Posts

Showing posts from November, 2018

கல்லீரல்

Image
#கல்லீரல்_பிரச்சனைக்கு #உணவு_முறைகள் - #இயற்கை_மருத்துவம் பைல் சுரப்பு என்பது பித்தமே! தேவைக்கு அதிகமான பைல் சுரப்பு அல்லது சுரப்பின் ஓட்டத்தில் ஏற்படும் தேக்கம் ஆகியன பித்தம் அதிகமாவதையே காட்டுகிறது. ஆயுர்வேத முறைப்படி கல்லீரல் ‘அக்னியின் இருப்பிடம்’ ஆகவே சுலபமாக உஷ்ணம் அடைந்து பலதரப்பட்ட வீக்கம் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றது. கல்லீரலில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நொதிகள் செரிமானம் ஆன உணவை, உடலின் ஐம்பொறிகளின் கட்டமைப்புக்குத் தேவையான ஐந்து மாற்றுகின்றது. பித்த சமநிலை மாறுவதால் உண்டாகும். எதிர்மறை எண்ணங்கள் கோபம், பொறுமை, எரிச்சலடைதல் ஆகியன. பித்த தோ‌ஷம் சரியாக இருக்கும் போது வரும் நேர்மறை எண்ணங்கள், தைரியம், உறுதி, வைராக்கியம், உற்சாகம் ஆகியன. இந்த உணர்வுகளில் தடங்கல், தடுமாற்றம் நேரும் போது, கல்லீரல் செயல்பாடுகளில் மாறுதல் உண்டாகின்றது. #காமாலை கல்லீரலில் சுரக்கும் பைல் சுரப்பு தேவை போக சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் சேர்ந்து வெளியேற்றப்படும். பைல் சுரப்பியில் அல்லது குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அது சிறுநீர், மலத்துடன் சென்றடைய முடியாமல் ரத்தத்தில் கலந்துவ

கிள்ளிக்கொண்டார்

Image
கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் ================================= புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது கிள்ளனூர். இந்த ஊரில் கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் என்பவருக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றனர். இவரை பற்றிய ஆய்வில், அந்த பகுதி மக்களால் செவிவழி செய்தியாக கூறப்படுவது கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் ஐந்து வெள்ளையர்களின் தலையை கூரிய ஈட்டியால் கொய்து ஊர் மந்தையில் வீசினாராம். வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை.அவர் பெயரால் கிள்ளிக் கோட்டை... கள ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்

இராமானுஜர்

Image
இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர். இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக் காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்.

வேங்கையின் மைந்தன்

Image
வேங்கையின் மைந்தன்-----சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் கி.பி. 1012 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான். ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங

வாழைப்பழம்

Image
வாழைபழம் & வாழைப்பூவின் மருத்துவக்குணம் மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம் ----------------------------------------- முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும் கனிமங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளதால் இப்பழம் பல நோய்களை கண்டிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் "ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ், சக்ரோஸ்' ஆகிய மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து போன்ற முக் கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள்ளே கொண்டுள்ளது. மேலும், வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் ஆகிய சத்துக்களும் இருப் பதால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது. வாழைப்பழத்தின் வகைகள் ----------------------------------------- ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை

கருவூராரும் ராஜ ராஜ சோழனும்...

Image
கருவூராரும் ராஜ ராஜ சோழனும்...

மக்கள் குலவேந்தர் "மாணிக்கம் ஏற்றாண்டார்

Image
மக்கள் குலவேந்தர்  "மாணிக்கம் ஏற்றாண்டார்" ================================================ மக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார் , திருச்சி மாவட்ட ஏற்றாண்டார்பட்டி (நடராசபுரம்) என்னும் சிற்றூரில் கள்ளர் குடியில்  உயர் திரு பரிமணம் ஏற்றாண்டார் உண்ணாமலை அம்மாள் தம்பதியினற்கு மகனாக 1917ம் வருடம் மாணிகம் பிறந்தார். இவரது பெற்றோர் மிகுந்த வளமிக்க விவசாய குடும்பதை சார்ந்தவர்கள், ஏற்றாண்டார் என்றால்  சிறப்பு உடையோர் என்பதற்கு ஏற்ப,  இக்குடும்பம்  கிராமத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் கொண்ட பாரம்பரிய குடுபமாகும். தனது பள்ளிப்படிப்பை ஈ.ஆர் உயர் நிலை பள்ளியில் துவங்கிய இவருக்கு இவருடன் படித்த சக பிராமண மாணவர்களின் நய்யாண்டி செயல்கள் ஆரம்ப முதலே பிடிக்கவில்லை. நீ இவ்வளவு பணக்காரனாய் இருந்துகொண்டு ஏன் இங்கு படிக்க வரவேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாத மாணிக்கம் இப்பள்ளியை விட்டு நீங்கி லால்குடியில் இருந்த அரசு மேல் நிலை பள்ளியில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்தார். இங்கு இவருடன் கல்வி பயின்ற சக மாணவருள் அன்பில் தருமலிங்கமும் ஒருவர். வருமையில் வாழும