மாணிக்க வீணை

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல் எடுத்துப் பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி - அம்மா(மாணிக்க) நா மணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளம் இல்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே வாணி சரஸ்வதி மாதவி பார்கவி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நீ நான்முக நாயகி மோஹன ரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கு இனிதே தேனருள் சிந்தும் கான மனோஹரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி - அம்மா(மாணிக்க)