வண்ணமயில் அமரோனே!!!

ஆழ்ந்து மனம் லயித்து
     அய்யனே உனை வணங்கி
தாழ்ந்து தலை சாய்த்து
     தன்னுள் தனை இருத்தி
வீழ்ந்து  வெதும்பி விம்மியழுது
    வீண் விறகினும் வெற்றுடம்பு
வாழ்ந்து பயனுற வையத்துள்
       வகைசெய் வண்ணமயில் அமரோனே!!!

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்