கங்கை கொண்ட சோழன்



கங்கை கொண்ட சோழன், கடாரம் வென்றான் என்ற மெய்க்கீர்த்திக்கு சொந்தக்காரரான ராஜேந்திர சோழன் மாமன்னராக முடிசூடிக்கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழா அவரது பிறந்தநாளான 25–ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை தனது புஜ, பல பராக்கிரமத்தால் நிரூபித்துக்காட்டிய வீரமறவன் ராஜேந்திர சோழன்.

இவரது தந்தையார் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற மன்னர் ராஜராஜ சோழன். தமிழரின் கட்டிடக்கலையின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றும் தஞ்சைப் பெரிய கோவிலைக்கட்டி அதன்மூலம் சிரஞ்சீவி புகழைப் பெற்றவர்.

ராஜராஜ சோழனின் வல்லமையை, தமிழ்ப்பற்றை, நிர்வாகத்திறனை நாடறியும். ஆனால் அவரது மைந்தர் ராஜேந்திர சோழனின் நதிமூலம், ரிஷிமூலம், செயலாற்றல், வீரத்தின் வெளிப்பாடு பெரும்பாலும் வெளி உலகிற்கு தெரியாமல் வரலாற்று செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் சிறைபிடிக்கப்பட்டு விட்டன.

பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் பெருமைக் குரியவர் ராஜேந்திர சோழன்.

விஜயலாய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப்பேரரசு, ராஜேந்திரன் காலத்தில் தான் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லை என்ற சிறப்பைப் பெற்றவர் ராஜேந்திர சோழன்.

ராஜேந்திர சோழன் மாமன்னர் ராஜராஜனுக்கும், அவரது மனைவி வானவன்மாதேவிக்கும் ஆடி மாதத்து ஆதிரை நாளில் திருமகனாக பிறந்தவர். மதுராந்தகன் என்பது இவரது இயற்பெயராகும்.

கி.பி.1012–ல் ராஜராஜ சோழனால் இளவரசராக நியமிக்கப்பட்டார். கி.பி.1014–ல் தன் தந்தையின் மரணத்திற்கு பின்பு சோழப்பேரரசராக ராஜேந்திர சோழன் என்னும் திருநாமத்தோடு அரியணையில் அமர்ந்தார். அவர் மாமன்னராக முடிசூடிக்கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழா அவரது பிறந்தநாளான 25–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கி.பி.1044 வரை முப்பதாண்டு காலம் பரந்துப்பட்ட சோழப்பேரரசின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார்.

இந்திய வரலாற்றில் வீரத்தில் இவருக்கு நிகராக மற்றொரு அரசனை கூற முடியாது. ------dinathanthi

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்