Posts

Showing posts from May, 2018

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்

Image
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், குரு பரிகாரதலம், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம். புராண வரலாறு இத்தலத்தின் புராண வரலாற்றில் இங்கே வந்து வழிபடாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு சிவலோகமே திரண்டெழுந்து வணங்கிய புண்ணியத் தலம் திட்டை. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் குரு கதிரவன் அதிபதியாக அமையவும், மேருமலையைச் சுற்றி வலம் வந்து உலகை ஒளி வீசிக் காக்கும்படியான வரத்தையும், ஆதிசேடன் பூமியை பூவாக எளிதில் தாங்கும் வல்லமையைப் பெற்றதும், வசிட்டர் பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனதும், காமதேனு புத்ரிகளாகிய நந்தினி, கமிலினி,பேறுபெற்றதும், பைரவர் கேத்திர தீர்த்த பாலகர் ஆனதும், யமன் தென்திசைக்கு தலைவன் ஆனதும், சனி நவக்கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றதும, திருமால் மதுகடைபர்களை வெல்லும் ஆற்றல் பெற்றதும், பிரமன் உலகைப் படைக்கும் வல்லமையை அடைந்ததும் இத்தல இறைவனின் அருளால்தான் எனப்படுகின்றது. அகவினி தேவர்கள் இந்திரன், வசிட்டர், கௌதமர் முதலானவர்களும் வழிபட்டிருக்கின்றனர். நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வணங்கித்தொழுது தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் காரணமாக நின்ற

சிவபுரம்

Image
ஸ்ரீ ஆதிசங்கரர் கேரளாவில் காலடி என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால் அவரது மூதாதையர் யார் தெரியுமா? அவர்கள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சிவபுரத்தை சேர்ந்தவர்கள். சிவபுரத்திலிருந்து கேரளாவிற்குச் சென்று குடியேறியவர்கள் சிவனின் பெயராலேயே புரம் என்று அழக்கப்படும் இவ்வூர் குபேரபுரம், பூ கைலாயம். சண்பகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கப்பிரதடசணம் செய்து வழிபட்ட தலம். பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் தரிசித்து பேரு பெற்றுள்ளத் தலம். மேலும் பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தலம் குழந்தைப்பேறும் வழக்குகளில் வெற்றியும் தரும் ஸ்தலமாகும். புராணச் சிறப்பு இரண்யாஷன் என்ற அசுரன் இந்த உலகத்தை அழிக்க முயன்றான். அப்போது ஜகத்ரட்சகனான திருமால் வெண்பன்றி உருவெடுத்து தன் கொம்பின் முனையில் உலகத்தை தூக்கி நிறுத்திக் காப்பற்றினார். பின் இத்தலம் வந்து சிவபுரநாதரை வழிபட்டு அருள் பெற்றார். திருமால் வராகமூர்த்தியாக அவதாரமெடுத்த போது அவர் மேனியில் பட்ட மண் துகள்களை ஒன்று திரட்டி இத்தலத்தில் சிவலிங்கமாக்கி வழிப்பட்டாள் திருமகள். குபேரனாக்கிய சிவபுரம்

ஆதிசங்கரர்

Image
ஆதிசங்கரர்  இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர். இளமை பிராயத்தில் கௌடபாதர் சீடரான கோவிந்த பகவத்பாதர் இடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கலானார். பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வதை தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது. சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான ஹஸ்தமாலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர

வைகாசி விசாகம்

Image
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.  வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை. வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை. ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு பு

சரஸ்வதி

Image
கூத்தனூர்------ஸ்ரீ மஹாசரஸ்வதி ஆலயம் சரஸ்வதி காயத்ரி ஓம் வாக் தேவ்யை சவித்மஹே விரிஞ்சி பத்ந்யை சதீ மஹி தந்நோ வாணி ப்ரசோதயாத் ஸ்ரீ மஹாசரஸ்வதி ஆலயம் கல்விக்கு அதிபதியாம், கலை ஞானம் தரும் கலைமள். வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள். வீனைசெய்யுமொலிருப்பாள் என்ற முண்டாசுக் கவிஞனின் வைரவரிகளில் வர்ணிக்கப்பட்ட மஹா சரஸ்வதி தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்தலம் கூத்தனூர் ஆகும். கும்பகோணம்-காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் (பூந்தோட்டம் வழியில்) கூத்தனூர் தலபுராணத்தை பிரம்மாண்ட புராணம் விளங்குகிறது. ஞானபீடமாக கல்விக்கிறை அரிசொல் நதியில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சங்கமிக்கும் இப்பகுதி தஷிண திரிவேணியாக சிறப்புடன் விளங்குகிறது இத்தலம். இரண்டாம் இராஜராஜ சோழனால் தன் அவைக்கால புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டு கூத்தனூர் ஆயிற்று. இது வரலாற்று செய்தி. இக்கோயிலின் தேவியான சரஸ்வதியின் திருக்கோலத்தை காண ஆயிரம் கண்கள் வேண்டும். நவராத்திரி சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் இத்தலத்தில் முக்கிய திருவிளாக்களாகும். புராணம் பார்வதி திருமணம் செய்துகொள்ளும் முன் தன் சிரசில் உள்ள கங்கை தேவியை பார்வதியின

திருபுவன கோயில்

Image
காலம் கடந்து சரித்திரச் சான்றாக சோழச்சின்னங்களுள் ஒன்றாக விளங்குகிறது,திருபுவன கோயில். கருவறை விமானம் உயரமாகவும் இராஜகோபுரம் தாழ்வாகவும் அமைந்து தஞ்சை, தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், ஆகிய கோயில்களில் விமானங்களை ஒத்தமைந்த சிறப்புடையது. அனைவரும் காணவேண்டிய அற்புதத் திருக்கோயில். 3ம் குலோத்துங்கன் வடநாட்டில் கிடைத்த பெருவெற்றியின் மூலம் பொன்னும், மணியும்,பொருளும் அள்ளிக் கொண்டு வந்த திருபுவனத்தில் கோயில் எழுப்பினான். ஸ்ரீகம்பஹரேஸ்வரர் (நடுக்கம் தீர்த்த பெருமான்) கம்பம்=பயன் பிரகலநாதன்,திருமால்,தேவர்,மக்கள் ஆகியோரின் நடுக்கத்தை நீக்கி பயத்தைப் போக்கியதால் இத்தல இறைவனை கம்பஹரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தமிழில் நடுக்கம் தீர்த்தப் பெருமான் எனப் பொருள்படும். ஸ்ரீ சரபமூர்த்தி தோன்றுதல் இத்தலத்தில் இறைவனின் கல்வெட்டு பெயர். திருபுவன ஈச்சரமுடைய மகாதேவர்.  இரண்யகாசிபுவின் முன் நிற்கிறான் பிரகலாதன். இதோ இந்தத்தூணில் இருக்கிறானா உன் நாராயணன் என இடிபோல் முழங்குகிறான் இரண்யன். என் நாராயணன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனப் பிரகலாதன் கூற தன் கையிலிருந்த கதாயுதத்தால் தூணை இரண்ட

உப்பிலியப்பன் கோயில்

Image
உப்பிலியப்பன் கோயில்  108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவக் கோவில் ஆகும். பெயர்க்காரணம்     திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்     ஒப்பிலியப்பன் என்ற திருநாமம் பெருமாளுக்கு அமைந்தது.காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று.  இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.     பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

திருப்பனந்தாள்

Image
தலவிருட்சத்தின் பெயராலேயே அமைந்த தலம் திருப்பனந்தாள். அதாவது பனைமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம் இது கோயிலின் பிரகாரத்தில் தெய்வப்பனை மரங்கள் இரண்டு உள்ளன. அவ்வாறே பனையின் பெயரால் ஆகி திருப்பனந்தாள் என்றானது. தன்பொழில் சூழ் திருப்பனந்தாள் -திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் சடாமுடியின் பெயரல் சஞ்சடையப்பர் என்று அழைக்கபடுகிறார். இவர் சுயம்பு மூர்த்தி கலைநயம் வாய்ந்த இத்திருகோயிலில் ஈசன் மேற்கு நோக்கியும் அம்பாள் கிழக்கு நோக்கியும் எழுந்தருளியிருக்கிறார்கள் புராணவரலாறு பனந்தாள் தலத்தில் தாடகை என்ற அசுரகுலமங்கை மலர்கொய்து மாலைக் கட்டி தொண்டு புரிந்து வந்தாள். ஒருநாள் மாலையை இறைவனுக்கு அணிவிக்க முயல அப்போது அவளின் சேலை நழுவ அதனை முழுங்கையால் அழுத்திக்கொண்டு எக்கி மாலை அணிவிக்க முயல அப்போது தாடகையின் சங்கடத்தை தீர்க்க வசதியாகத்தானே தலைசய்த்து மாலையை ஏற்றுக்கொண்டார் இறைவன். எனவே இக்கோயிலுக்கு தாடகையேச்சரம் என்ற பெயர். திருமால்,பிரம்மன்,இந்திரன்,ஐராவதம்,ஆதிசேடன், அகத்தியர் ஆகியோர் இத்தலம் வந்து வழிப்பட்டு அருள் பெற்றுள்ளனர். இவர்களின் பெயரில் தீர்த்தங்களும் உள்ளன. நாகக்கன்னியர் வந்த வழிப்

திருநாகேசுவரம்

Image
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம், நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமை உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நி

மாவீரன் ராஜேந்திர சோழன்

Image
#மொகலாயர்களையும், #ஆங்கிலேயர்களையும் ஓட ஓட விரட்டியடித்த மாவீரன் வரலாறு #பாகுபலி ஒரு கற்பனை கதை ஆனால் அந்த கற்பனையே மிஞ்சி விட  செய்த ஒருவன் நிஜமாகவே இருந்தான் ..ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அந்த மன்னன் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து வந்தான்,,,, அவன்தான் மாவீரன் ராஜேந்திர சோழன் !!! தமிழ் நாட்டில் இன்னும் அந்நியனின் போர்திறனை வியந்து நம் ஒப்பற்ற அரசர்களின் திறனை மறந்தும் மறைத்தும் வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமே…. கிரேக்க மன்னன் அலெக்சாண்டர்,பிரான்சின் நெப்போலியன்,கலிங்க மன்னர் அசோகர்,முகலாய மன்னர் அக்பர் இவர்களை விட போர் திறன்,அரசியல்,சாணக்கியம் ,கலை,இலக்கியம் என அனைத்திலும் சிறந்து விளங்கி வரலாற்றில் மறைந்த, வட இந்திய அரசால்வரலாற்றில் மறைக்கப்படும் ஒரு ஒப்பற்ற தேசங்களை ஆண்ட மன்னன்,இங்கு இருக்கும் ஒவ்வொருவனும் மார் தட்டிக் சொல்லிகொள்ள வேண்டிய ஒரு தமிழன்,இந்த 'இராஜேந்திர சோழன்'.இவனின் காலடிக்கு கூடத்தகுதி அற்றவர்களை மாவீர்ர்கள் என புகழ்ந்துகொண்டு இருக்கிறோம்… . 1.இவ்வருடத்திலிருந்து சரியாக 1000வருடத்திற்கு முன்பு உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த,