Posts

Showing posts from October, 2019

திருச்செந்தூர்_முருகன்_பற்றிய 60 #தகவல்கள்.*

Image
#திருச்செந்தூர்_முருகன்_பற்றிய 60 #தகவல்கள்.* திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. 1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். 2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. 3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. 4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும். 5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு. 6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன

எல்லா வகையிலும் உயர்ந்த முருகனின் திருத்தலம் பழநி

Image
#எல்லா வகையிலும் உயர்ந்த முருகனின் திருத்தலம் பழநி பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய்கள் தீரும். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய்கள் தீர்ந்து விடும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகள் தொடர்ந்து, காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் ‘உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றே’ என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறலாம். முருகனின் திருவடி நிழலில் வசிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு. பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய்கள் தீரும். பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது நவபாஷாண சிலை. கோயிலின் அமைவிடம் மலை. தீர்த்தம் சரவணப்பொய்கை. ஆக, எல்லா வகையிலும் உயர்ந்த முருகத்தலம் பழநி.#

கம்ப இராமாயணம் - இராம நாமத்தின் மகிமை

Image
கம்ப இராமாயணம் - இராம நாமத்தின் மகிமை இராம நாமம் எவ்வளவு சிறந்தது? அதைக் கூறுவோருக்கு என்ன என்ன பலன் கிடைக்கும்? கம்பர் சொல்கிறார்... நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம் வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே. சீர் பிரித்த பின்: நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை  சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே பொருள்: நாடிய பொருள் கை கூடும் = தேடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் = அறிவும் புகழும் சேரும் வீடு அயல் வழியுமாக்கும் = முக்தி (வீடு பேறு) அடைய வழி வகுக்கும் வேரியன் கமலை நோக்கும் = தேன் நிறைந்த தாமரையில் இருக்கும் திருமகளை நோக்கும் நீடிய அரக்கர் சேனை = பெரிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய   = சாம்பலாகி அழிய   வாகை சூடிய = வெற்றி பெற்ற சிலை இராமன் = வில்லை கொண்ட இராமன் தோள் வலி கூறுவோர்க்கே = தோளின் ஆற்றலை கூறுவோர்க்கே  கம்ப இராமாயணத

பெரியமருதுவின்மரண_வாக்கு_மூலம்

Image
#பெரியமருதுவின்மரண_வாக்கு_மூலம் #என்னுடைமக்களை #கம்பெனியார்களாவது_இல்லை #எனக்கு #விரோதிகளாவது_யாதோர்_எனது #மக்களை_இம்சை_செய்யாமல் #இருக்கும்_படி_கேட்டு_கொள்கிறேன் #முருகனின்துணையாகவும் #ஆகாசவாணி_பூமா_தேவிசாட்சியாகவும்_நான்_என் #கழுத்தில்தூக்கு_கயிறு போட்டு கொள்கிறேன்

வீரம் விதைக்க பட்ட நாள்

Image
வீரம் விதைக்க பட்ட நாள்.... ✊✊✊ அக்டோம்பர் - 24 அரசு விழா இந்தியாவிலேயே அந்த மாவட்ட கலெக்டர் கொடியேற்றி வைக்கும் ஒரே நிகழ்வு #மாமன்னர்_மருதுபாண்டியர்களுக்கு மட்டுமே

மருது பாண்டியர்

Image
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது. மானம் காத்த மருதுபாண்டிய மன்னர்கள் : ஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்கத்தை முதலில் உரைத்தவர் வீரர் பூலித்தேவன். அவரை தொடர்ந்து, திப்பு சுல்தான், வீர மருது சகோதரர்கள், போன்றவர்கள். இதில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள். பிரிட்டிஷ்காரன் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்ற சமயம், வெறும்

மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு!

Image
மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு! 1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போர் தான் "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று தில்லி அரசு தமிழர்கள் மீது திணித்து வருகிறது. இந்து இசுலாமிய  மதச் சாயலோடு வெளிப்பட்ட போரில் பல்வேறு பகுதிகளின் கூட்டு ஒருங்கிணைவோ, அடித்தட்டு மக்களின் பங்களிப்போ இருந்ததில்லை . தொடக்கத்தில் புரட்சிக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்த போதிலும் இறுதியில் குறுகிய மதவாதச் சேற்றில் மூழ்கி தோற்றுப்போனது. ஆனால் தென்னிந்தியாவில் இந்தப் போருக்கு முன்னர் நடத்தப்படட பல்வேறு பிரித்தானிய எதிர்ப்புப் போர்கள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சாதி, மத, மொழிகளைக் கடந்து பூலித்தேவன், கட்டபொம்மன், ஹைதர்அலி, திப்புசுல்தான், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் போராடி வந்துள்ளனர். குறிப்பாக . மருது பாண்டியர்கள் நடத்திய போராட்டம் தென்னிந்தியாவில் நடந்த விடுதலைப் போரில் முதன்மையானதும், திருப்புமுனையும் கொண்டதாகும். மருது பாண்டியர் தளபதியாகவும், ஆட்சிப் பொறுப்பிலும் இருந்த ஆண்டுகள் 1780 முதல் 1801 வரை. இந்திய வரலாற்று ஆய்வாளர்

விஜயதசமி

Image
விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். விஜய தசமியை தசரா, தசைன், தசஹரா, தசேரா என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. விஜய தசமி தினத்தை வன்னி நவராத்திரி, வனதுர்க்கை நவராத்திரி என்றும் அழைக்கப்படுவது வழக்கம். மகாத்மியத்தில் மகா நோன்பு என்றும் குறிப்பிடப்படும் நாள் இது தான். புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அகில உலகையும் ஆட்டிப் படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற நாளாக ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறத

ஆயுத_பூஜை, #சரஸ்வதி_பூஜை

Image
*#ஆயுத_பூஜை, #சரஸ்வதி_பூஜை #கொண்டாடுவது_ஏன்? #எவ்வாறு_வழிபடுவது? #ஆயுத_பூஜை* ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நமக்காக நம் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு இந்த ஒரு நாள் நாம் நன்றி சொல்வது தான். ஆயுத பூஜை அன்று செய்யும் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். ஆயுத பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. *#வழிபடும்_முறை :* அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்த பின் அவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்

எசாலம் செப்பேட்டின் முகப்பு இலச்சினை

Image
இராஜேந்திர சோழன் தனது 25 ம் ஆட்சியாண்டில் (1037)  வெளியிட்ட எசாலம் செப்பேட்டின் முகப்பு இலச்சினை, அசப்பில் திருவலங்காடு இலட்சனையை போல் இருந்தாலும், இதில் ஒரு வேறுபாடு உள்ளது, இலட்சனையின் நடுவே ஒரு சக்கரவடிவம் உள்ளது ஒரு சக்கரவர்த்திக்கான அடையாளம் இது.. இராஜேந்திரரின் மற்ற செப்பேடுகளில் இச்சக்கர வடிவம் இராது. சோழர்களின் சின்னமான புலி.. அவர்கள் பாண்டியரை வென்ற அடையாளமாய் மீன், சேரர்களுக்கான வில், சாளுக்கியர்களின் அடையாளமாய் பன்றி, அனைவரையும் வென்றவர்கள் என்பதற்காய் ஸ்வஸ்திக் சின்னம்..கடாரத்தை வென்றதன் அடையாளமாய் தோரணம்.. வென்கொற்றக்குடை, இருபுறமும் கவரிகள், அரசர்களின் திருமுடிகளில் இரத்தினங்களாய் திகழும் இது பரகேசரிவர்மனான இராஜேந்திர சோழனின் சாசனம்.❤❤❤ ஆயிரம் ஆண்டுகளாக, இரண்டாயிரம் ஆண்டுகளாக மூவாயிரம் ஆண்டுகளாக பார்ப்பான் உங்களை அடிமைப்படுத்தி வச்சிருந்தான்னு தீராவிட நாடோடிகளின் ஊளை ஒப்பாரியைக் கேட்டு தமிழன் தன் வரலாற்றை இழந்துதான் மிச்சம், கங்கைக்கொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு  இராசேந்திர சோழன் படையெடுத்து சென்று வென்ற நாடுகளையெல்லாம் அம்மண்ணுக்குரியவர் கையிலய

நேதாஜி ஜிந்தாபாத்

Image
இரண்டாம் #உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாக  இந்தியாவில் #பிரிட்டிஷ் #இராணுவத்தில் #பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய #சிப்பாய்களை #இத்தாலி #ஜெர்மன் #துருக்கி போன்ற நாடுகளின்மீது #போரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தபோது #சர்தார்_வல்பாய்_படேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் #காந்தி இந்திய #சிப்பாய்களை அனுப்பவதற்கு சம்மதித்தார்.. இதனால் #படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான #வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தியர்களான சுமார் #5000சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இத்தாலி மீது #போர்தொடுக்க அனுப்பட்டனர். ஆனால் ஐயாயிரம் #இந்தியசிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் #சிறைபிடிக்கப்பட்டனர் ஒருநாடக அரங்கத்தில் அடைத்து வைத்து #விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய #முசோலினி திட்டமிடுகிறார். அதனை ஹிட்லருக்கும் தெரியப்படுத்துகிறார். செய்தி அறிந்து #பதைபதைக்கிறார் ஒரு #இந்தியதலைவர் அவசரம் வேண்டாம் அந்த சிப்பாய்களை ஒருமுறை நான் பார்க்கவேண்டும் அதுவரையில் பொறுத்திருங்கள் என்று #வேண்டுகோள் விடுத்தார். நமது சிப்பாய்கள் அடைத்து வைத்திருந்த அரங்கத்தில்.., முதலி

சிவாஜி கணேசன்

Image
தமிழ்ப் பேரினத்தின், பெருமைமிகு கலை அடையாளம். மன்னார்குடி வேட்டைத்திடல் மண் பிறந்த சிவாஜி கணேசன் என்றொரு கலைப் பெட்டகம். கம்பீரத் தோற்றம், கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள்.  வேட்டைத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயர், ராஜாமணி ஆகியோருக்கு பிறந்தவர் கணேசமூர்த்தி. வேட்டைத்திடல் சின்னையா கணேசமூர்த்தி என்பதே பின்னர் வி.சி. கணேசன் என்றானது. ராஜாமணி அம்மையார் விழுப்புரத்திலிருந்த தனது தந்தை வீட்டில் கணேசனைப் பிரசவித்த அதே நாள், சின்னையா மன்றாயர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்கள் சென்ற ரயிலுக்கு வெடி வைக்க முயற்சித்து கைதாகிச் சிறைக்குச் சென்றார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் வெளிவந்த நேரம், ராஜாமணி திருச்சி சங்கிலியாண்டபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். பள்ளியில் படித்து வந்த கணேசன் தனது தந்தையுடன் இரவு நேரங்களில் சுதந்திரப் பிரச்சாரத் த