மருதா சலமமர்ந்த மால்மருகன் சேவடி

மருதா சலமமர்ந்த மால்மருகன் சேவடி
கருதா ரகந்தான் கனிந்து -- முருகா
முருகா வெனக்கூவ முத்தமிழ்ப்பா செய்தான்
இருகா லுறுதுணையா மெற்கு

தந்தைதாம் செய்த தமிழ்ப்பாலைத் தானருந்தி
மைந்தனும் அச்சின் மடியேற்றி-செந்தமி
ழுலகிற் குவந்தளித்தான் உண்டோ உவமை
உலகி லிதற்கு வுரை?

வாழ்க தமிழென்று வாய்பிதற்றி வாழ்வார்கள்
தாழ்க முருகன்றன் தாளென்று - ஆழ்கடலின்
முத்தொன்று வீந்தநன் முத்துப் பெரும்புலவற்
கொத்தாரு முண்டோ உரை?------'மருதவரை உலா'

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்