற்ப வெளியிடும் இந்த ஏரியினால் 5000 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் இந்த முன்னர் காலத்தில் கவிப்பால் ஏரி எனவே பெயர்  இருந்தது இது தற்போது கவிநாடு கண்மாய் என அழைக்கப்படுகிறது ங் மழைக்காலத்தில் இது ஏரியா இல்லை கடலா என வியக்கும் வகையிலே காட்சியளிக்கிறது முக்கியமான ஒன்று பதிவிட மறந்து விட்டேன் எனக்கு பிறகு   எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யார் இந்த ஏரியை யார்  பராமரிக்கிறார்களே அவர்களின் பாதங்களை என் தலையில் தாங்குவேன் என்று கல்வெட்டில் குறிப்பிட்டு இருக்கிறார் ராஜராஜ சோழன் #Stop_Methane #Stop_Hydrocarban #Sav

கொடுமுடிநாதர்

Image
கொடுமுடிநாதர் கோவில் தல வரலாறு: ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது. சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர்

நாகர்கள்

Image
#நாகர்கள் என்பவர்கள் யார்??       இந்திய வரலாற்றில் , புராணங்களில் அடிக்கடி கேள்விப்படும் பெயர் தான் #நாகர் இனம் . நாகர்கள் பற்றிய பல்வேறு கதைகளும் கட்டுக்கதைகளும் உண்டு. அதனால் நாகர்களை பற்றிய விவரங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன . ஆயினும் நாகர்கள் பற்றிய தெளிவான விவரங்களையும் பார்ப்போம்.        நாகர்கள் என்பவர்கள் இந்திய தேசத்தின் பூர்வ குடிகள் . #திராவிட , #ஆரிய கூற்றுக்கள் உண்மை என்றால் நாகர்களே பூர்வகுடி மக்கள் .  உலகில் பல்வேறு நாடுகளில் #நாகா என்ற பெயர்களில் பூர்வ குடி மக்கள் இருக்கிறார்கள் . அவர்கள் வேறு இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள நாகர்கள் வேறு.  நாகர்களை நகரத்தாரோடு (செட்டியார்) தொடர்பு படுத்தி ஆய்வு செய்திருக்கிறார்கள் . செட்டியார்கள் தமிழருக்கும் நாகர்களுக்கும் இடையில் வாணிபம் செய்து வந்தனர் . நாகர்களும் தமிழர்கள் தான் வேறு இனம் கிடையாது.      சைவர் , வைணவர் , நாகர் இது தான் மிகச்சரியான கூற்று . "சிவனை வழிபட்ட தமிழர் சைவராகவும் , விஷ்ணுவை வழிபட்டோர் வைணவராகவும் , நாகத்தினை வழிபட்டோர் நாகர்கள்" என்ற பிரிவின் பெயரால் அழைக்கப்பட்டனர் .

மருது பாண்டிய மன்னர்கள்

Image
"மருது பாண்டிய மன்னர்கள்" - மீ.மனோகரன் அவர்களின் புத்தகம் மாவீரர்களின் முழு வரலாறு அடங்கியது என்றே சொல்லலாம் பாளையக்காரப் புரட்சியின் தலைவர்கள்’ என்று, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் மருது சகோதரர்கள். இந்த இருவர்தான் வெள்ளையருக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து ஓர் இயக்கமாக்கி, வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படிப் பிரகடனம் செய்தவர்கள். 'வளரி’ என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை மருது பாண்டியர்களை யாரும் வெல்ல முடியாது என்பார்கள். அதனால்தான் மருது பாண்டியரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதும் வளரியைத் தேடித்தேடி அழித்தனர். அத்தகைய மாவீரர்களின் முழுமையான வரலாறு இது ஒரு வரலாற்றுப் புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டிய ஆவணம் இது. ஆவணக் காப்பக ஆதாரங்கள், தனியார் ஆவணங்கள், தீர்ப்புத் திரட்டுகள், ராணுவ நாட்குறிப்புகள், இலக்கியப் பதிவுகள், வாய்மொழி வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள், நூல்கள், இதழ்கள், அறிக்கைகள் என சுமார் 1,800 ஆவ

திருக்கட்டளை(திருக்கற்றளை) சிவன் கோவில்.

Image
கிபி - 871-907 காலக்கட்டத்தில் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட கள்ளப்பால் கற்குறிச்சி திருக்கட்டளை(திருக்கற்றளை) சிவன் கோவில். புதுக்கோட்டை மாவட்டம் #வல்லநாட்டின் வட எல்லைக்குட்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது ஆதித்த சோழன், பராந்தங்க சோழன் கல்வெட்டுகள் நிறைந்துள்ள கோவில். குடுமியான்மலை, நார்த்தாமலை போன்று காலத்தின் பழமையான  நினைவுகளை தாங்கியுள்ள இடமாக திருக்கட்டளை உள்ளது. #கள்ளப்பால்கற்குறிச்சி_திருக்கட்டளை #வல்லநாடு_புதுக்கோட்டை

அருள்மிகு இராமநாதர்

Image
இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதர் இராவணனைக் கொன்ற பெரும் பழி நீங்கும் பொருட்டு இராமபிரானால் எழுந்தருளுவித்து வழிபடப்பெற்ற கோயில் ராமேச்சுரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற அநுமார் திரும்பிவரக் காலந்தாழ்த்தமையால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த இலிங்கத்தை இராமபிரான் பூசித்தார். அவரே இராமநாதர் எனப் பெயர்பெறுவர். அநுமான் கொண்டுவந்த இலிங்கத்தை மூலலிங்கத்தின் வடபால் எழுந்தருள்வித்தார். அவரே விசுவலிங்கம் எனப் பெயர்பெறுவர். இறைவியாரின் திருப்பெயர் - மலைவளர் காதலி. இத்திருப் பெயரை ஞானசம்பந்தப்பெருந்தகையார் ``ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடிமயக்கா`` என எடுத்து ஆண்டிருக்கின்றார். தீர்த்தம் - அக்நி தீர்த்தம், ராம தீர்த்தம், இலக்குமண தீர்த்தம், தனுக்கோடி முதலியன. இது சோதி லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும். இப்பதிக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது என்னும் பெயர்பெறும். அங்கே இராமபிரான் தன் வில்லின் முனையால் தோண்டிய தீர்த்தம் தனுக்கோட

பஞ்ச ராமர் ஷேத்திரங்கள்

Image
பஞ்ச ராமர் ஷேத்திரங்கள் உலகெங்கும் பிரசித்தி பெற்ற இராமர் ஆலயங்கள் பல இருக்கின்றன. பெரும்பாலான பெருமாள் கோவில்களில் இராமருக்கென்று தனி சந்நிதிகள் இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் இராமபிரானுக்கென்று அருமையான பல கோவில்கள் உண்டு. இதில் கும்பகோணம் இராமஸ்வாமி ஆலயம், தனுஷ்கோடி இராமர் ஆலயம், மதுராந்தகம் ஏரிகாத்த இராமர், புன்னைநல்லூர் இராமர், நாகப்பட்டினம் வனபுருஷோத்தம இராமர், திருஐந்தடி இராமர், திருச்சேறை இராமர், திருதண்டை இராமர், திருவாலங்காடு இராமர், இஞ்சிமேடு இராமர், வெள்ளியங்குடி இராமர், தஞ்சை விஜயகோதண்ட இராமர், செஞ்சி பனப்பாக்கம் தசரத இராமர், திருப்புல்லாணி தர்பசயன இராமர் என்று எத்தனையோ அற்புதமான ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் உண்டு. இதில் ‘பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்’ என்று போற்றப்படும் இந்த ஐந்து கோவில்கள் மிக மஹிமை வாய்ந்தவை. அவை புகழ் பெற்ற தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் என்ற இந்த இடங்களின் இராமர் கோவில்கள் மிகச் சக்திவாய்ந்த ஆலயங்களாகும். இவை யாவுமே தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் அருள்மிகு தில்லை

உண்மையான அறிவியல்

Image
🐓ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்... 🐓விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்கு என்று அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம். 🐓சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிளறி அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும். 🐓மண்ணை கிளறி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது. 🐂ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். 🐂அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். 💊அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்னு சொல்லி மக்களை ந

திருச்செந்தூர் வரலாறு

Image
திருச்செந்தூர் (செந்தில் வேலவன் கடலிலிருந்து வெளிப்பட்டு அருளிய அதி அற்புத வரலாற்று நிகழ்வு): * நாயக்க மன்னர்கள் 'கடல் மார்க்கமாய் பாரத தேசத்திற்குள் நுழையும் போர்ச்சுகீசியருடன்' கடலில் முத்தெடுத்து ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பலதரப்பட்ட வர்த்தகங்களுக்கு ஒப்பந்தமொன்றினை (1639ஆம் ஆண்டில்)  மேற்கொள்கின்றனர். அம்முறையிலேயே 1648ஆம் ஆண்டு டச் நாட்டினருடன் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகின்றது. இதனைச் சிறிதும் சகியாத போர்ச்சுகீசியர் டச்சுப் படையினரைக் கடுமையாய்த் தாக்கி விரட்டுகின்றனர். * அதிகப் படைகளைத் திரட்டி மீண்டும் பாரத தேசம் திரும்பும் டச்சுப் படையினர் போர்ச்சுகீசியரின் பகுதிகளுள் பலவற்றைக் கைப்பற்றியதோடு நில்லாமல் திருச்செந்தூர் திருக்கோயிலையும் கையகப் படுத்துகின்றனர். திருமலை நாயக்கர் எவ்விதம் வலியுறுத்தியும் ஆலயத்திலிருந்து வெளியேற அவர்கள் மறுத்து விடுகின்றனர். * நாயக்க மன்னர் சிறிய படையொன்றினைத் திரட்டி டச்சுப் படையினரை எதிர்த்தும் வெற்றி கிட்டாது போகின்றது. சிறிது காலம் சென்றபின், டச்சுப் படையினர் தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களோடு,  தங்கமென்று

தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார்

Image
120 ஆண்டுகளுக்கு முன் இந்தியை எதிர்த்த முதல் தமிழர்  'தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார் சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும்.  1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் நினைவு கூறி  வருகின்றனர். 1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு   என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும். ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும். பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர்.  சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும

திருமயம்_கோட்டை...#கள்ளர்_பற்று...

Image
#திருமயம்_கோட்டை...#கள்ளர்_பற்று... திருமயம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது,திருமயம் கோட்டை. மிகவும் பழமையான கோட்டைகளில் திருமயம் கோட்டையும் ஒன்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இந்த கோட்டையின் கிழக்கு சுவர் பகுதியில் கிபி12(அ)13ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையினரால் படியெடுத்து வெளியிடப்பட்டது. அதில் #கள்ள_பற்றுள்_தடிக்கு_தேவர்_கன்மி_கண்கானி என வருகிறது. அதாவது கள்ளர் பற்றில் தடிக்கு தேவர் ஊழியர் கண்கானியின் நிலம் விற்றதாக தெரிகிறது. இந்த கல்வெட்டின் காலம் மூலமாக திருமயம் கோட்டையின் காலமும் அதன் பழமையும் நன்றாக தெரிகிறது. நன்றி தமிழக தொல்லியல் துறை அன்புடன் சோழபாண்டியன் ஏழுகோட்டை நாடு