அனுமன் தனது பெரிய வானர உருவத்துடன் நிற்றல்

அனுமன் தனது பெரிய வானர உருவத்துடன் நிற்றல்
மின் உருக் கொண்ட வில்லோர் வியப்புற, வேத நல் நூல்
பின் உருக் கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ,
பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்.

கண்டிலன், உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன், பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால், கூறலாம் தகைமைத்து ஒன்றோ,
பண்டை நூல் கதிரோன் சொல்ல, படித்தவன் படிவம்? அம்மா------கம்பராமாயணம்
Unlike · ·

Comments

Popular posts from this blog

வீரம் விதைக்க பட்ட நாள்

பறவை நாச்சியார்

திருவண்ணாமலை மலை ஒரு எரிமலை