Posts

Showing posts from May, 2014

சிவபுரம்

Image
ஸ்ரீ ஆதிசங்கரர் கேரளாவில் காலடி என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால் அவரது மூதாதையர் யார் தெரியுமா? அவர்கள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சிவபுரத்தை சேர்ந்தவர்கள். சிவபுரத்திலிருந்து கேரளாவிற்குச் சென்று குடியேறியவர்கள் சிவனின் பெயராலேயே புரம் என்ற ு அழக்கப்படும் இவ்வூர் குபேரபுரம், பூ கைலாயம். சண்பகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கப்பிரதடசணம் செய்து வழிபட்ட தலம். பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் தரிசித்து பேரு பெற்றுள்ளத் தலம். மேலும் பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தலம் குழந்தைப்பேறும் வழக்குகளில் வெற்றியும் தரும் ஸ்தலமாகும். புராணச் சிறப்பு இரண்யாஷன் என்ற அசுரன் இந்த உலகத்தை அழிக்க முயன்றான். அப்போது ஜகத்ரட்சகனான திருமால் வெண்பன்றி உருவெடுத்து தன் கொம்பின் முனையில் உலகத்தை தூக்கி நிறுத்திக் காப்பற்றினார். பின் இத்தலம் வந்து சிவபுரநாதரை வழிபட்டு அருள் பெற்றார். திருமால் வராகமூர்த்தியாக அவதாரமெடுத்த போது அவர் மேனியில் பட்ட மண் துகள்களை ஒன்று திரட்டி இத்தலத்தில் சிவலிங்கமாக்கி வழிப்பட்டாள் திருமகள். குபே

திருப்பனந்தாள்

Image
தலவிருட்சத்தின் பெயரலேயே அமைந்த தலம் திருப்பனந்தாள். அதாவது பனைமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம் இது கோயிலின் பிரகாரத்தில் தெய்வப்பனை மரங்கள் இரண்டு உள்ளன. அவ்வாறே பனையின் பெயரால் ஆகி திருப்பனந்தாள் என்றானது. தன்பொழில் சூழ் திருப்பனந்தாள் -திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் சடாமுடியின் பெயரல் சஞ்சடையப்பர் என்று அழைக்கபடுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி கலைநயம் வாய்ந்த இத்திருகோயிலில் ஈசன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளியிருக்கிறார்கள் புராணவரலாறு பனந்தாள் தலத்தில் தாடகை என்ற அசுரகுலமங்கை மலர்கொய்து மாலைக் கட்டி தொண்டு புரிந்து வந்தாள். ஒருநாள் மாலையை இறைவனுக்கு அணிவிக்க முயல அப்போது அவளின் சேலை நழுவ அதனை முழுங்கையால் அழுத்திக்கொண்டு எக்கி மாலை அணிவிக்க முயல அப்போது தாடகையின் சங்கடத்தை தீர்க்க வசதியாகத்தானே தலைசய்த்து மாலையை ஏற்றுக்கொண்டார் இறைவன். எனவே இக்கோயிலுக்கு தாடகையேச்சரம் என்ற பெயர். வழிப்படோர் திருமால்,பிரம்மன்,இந்திரன்,ஐராவதம்,ஆதிசேடன், அகத்தியர் ஆகியோர் இத்தலம் வந்து வழிப்பட்டு அருள் பெற்றுள்ளனர். இவர்களின் பெயரில் தீர்த்தங்களும் உள

திருபுவன கோயில்.

Image
காலம் கடந்து சரித்திரச் சான்றாக சோழச்சின்னங்களுள் ஒன்றாக விளங்குகிறது,திருபுவன கோயில். கருவறை விமானம் உயரமாகவும் இராஜகோபுரம் தாழ்வாகவும் அமைந்து தஞ்சை, தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், ஆகிய கோயில்களில் விமானங்களை ஒத்தமைந்த சிறப்புடையது. அனைவரும் காணவேண்டிய அற்புதத் திருக்கோயில். 3ம் குலோத்துங்கன் வடநாட்டில் கிடைத்த பெருவெற்றியின் மூலம் பொன்னும், மணியும்,பொருளும் அள்ளிக் கொண்டு வந்த திருபுவனத்தில் கோயில் எழுப்பினான். ஸ்ரீகம்பஹரேஸ்வரர் (நடுக்கம் தீர்த்த பெருமான்) கம்பம்=பயன் பிர கலநாதன்,திருமால்,தேவர்,மக்கள் ஆகியோரின் நடுக்கத்தை நீக்கி பயத்தைப் போக்கியதால் இத்தல இறைவனை கம்பஹரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தமிழில் நடுக்கம் தீர்த்தப் பெருமான் எனப் பொருள்படும். ஸ்ரீ சரபமூர்த்தி தோன்றுதல் இத்தலத்தில் இறைவனின் கல்வெட்டு பெயர். திருபுவன ஈச்சரமுடைய மகாதேவர். இரண்யகாசிபுவின் முன் நிற்கிறான் பிரகலாதன். இதோ இந்தத்தூணில் இருக்கிறானா உன் நாராயணன் என இடிபோல் முழங்குகிறான் இரண்யன். என் நாராயணன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனப் பிரகலாதன் கூற தன் கையிலிருந்த கதாயுதத்

பழையாறை

Image
பழையாறை சோழ சாம்ராஜ்ஜியத்தின் மறைந்த மாநகரம். தமிழக பொற்காலத்தின் தலைமைமையம். இன்றும் நாம் அந்தப் பகுதிகளில் செல்லும் பொழுது ஒரு மாபெறும் வரலாற்றுணர்வுக்குள் செல்லாம். சோழர்கள் பல்லவர்கட்கு அடங்கி சிற்றரசாக இருந்த காலத்தால் வாழ்ந்த இடம் தான் பழையாறை. பிற்காலச் சோழர் வரலாற்றில் இந்நகரம் இரண்டாவது தலை நகரமாயிற்று. இவ்வூருக்கு தெற்கே முடிகொண்ட சோழன் ஆறும் வடக்கில் திருமலைராயன் ஆறும் ஒடுகின்றன. முடிகொண்ட சோழன் ஆறு அந்தக்காலத்தில் பழையாறை (பழைய ஆறு) வழங்கப்பட்டிருக்கிறது. பழையாறை என்பது இன்றிருப்பது போல் ஒரு சாதாரண சிற்றூர் அல்ல. சோழர் ஆட்சியில் ஒரு மாபெரும் நகரம். இன்றிருக்கும் பல தனி ஊர்கள் சோழர் காலத்தில் பழையாறையின் பகுதிகளே. சோழர்களின் அரண்மனை இருந்த இடம் இன்று சோழர்மாளிகை என்ற பெயரில் ஒரு தனி ஊராக உள்ளது. சோழப்படைவீரர்கள் பழையாறையின் நாற்புரத்திலும் காவற்படி போல் குடியிருந்தனர். அவை ஒவ்வொன்றும் தனிச்சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டன. 1. ஆரியப்படைவீடு - வடக்கே சென்று ஆரியரை வெற்றி கொண்ட வீரர்கள் 2. பம்பபைப்படைவீடு - போருக்குச் செல்லும் முன் பம்பை என்ற வாத்தியம் இசைத

அசோகா செய்முறை ரகசியம்

Image
ருசி ரகசியம் விஜி ராம் பெயர் சொன்னாலே அதன் மகத்துவம் புரியும்படியான ஊர்களில் முக்கியமானது திருவையாறு. உலகமே கொண்டாடும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் தலம்... திரு+ஐந்து+ஆறு... காவிரியும் அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவையுமாக 5 ஆறுகளாக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. சுவையான காவேரி தண்ணீரும், எப்போதும் இசையோடு வீசும் காற்றும் திருவையாறின் இன்னொரு சிறப்பு. தியாகராஜ ஆராதனை விழா எவ்வளவு பிரபலமோ, அதே அளவு இன்னொரு பிரபலமான விஷயமும் இங்கு உண்டு. அதுதான் திருவையாற்றில் மட்டுமே கிடைக்கும் அசோகா. அல்வா போன்ற இனிப்பு சுவை கொண்ட ஒரு உணவுக்கு இப்படி ஒரு பேரை யோசித்து வைத்ததிலிருந்தே திருவையாற்றின் ரசனை தெரிகிறதே! அது என்ன அசோகா? தஞ்சை மாவட்ட திருமணங்களில் அவசியம் இடம்பெறும் கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ண இனிப்பு! பச்சை வாழை இலையில் சுடச்சுட ஆவி பறக்கும் அசோகாவை காணும்போதே சுவை சுரப்பிகள் சுறுசுறுப்பாகும். உடலுக்கு மிகவும் உகந்த பாசிப்பருப்பே இதில் முக்கிய சேர்ப்பு. அசோகா விற்பதே பிரதான தொழிலோ என்னும்

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்

Image
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்--------------தேவாரப்பதிகம் அக்குலா மரையினர் திரையுலா முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும் சோலைத் திக்க ெலாம் புகழுறுந் திருநெல்வேலியுறை செல்வர் தாமே. -திருஞானசம்பந்தர். தேவாரப்பாடல்பெற்ற பாண்டிநாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.----------------------------- தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. திருநெல்வேலி ஜங்சனிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என

சங்கரன்கோயில்

Image
திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசு வாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol ! என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது. உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். கதை மேலும் போகிறது. இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். இதுவரை சிவனாரைப் பற்றி மட்டுமே குறித்து வந்த கதை பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரியார் இராமா

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது

Image
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒர ுவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்

உப்பிலியப்பன் கோயில்

Image
உப்பி லி யப்பன் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவக் கோவில் ஆகும். பெயர்க்காரணம் திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன் ஒப்பிலியப்பன் என்ற திருநாமம் பெருமாளுக்கு அமைந்தது.காலப்ப ோக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது. பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

திருநாகேசுவரம்

Image
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில ் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம், நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின்

கண்ணன் என் தோழன்

Image
ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம் ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்; தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத் தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்; நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை. பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான்------கண்ணன் என் தோழன்------மகா கவிபாரதியார்

முகமாறுடைத் தேசிகனே.

Image
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வா! முகமாறுடைத் தேசிகனே.

கதிர்வடி வேலோனை

Image
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன் வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற் கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

வேற்படை வானவ னே

Image
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே.

வேலுக் கணிகலம்

Image
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.

தன் பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு

Image
தன் பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , விவ சாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. பொருநையின் போக்கு பொதிய மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி. வரலாறு கல்யாண தீர்த்தம் முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில் என கூறப்படுகிறது. பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்த

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்

Image
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட தென்காசி பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். ஆற்றிய போர்கள் திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பி டப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன். ஆற்றிய அறப்பணிகள் விந்தனூர் மற்றும் ஜந்து ஊர்களிற்கு அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். திருக்குற்றாலம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிற்கு மண்டபங்கள் அமைத்தான். நெல்லை சிவன் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான் என மெய்க்கீர்த்திகளில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கழுகுமலை [ தூத்துக்குடி மாவட்டத்தில் ]. கோயில்கள்

Image
கழுகுமலை [ தூத்துக்குடி மாவட்டத்தில் ]. கோயில்கள் இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவை வெட்டுவான் கோயில் இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டபட்டது. அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலதில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கபடுகிறார். வெட்டுவான் கோயில் சமணர் பள்ளி கழுகாசலமூர்த்தி திருக்கோயில் இக்கோயிலில் முருகன் மற்றும் சிவன் கோயில்கள் உள்ளது. கோயிலுக்கு அருகில் தெப்பகுளம் உள்ளது. வரலாறு அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும்