கவின்மிகு கம்போடியா

# கவின்மிகு கம்போடியா -  3 #

வரலாற்றின் முதல் வியட்நாமிய மன்னன் ஒரு தமிழ் மன்னன் !
புரட்சி செய்து நாட்டைப்பிடித்தப்பாண்டியன் !

இவையெல்லாம் குறிப்பிடும் மன்னன் ஒரு தமிழ் பாண்டியன் மன்னன்
ஸ்ரீ மாறன்என்றால்  நம்ப இயலுமா ? ஆனால் ஆதாரங்கள் தருவது சீன வரலாறும் , பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர்களும் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும் .இனி விரியாக அந்த புரட்சிப்பாண்டியனைப்பற்றி ப பார்ப்போம் .


 சம்பா எனப்படும் இன்றைய வியட்நாமில் ஸ்ரீமாறனின் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இது திருமாறன் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பாண்டிய மன்னனே என்று அறியப்படுகிறது 
அந்தப்பகுதியில்  புனான்வம்சம்  என்ற பெயரில்  ஒரு சிறப்பான ஆட்சி இரண்டாம் நூற்றாண்டு முதல் இருந்ததை சீன இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது.

மேலும் புனான் என்பதற்கு இது வரை சரியானப்பொருள்  தெரியவில்லை.பனவன் என்ற பாண்டியனின் பட்டமோ அல்லது புனல் நாடு என்பதன் திரிபாகவோ இது
இருக்கலாம். பிற்காலத்தில் அந்த இடத்தை தண்ணீர் நாடு என்றே அவர்கள் மொழியிலும் அழைத்தனர். மேலும் இந்திர விழாவுக்கு இணையான நீர் விழாவும் பெரிய அளவில் எடுத்தனர். தமிழ் புத்தாண்டான சித்திரையையே அவர்களும் புத்தண்டாகக் கொண்டாடுகின்றனர்

தென்கிழக்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே, தாய்லாந்திலும் 1ம் நூற்றாண்டின் அப்போதைய புனான் வம்ச ஆட்சி  தொடக்கம் கிபி 13ம் நூற்றாண்டின் கெமர் பேரரசு வரையில் தமிழகத்தின்  கலாசாரம் மற்றும் மத வாரியான தாக்கம் பெருமளவு இருந்து வந்துள்ளது

1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வ பெயர் சயாம் ஆகும். பின்னர் இது தாய்லாந்து எனப்பட்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என
அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்துக்கு மாற்றப்பட்டது.

சுமார் 1300ஆண்டுகளுக்கு முன்னர்ஒரு பாண்டிய மன்னன்
வியட்நாம்நாட்டை ஆண்டிருக்கிறான் ! அவன்தான்வியட்னாமிய  வரலாறு அறிந்தமுதல் வியட்னாமிய மன்னன்.        அவனுடைய பெயர்ஸ்ரீமாறன் . தமிழில்இதை திருமாறன்என்று சொல்லலாம்.

வியட்னாமில்கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழைய சமஸ்கிருதகல்வெட்டு,
 இவனை ஸ்ரீமாறன்என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி,ஆண்டு முதலிய விவரங்கள்
கிடைக்கவில்லை .கல்வெட்டின்பெரும்பகுதி அழிந்துவிட்டது .
ஆனால் எழுத்து அமைப்பின்அடிப்படையில் இது கி. பி .
இரண்டாம்நூற்றாண்டைச்சேர்ந்ததாகபிரெஞ்சுவரலாற்று அறிஞர்கள்
கருதுகின்றனர் .
வியட்னாமில் வோ -சான்என்னும் இடத்தில்ஒரு பாறையின்
இரண்டு பக்கங்களில் ( VO–CHANH ROCK INSCRIPTION)
இது செதுக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீமாறன் என்ற அரசனின்குடும்பம் செய்தநன்கொடையை ( தானத்தை)
கல்வெட்டு குறிப்பிடுகிறது.பாறையின் ஒரு பக்கத்தில் 15
வரிகளும் மறு பக்கத்தில்ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர  மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப்பகுதி பாடல் வடிவிலும் ஏனையவரிகள் உரைநடையிலும்உள்ளன .

கிடைத்தவரிகளிலும் கூட சிலசொற்கள் அழிந்துவிட்டன.

கல்வெட்டின் சில வரிகள் :-

. . . . . ... ப்ரஜானாம்
கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . .
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . .
வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . ..
ன . . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம்
ஸ்வகன . . .. ..ச . . . . . . . . . .. ..

இந்தக் கல்வெட்டில் ,தனக்குச் சொந்தமானவெள்ளி , தங்கம் , தானியக்குவியல் மற்றுமுள்ளஅசையும் ,அசையா சொத்து வகைகள்அனைத்தையும்தமக்கு நெருங்கியமக்களுக்கு பொதுவுடமையாக்குவதாகமன்னன் அறிவிக்கிறான்.
எதிர்கால மன்னர்கள்இதை மதித்து நடக்கவேண்டும் என்றும்ஆணை பிறப்பிக்கிறான்.

இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . ..

.. . .என்று பாதியில்முடுகிறது கல்வெட்டு.இதில் முக்கியமான சொற்கள்
“ ஸ்ரீமாற ராஜகுல ”
என்பதாகும் . இந்ததிருமாறனைக்குறித்து மிகவும்
குறைவானதகவலே கிடைத்துள்ளது .

ஆனால் வியட்னாம்,லாவோஸ் ,கம்போடியா ஆகிய
நாடுகளில் 1300ஆண்டுகளுக்கு நிலவியதமிழ் சாம்ராஜ்யத்தின் முதல்
மன்னன் இவன்என்பதை சீனர்களின்வரலாறும்  உறுதி
செய்கிகிறது    .திருமாறனை சீனவரலாற்று ஆசிரியர்கள்   கியு லியன் (KIU LIEN ) என்றும்  இவன்  ஹான்வம்சம் (HAN DYNASTY )  சீனாவை
ஆண்டபொழுது அவர்களின்கட்டுபாட்டில் இருந்த ‘  சம்பா’தேசத்தில்புரட்சி செய்து ஆட்சியைக்கைபற்றியதாகவும்எழுதிவைத்துள்ளனர் .

சம்பா (CHAMPA )என்பது தற்போதையவியட்னாமின்ஒரு பகுதியாகும் . மன்னனின்குடும்பப் பெயர் கியு (KIU )என்றும் மன்னனின் பெயர்
லியன் ( LIEN) என்றும்எழுதிவைத்துள்ளனர் .
இவன்காங்ட்சாவோவின் (KONGTSAO ) புதல்வன் என்றும்தெரிகிறது .

தென்கிழக்கு ஆசியா முழுதும்முதல்முதலாகதொல்பொருள்
ஆராயச்சி நடத்தியபிரெஞ்சுக்காரர்கள்ஸ்ரீமாறனும் ,கியு லியானும் ஒருவர்தான்என்று உறுதிசெய்துள்ளனர்.
கி. பி . 137 ல்சீனர்களை எதிர்த்துக் கலகம்துவங்கியது . ஆனால்
கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன்ஆட்சி ஏற்பட்டது .

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர்ஆண்ட மன்னர்களில்பெயர்கள் எல்லாம்சீனமொழி வாயிலாக உருமாறி  கிடைப்பதால்அவர்களின் உண்மையானபெயர்கள் தெரியவில்லை.எல்லா மன்னர்களின்பெயர்களும் பான் (FAN)என்று
முடிவதால்இதை வர்மன் என்று முடிவுசெய்துள்ளனர்
.ஏனெனில்இடையிடையேயும் ஆறாம்
நூற்றாண்டுகளுக்குப்பின்னரும் மன்னர்களின்பெயர்களுக்குப் பின்னால்‘ வர்மன் ’ என்ற பெயர்தெளிவாக உள்ளது .
இதில்வியப்பு என்னவென்றால்தமிழ்நாட்டில் கிடைத்தசெப்புப் பட்டயங்களிலும்
பாண்டியன் வம்சாவளியில்ஸ்ரீமாறன் , வர்மன் என்றஇரண்டு பெயர்களும்கிடைக்கின்றன .
இந்தோனேசியாவுக்குச்சொந்தமானபோர்னியோ தீவின்
அடர்ந்தகாட்டிற்குள் மூலவர்மன்என்ற மன்னனின்சமஸ்கிருதக்
கல்வெட்டு கிடைத்துள்ளது.

தமிழ் இலக்கியங்களில்    இடை  சங்கத்தின் கடைசி மன்னனாக திருமாறன் குறிப்பிடப்படுகிறான் .அப்போது வந்த  கடற்ககோளின் அழிவினால்
தற்போதைய மதுரைக்கு அரசை மாற்றியதாகக்கூறப்படுகிறது .
அந்த சமயத்தில் இந்த சம்பா நட்டு ஆளுமை ஏற்பட்டிருக்கலாம் .
வேறு இரண்டு ஸ்ரீமாறன்களின் குறிப்பும் கிடைக்கிறது .இதில் யார் வியட்நாமை ஆண்ட முதல் மன்னன் என்ற ஆய்வு தேவை .

வியட்நாமின் அடுத்த ஒரு மன்னனாக பத்திரவர்மன் அறியப்படுகிறார் .அவரது காலம் கி பி 349-361CE.அவரது தலை நகரம் சிம்ம புரம் ஆகும் .அது இப்போது
Tra Kieu  டிரா குயூ என்று அழைக்கப்படுகிறது .அவர் அங்கேபல கோயில்களை எழுப்பியதாக கூறப்படுகிறது .அவர் சிறப்பாக சம்பாவை ஆண்டுவிட்டு தனது   கங்கைக்கரையில் சென்று தவ வாழ்க்கை  மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது

சாவகம் (ஜாவா Java) என்பது தற்போது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும்
 கி.பி.114ல் ஜாவாவை ஆபுத்திரன் என்ற அரசன் ஆண்டதாய் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஜாவாவை “ஆபுத்திரநாடு” என அழைக்கப்பட்டது. மனிமேகலை ஜாவா நாட்டிற்கு சென்ற சமயம் அங்கு தமிழ் மொழிப்பேசப்பட்டது என கூறப்படுகிறது.
. சாவகம் ஒரு காலத்தில் தமிழாட்சிக்குட்பட்டிருந்தமைக்கு சான்றாக இன்றும்
சிலபட்டிணங்கள்பாண்டியன்,மதியன்,புகார்,பாண்டிவாசம், மலையன்கோ,கந்தழி செம்பூட்செய்,மீனன் காப்பு என்று தமிழ்ப்பெயர்களில் வழங்கி வருகிறது.
இனி ஆங்கில விக்கி கூறும் செய்திகளைப்பார்க்கலாம் :

Sri Mara (Tamil: திருமாறன், Thai: ศรีมาระ fl. 137 or 192 AD) was the founder of the
Tamil kingdom of Champa.[1][2]:43  He is known in Chinese records as Oū Lián

(區連), or Zhulian, which in Vietnamese pronunciation is Khu Liên (also 區連).

Attempts have also been made to identify  Sri Mara with Fan Shih-man of Funan (circa

230 CE).[3][4][5] on a stele recorded as Sri Mara (Chinese 释利摩罗).[6]

He was born in Tượng Lâm (Vietnamese pronunciation of Chinese 象林, in what is

today Quảng Nam Province of Vietnam) an area of tension between the Han Dynasty

and the natives of Lâm Ấp (Vietnamese pronunciation of Chinese Lin Yi 林邑, the

precursor to Champa). In 137 or 192 AD,[7] he defeated the Chinese prefect and

declared himself king of Lin-yi.[8]:323 This is considered the official founding

of Champa, though Cham legend dates the  ounding to be much earlier.[9]

In 248, he led the Cham in looting and razing Jiaozhi and Cu'u-cho'n. The Cham

then defeated the fleet sent to repulse them, at Bay of the Battle.

https://en.wikipedia.org/wiki/ Khu_Li%C3%AAn

 நான் முதலில்இந்த செய்திகளை  திரு லண்டன் ஸ்வாமிநாத்தானின் ப்ளாகில சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன் பிறகு இணையத்தில் ஆங்கில மூலங்களின் சில செய்தியைக்கண்டேன் .அவைகளையும் மேலேக் கொடுத்துள்ளேன் .அவர்களுக்கு நன்றி .
ஆய்வாளர்களுக்காக ஆங்கில மூலத்தையும் கொடுத்துள்ளேன் .

அண்ணாமலை சுகுமாரன் -25/5/18-
Annamallai sugumaran

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்