Posts

Showing posts from July, 2014

ராஜேந்திர சோழனின் மகிமை - பாலகுமாரன்

Image
ரா ஜே ந்திர சோழனின் மகிமை - பாலகுமாரன் தஞ்சை இனியும் தலைநகராக இருப்பதற்குண்டான தகுதியுடையதாக இல்லை. தெற்கே பாண்டியர்கள், சேரர்கள் அமைதியாக உட்கார்ந்து விட்டார்கள். அந்த இடத்தை ராஜேந்திர சோழனின் மகன்கள் மன்னராக பதவியேற்று ஆட்சி செய்கிறார்கள். வடக்கே கீழை சாளுக்கியம் என்று அழைக்கப்படுகின்ற ஆந்திர மாநிலம் மிக இணக்கமாக இருக்கிறது. ஆனால் வடமேற்கே இருக்கின்ற இப்பொழுது கர்நாடகம் என்று அழைக்கப்படுகின்ற மேலை சாளுக்கியம் இடையறாது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காவிரிக்கு நடுவே தடுப்பணை ஏற்படுத்த அவர்கள் முற்படுகிறார்கள். அல்லது படையெடுத்து வந்து திருவொற்றியூர் வழியாக மயிலை திருவல்லிக்கேணியை தாக்குகிறார்கள். தொண்டை நாடு அவதிப்படுகிறது. தொண்டை நாட்டிற்கு கீழே உள்ள நடுநாடு விரைவில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ராஜேந்திர சோழன் தன்னுடைய தலைநகரை மாற்ற விரும்புகின்றான். இடையே இருக்கின்ற காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, ஆறு போன்றவைகளை தாண்டி படைகள் வரவேண்டியிருப்பதால் அவைகளையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய புல்வெளியை தேர்ந்தெடுத்து அதிலே தன் தலை

கங்கை கொண்ட சோழன்

Image
கங்கை கொண்ட சோழன், கடாரம் வென்றான் என்ற மெய்க்கீர்த்திக்கு சொந்தக்காரரான ராஜேந்திர சோழன் மாமன்னராக முடிசூடிக்கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழா அவரது பிறந்தநாளான 25–ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்ட ி 16 அடி பாயும் என்பதை தனது புஜ, பல பராக்கிரமத்தால் நிரூபித்துக்காட்டிய வீரமறவன் ராஜேந்திர சோழன். இவரது தந்தையார் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற மன்னர் ராஜராஜ சோழன். தமிழரின் கட்டிடக்கலையின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றும் தஞ்சைப் பெரிய கோவிலைக்கட்டி அதன்மூலம் சிரஞ்சீவி புகழைப் பெற்றவர். ராஜராஜ சோழனின் வல்லமையை, தமிழ்ப்பற்றை, நிர்வாகத்திறனை நாடறியும். ஆனால் அவரது மைந்தர் ராஜேந்திர சோழனின் நதிமூலம், ரிஷிமூலம், செயலாற்றல், வீரத்தின் வெளிப்பாடு பெரும்பாலும் வெளி உலகிற்கு தெரியாமல் வரலாற்று செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் சிறைபிடிக்கப்பட்டு விட்டன. பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் பெருமைக் குரியவர் ராஜேந்திர சோழன். விஜயலாய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப்பேரர

திருவாலங்காட்டில் உள்ள வெண்கல நடராஜர் சிலை.

Image
திருவாலங்காட்டில் உள்ள வெண்கல நடராஜர் சிலை.இது ராஜ ராஜ சோழன் காலத்தைச்சேர்ந்தது.

ராஜேந்திர சோழன் காலத்துத் தங்க நாணயங்கள்

Image
ராஜேந்திர சோழன் காலத்துத் தங்க நாணயங்கள்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில்

Image
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் வருகின்றஆடிக்குண்டத்தை ஒட்டி இன்று அம்மனுக்கு இலச்சார்ச்சனை விழா.

கங்கைகொண்டசோழபுரம் கோயில்

Image
கங்கைகொண்டசோழபுரம் கோயில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்ட ினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு நிற்கின்றது.அக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் பல வரலாற்றுத் தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன.முறையே தொகுத்துப் பாதுகாத்தால் வரும் தலைமுறைக்கு வரலாற்றைப் பாதுகாத்துத் தந்தோம் என்ற பெருமை நமக்குக் கிடைக்கும். முதலில் தஞ்சாவூர் சோழர்களுக்குத் தலைநகராக இருந்தது.சோழநாட்டின் எல்லை இராசராசசோழன் காலத்தில் விரிவடைந்த காரணத்தால் படைக்குத் தலைமை ஏற்றுப் பல போர்களைச் செய்த இராசேந்திரசோழன் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு (கி.பி.1012-1044) கொள்ளிடக்கரையின் வடக்கே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பைச் சீர்செய்து கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கினான். கங்கைப் படையெடுப்பில் வெற்றி பெற்றதன் அறிகுறியாக இந்த நகர் உருவானதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். தலைநகரில் கங்கைகொண்டச

இராசேந்திர சோழன் கி.பி. 1012- 1044.

Image
இராசேந்திர சோழன் கி.பி. 1012- 1044. தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென ்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது. இராசேந்திர சோழன் திருஆதிரை (திருவாதிரை) நட்சத்திரத்தில் பிறந்தான்.இராசேந்திர சோழன் மகுடம் சூடியபோது (கி.பி.1012) ஏறத்தால 50 வயது உடையவராக இருந்தார். இராசராச சோழனுக்கு இராசேந்திரன், எறிவலி கங்கைகொண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்காமாதேவியார், இரண்டாம் குந்தவை என்னும் மூன்று பென்மக்களும் இருந்தனர். எறிவலி கங்கைகொண்ட சோழன் இராசேந்திர சோழனின் தம்பியாவான். ( 30 கல்வெட்டுகள் பக்கம் 29,59. வை.சுந்தரேச வாண்டையார் கல்வெட்டு ஆராய்சிக் கலைஞர்.மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.) தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தி

இராசேந்திரன் பெரும்படை

Image
கங்கைப்போர் (கி.பி. 1022 - 23) முதலாம் இராசேந்திரன் பெரும்படையுடன் வடதிசை கங்கை வரை சென்று போரிட்டு வெற்றிகள் பல பெற்று கங்கை நீருடன் திரும்பி, அவ்வெற்ரியின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் பெரும் நகரையும் நிருவி அதனை தன் தலைநகரா கவும் கொண்டான். மேலும் சோழகங்கம் என்னும் ஏரியையும் அமைத்து தன் வெற்றியின் அடையாளச்சின்னமாகவும் ஆக்கினான். வடதிசை போரில் இவன் வெற்றி கண்ட நாடுகள் கீழ்வருமாறு: சக்கரக்கோட்டம் - விசாகப்பட்டினத்திற்கு மேற்கே உள்ள ஒரு நகரம். ஒட்டரதேசம் - ஒரிசா. கோசலம் - கங்கையின் தென்புற நாடு. தண்டபுத்தி - வங்காளத்தின் மிதுனாபுரி மாவட்டம் தக்கணலாட்ட்ம் - பிகாரின் ஒரு பகுதி உதிதிரலாட்டம் - கங்கையின் தென்புறத்திலுள்ள ஒரு பகுதி. கடாரப்படையெடுப்பு (கி.பி. 1025) முதலாம் இராசேந்திரன் தன் கடற்படை மூலம் கடல் கடந்து பல நாடுகளையும் வென்றான். அவையாவன: ஸ்ரீவிசயம் - சுமத்ரா பண்ணை - பனி - சுமத்ரா தீவின் கீழ்கரைப்பகுதி. மலையூர் - சுமத்ராவின் ஒரு பகுதி மாயிருடிங்கம் - மலாய் தீவின் ஒரு பகுதி இலங்காசோகம் - மலாயாவின் கீழ் பகுதி மாபப்பாளம் - மலாயாவின் பகுதி தல

இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி

Image
இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி "திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற" எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார். முழு மெய்க்கீர்த்தி திருமன்னி வளர விருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவிய ராகி யின்புற நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும் தொடர்வன வேலிப் படர்வன வாசியும் சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட லீழத் தரசர்த முடியும் ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும் முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10) சுந்தர முடியு மிந்திர னாரமும் தொண்டிரை யீழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும் குலதன மாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பல்பழந் தீவும் செருவிற் சினவி யிருபத் தொருகால் அரசுகளை கட்ட பரசு ராமன் மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம

காலஹஸ்தி கோயில்

Image
வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காலஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மா ர்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக் கோயிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக் கோயிலுக்கு அளித்துள்ளனர். பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்ட

சோழர்களின் படையெடுப்பால்

Image
சோழர்களின் படையெடுப்பால்------தென்கிழக்கா சிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் இடம்பெற்ற பல பழக்கவழக்கங்கள் தமிழர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். திருமண விழா, சடங்குகள், இறந்தவரை அடக்கம் செய்தல், திருவிழாக்கள் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களைத் தமிழர்களிடமிருந்து அவர்கள் பெற்றார்கள். தமிழர்களுக்கே உரியதும் சோழர் காலத்ததுமான நடராசர் வழிபாடு தாய்லாந்து, காம்போசம், இந்தோ னேசியா போன்ற நாடுகளில் பரவி இருப்பதற்கான சான்றுகள் கிடைத் துள்ளன. இந்நாடுகளில் உள்ள கோயில் சிற்பங்களில் நடராசர் உருவமும் காரைக்கால் அம்மையார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லாலும் செம்பாலும் செய்யப் பட்டுள்ள இந்தச் சிலைகள் இன்ன மும் அந்த நாடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. பியூனான் திருமணச் சடங்குகளும் விருந்தோம்பலும் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. வேட்டி, சேலை அணியும் பழக்கமும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கவேண்டும். காம்போசத்தில் திருமண விழாவில் பரிசம் போடுதல், குழந்தை பிறந்த 9ஆம் நாள் சடங்கு செய்தல் ஆகியவை தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்புடையன. உணவு முறையில் அப்பம்

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000–ஆவது ஆண்டு விழா

Image
ராஜே ந் திர சோழன் அரியணை ஏறிய 1000–ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். இதில் ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூட்டி கொண்டார். மன்னரான இவர் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கி சுமார் 30 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி புர ிந்தார். இவரது ஆட்சிகாலத்தில் தான் வட இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார். அத்துடன் தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார். இந்த போர்களில் பிணைக் கைதிகளாக கொண்டு வரப்பட்ட வீரர்களை கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தை எழில்மிகு நகரமாக மாற்றினார். சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் உட்கோட்டை என்ற இடத்தில் பிரமாண்ட கோட்டை அமைத்து அதற்குள்ளே மாளிகைமேடு என்ற இடத்தில் அரண்மனை அமைத்து ஆட்சிபுரிந்து வந்தான். தனது தந்தை ராஜர

ராஜேந்திர சோழன் 1000 தமிழ்மகன்

Image
ராஜேந்திர சோழன் 1000 தமிழ்மகன் வ ங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்... ''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!'' ''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?'' '' 'அலைக

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டையொட்டி

Image
ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டையொட்டி, தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தொடர் ஜோதி ஓட்டமும், தஞ்சையில் ஆயிரம் மோட்டார் சைக்கிளில் பேரணியும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் சார்பில் இன்று நடைபெற்றது. இந்த பேரண ியை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன், எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி தஞ்சை மேல வீதி, வடக்கு வீதி, கரந்தை, பள்ளிஅக்ரகாரம் வழியாக கங்கை கொண்ட சோழபுரம் சென்றடைந்தது. நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனை இயக்குனர் குருசங்கர், கவுரவதலைவர் முத்துகுமார், பழனியப்பன், மணிமொழியான், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து எழுத்தாளர் பாலகுமாரன் பேசியதாவது:– ராசராசசோழன் மறைவுக்கு பிறகு ராஜேந்திர சோழன் கி.பி. ஆயிரத்து 14–ம் ஆண்டில் அரியணை ஏறினார். வட இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, கம்போடியா, பர்மா, இலங்கை, ஜாவா, நிக்கோபர், தாய்லாந்து ஆகிய நாடுகளை வென்ற இந்திய அரசர் இவர் ஒருவர் மட்டும் தான். இத்தனை சிறப்புமிக்க இவரது ஆட்சியை போற்றும் வகையில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளும் இவர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவும் இன்று நட

குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!

Image
குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்! குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்! சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்.... * வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். * உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். * வாய்ப் புண்

கந்த சஷ்டி கவசம் என்பது

Image
கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பழனி முருகன்மீது பாடப்பட்டது. நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு................ ............. .............................................. ....................................சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக

ரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison )

Image
ரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும்

தங்க மலர்

Image
தங்க மலர்: ராஜராஜ சோழன் வழிபாடு செய்துவந்த செப்புத் திருமேனிக்கு "தெட்சிணமேரு விடங்கரான ஆடவல்லார்' என்று பெயர். மேலை சாளுக்கிய மன்னர்களை வென்றபோது இந்த ஆடவல்லாரின் திருப்பாதத்தில் தங்கத்தாலான மலர்களை இட்டு பூஜை செய்து தன் நன்றியை தெரிவித்தா ன்.ராஜராஜன் உருவாக்கிய நந்தி எது?: நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது. 25 டன் எடையுள்ள நந்தி: தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லோர் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இ

ராஜராஜனின் விட்டுக்கொடுக்கும் குணம்

Image
ராஜராஜனின் விட்டுக்கொடுக்கும் குணம்: ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி என்பதாகும். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் பாட்டி செம்பியன் மாதேவியார், சகோதரி குந்தவை ஆகியோரின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார். அவருடைய மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார். நாட்டுமக்கள் அனைவரும் இளையவன் அருள்மொழியே நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினர். ஆனால், ராஜராஜனின் சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனு க்கு, தானே சோழநாட்டின் மன்னராகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராஜராஜனும் அரியணையை விட்டுக்கொடுத்து அவரை மன்னனாக்கினார். மதுராந்தகச் சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருடைய மறைவுக்குப்பின், தஞ்சைச் சோழர் வரலாற்றில் பொற்காலத்தைப் பதித்தான் ராஜராஜசோழன். கி.பி.,985ம் ஆண்டு தஞ்சைச் சோழ அரசுக் கட்டிலில் அமர்ந்த இவனுக்கு, பட்டம் சூட்டும் வரை அருள்மொழி என்ற பெயரே இருந்தது.

ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி

Image
ராஜராஜனை வணங்கிய அலுவலர்: ராஜராஜசோழன் காலத்தில் பெரிய கோயிலில் நிர்வாக அலுவலராக இருந்தவர் தென்னவன் மூவேந்த வேளாளன். இந்தப் பணியை அக்காலத்தில் "ஸ்ரீகார்யம்' என்று கூறுவர். இவர் ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி ஆகியோருக்கு செப்புப்படிமங்கள் செய்து பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சிலைகளுக்கு தங்க ஆபரணங்களும் அளித்தார். மன்னனையே தன் தெய்வமாகக் கருதி விளக்கும் ஏற்றி வந்தார். அந்த படிமத்தின் முன் திருநீறு மடல் வைத்து வழிபட்டார். இச்சிலைகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சாவூரில் இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆமதாபாத் கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.