அருள்மிகு சோமலிங்கேஸ்வரர்


அருள்மிகு சோமலிங்கேஸ்வரர் திருக்கோயில்------மதுரை------
சிவனுக்கு செய்யும் அத்துணை பூஜைகளும் பெருமாளுக்கும் செய்யப்படுவது, இந்த கோயிலில் மட்டும்தான்.  ஹரியும், சிவனும் ஒன்று என்ற சொல்லிற்கேற்ப, அமைந்துள்ளன.

  இங்கு பெருமாளுக்கும் சிவனுக்கும் சன்னதி அமைந்துள்ளது.

  சைவ கடவுளான சிவனும், வைணவ கடவுளான விஷ்ணுவும் ஒன்று சேர்ந்து சிவ பெருமாளாக காட்சியளிக்கின்றனர்.
பிரதோஷ நாட்களில் சிவனுக்கும், புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. இந்த பகுதியை கடந்து செல்பவர்களுக்கு, சிவ பெருமாள் சுவாமிகள் எளிதில் காட்சி தரும் வகையில் கோயில் அமைந்துள்ளது. மேற்கு திசை பார்த்த இந்த கோயிலிலுள்ள, சிவன் ஆவுடை வடக்கு நோக்கியிருப்பது சிறப்பு. திருப்பதி பெருமாளின் ÷தோற்றத்தை போல அமைந்திருக்கும், மூலவரான பெருமாளை தூரத்தில் வரும்போதே, தரிசிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
   
  இங்குள்ள உற்சவரை திருப்பதியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
   
 சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் ஆவுடை வடக்கு நோக்கியிருப்பது சிறப்பு.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்