முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்

🏵🏳‍🌈🏵முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்🏵🏳‍🌈🏵

🍂புரட்டாசி மாதத்தில் கடைப் பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு.
🍂ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி,லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை தேவி(பார்வதி) வழிபாடு.
🍂இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவி வழிபாடு.
🍂கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி வழிபாடு.முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.

🌻துர்க்கை தேவி🌻
🍓நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை, வீரத்தின் தெய்வம், சிவ பிரியை,இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’,‘காளி’ என்றும் அழைப்பார்கள்.
🍓வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை.மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.வெற்றியை கொண்டாடிய 10-ம் நாள் விஜயதசமியாகும்.
🍓வன துர்க்கை,
🍓சூலினி துர்க்கை,
🍓ஜாதவேதோ துர்க்கை,
🍓ஜ்வாலா துர்க்கை,
🍓சாந்தி துர்க்கை,
🍓சபரி துர்க்கை,
🍓தீப் துர்க்கை,
🍓சூரி துர்க்கை,
🍓லவண துர்க்கை ஆகியோர் நவ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள்.

🌻லட்சுமி தேவி🌻
🍒மலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக விளங்கு கிறாள்.செல்வத்தின் தெய்வம்,விஷ்ணு பிரியை,கிரியா சக்தி,லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.
🍒பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
🍒திருப்பதியிலுள்ள திருச்சானூரில் லட்சுமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது.
🍒ஆதிலட்சுமி,
🍒மகாலட்சுமி,
🍒தனலட்சுமி,
🍒தானியலட்சுமி,
🍒சந்தானலட்சுமி,
🍒வீரலட்சுமி,
🍒விஜயலட்சுமி,
🍒கஜலட்சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர்.இவர் கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர்.

🌻சரஸ்வதி தேவி🌻
🍎வைரத்தின் அழகு, அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள்.
🍎கல்வியின் தெய்வம்,பிரம்ம பிரியை,ஞான சக்தியான சரஸ்வதி தேவிக்கு,தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது.
🍎நவராத்திரியின் ஆறாவது,ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடு செய்வது முறையாகும்.இது தேவியின் அவதார நாள்.
🍎சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. திருவோணம் அன்றே விஜயதசமி.
🍎ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை.பல குழந்தைகள் கல்வியை அன்று தான் தொடங்குவார்கள்.அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.
🍎வாகீஸ்வரி,
🍎சித்ரேஸ்வரி,
🍎துளஜா,
🍎கீர்த்தீஸ்வரி,
🍎அந்தரிட்ச சரஸ்வதி,
🍎கடசரஸ்வதி,
🍎நீலசரஸ்வதி,
🍎கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

🙏🔱ஓம் சக்தி பராசக்தி🔱🙏
🙏🔱சர்வம் சக்திமயம்🔱🙏

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்