Posts

Showing posts from April, 2024

சோழர் காலத்தில் ராமர்

Image
ராமனும் சோழர் குலத்தில் உதித்தவன் என்பதினாலோ என்னவோ சோழர் காலத்தில் ராமர் சிறப்பாக போற்றப்பட்டார் ------------------------------------------------------------------------------------- ராமர்-சீதை வழிபாடு தென்னகத்தை விட வட இந்தியாவில் தான் அதிகமென்று சிலர் கூறுவர். . உண்மையில் சோழர் காலத்தில் ராமர் மிகச் சிறப்பாகவே தமிழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளார். . பிற்கால சோழர்களில் விஜயாலய சோழரின் மகனும், பிற்கால சோழப் பேரரசை நிறுவியவருமான ஆதித்த சோழருக்கு கோதண்ட ராமர் எனும் சிறப்புப் பெயர் உண்டு. . போர்க்களத்தில் வில் வித்தையில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் பெற்றார் என்றுக் கூறுவர் . பொக்கிஷம்பாளயத்தில் உள்ள அவரது பள்ளிப்படை கோதண்டராமேஸ்வரம் என்றே அழைக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. . ஆதித்த சோழரின் மகனான பராந்தக சோழன் காலத்தில் ராமாயணம் அழியாத ஆவணங்களாக கற்றளிகளில் ஆவணப்படுத்தப்பட்டன. . பராந்தகர் காலக் குறுஞ்சிற்பங்கள் புகழ் பெற்றவை. திருப்புள்ளமங்கை, திருச்சென்னம்பூண்டி போன்ற சிவாலயங்களிலும் . ராமாயணத்தின் நிகழ்வுகளை கையளவு குறுஞ்சிற்பங்களாக வடித்து பொது மக்களும் காணும்படி

மதுரை அழகர் கோயில்

Image
அழகர்கோயிலும் கள்ளர்களும் :- மதுரை அழகர் கோயில் மிகவும் பழமையான வைணவத்தலங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியமான பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தில் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஆழ்வார்களில் 5 ஆழ்வார்கள் 108 பாசுரங்களில் இக்கோயில் பற்றி பாடியுள்ளனர். பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். பழமையான அழகர் கோயிலுக்கும் கள்ளர் பழங்குடியினருக்கும் உள்ள நெடிய பிணைப்புகளை காண்போம். கள்ளழகர் ********** அழகர் கோயில் பிற்காலத்தில் கள்ளழகர் கோயில் என மக்களால் அழைக்கப்பட்டது. திருமாலிருஞ் சோலைமலை அழகர்மாலை எனும் ஒலைச்சுவடித் தொகுப்பில் " கள்ளர் குலத்தார் திருப்பணி வேண்டிய கள்ளழகா" , " கள்ளர்குரிய அழகுப்பிரான்" என பல இடங்களில் அழகர் கள்ளர்களுக்கு உரியவர் எனும் விதத்தில் பாடப்பட்டுள்ளது. கிபி 1751ல், பிரெஞ்சு அரசாங்கத்தின் சார்பாக கள்ளர்களின் ஆதரவை கேட்டு தன்னரசு கள்ளர் நாடுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட கள்ளர் நாடுகளில் அழகர் கோயில் கள்ளர் என மேலநாட