சங்க கால தமிழன்

இன்றும் படிப்பறிவு இல்லாத, எழுத படிக்க தெரியாத தமிழன் இருக்கிறான். ஆனால் அன்றோ?

ஆபரணம்
சிலை
பயன்பாட்டு பொருட்கள்
இலக்கியங்கள்
காப்பியங்கள்
 கல்வெட்டுகள்
ஆலையங்கள்
போர் கருவிகள்
மருத்துவங்கள்
இசை
நடனம்
ஓவியங்கள்
தற்காப்பு கலை

என்று எல்லாவற்றிலும் தமிழனின் வளர்ச்சி பல்லாயிரம் வருடங்களை தாண்டுகிறது. தமிழனின் கலை, இலக்கியம், கல்வெட்டுகளை வைத்து தமிழின் வயது ஐயாயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்று சொல்லிக்கொண்டே போகிறார்கள். தமிழன் நாகரீகம் வளர்ந்து எழுத தெரிந்த காலமே இத்தனையாயிரம் வருடங்கள் என்றால்? தமிழ் பேச்சி வடிவில், ஒளி வடிவில் எத்தனை ஆயிரம் வருடங்கள் இருந்திருக்கும் என்று  எண்ணிப்பார்க்கையில் வியக்கிறது.

 இவ்வளவு பெருமைக்குரிய ஒரு இனம் உங்களது வேற்றுமொழி திணிப்பை, பண்பாட்டு சிதைப்பை எப்படி ஏற்றுக்கொள்ளும்? அது யாரிடமும் எப்போதும் மண்டியிடாது. தமிழ் தன்னை தற்காத்துக்கொள்ளும் தனித்துவம் வாய்ந்தது.

கீழை பிரபாகரன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்