சோழர்களின் படையெடுப்பால்

சோழர்களின் படையெடுப்பால்------தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் இடம்பெற்ற பல பழக்கவழக்கங்கள் தமிழர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். திருமண விழா, சடங்குகள், இறந்தவரை அடக்கம் செய்தல், திருவிழாக்கள் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களைத் தமிழர்களிடமிருந்து அவர்கள் பெற்றார்கள்.
தமிழர்களுக்கே உரியதும் சோழர் காலத்ததுமான நடராசர் வழிபாடு தாய்லாந்து, காம்போசம், இந்தோ னேசியா போன்ற நாடுகளில் பரவி இருப்பதற்கான சான்றுகள் கிடைத் துள்ளன. இந்நாடுகளில் உள்ள கோயில் சிற்பங்களில் நடராசர் உருவமும் காரைக்கால் அம்மையார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லாலும் செம்பாலும் செய்யப் பட்டுள்ள இந்தச் சிலைகள் இன்ன மும் அந்த நாடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.
பியூனான் திருமணச் சடங்குகளும் விருந்தோம்பலும் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. வேட்டி, சேலை அணியும் பழக்கமும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கவேண்டும்.
காம்போசத்தில் திருமண விழாவில் பரிசம் போடுதல், குழந்தை பிறந்த 9ஆம் நாள் சடங்கு செய்தல் ஆகியவை தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்புடையன.
உணவு முறையில் அப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை கெமருகள் செய்து முன்நின்றனர். கெமருகளின் நாட்டியக்கலை தமிழக நாட்டிய வழித்தோன்றலே ஆகும்.
தாய்லாந்தில் குழந்தையைத் தொட்டிலில் இடுதல், 3 ஆண்டுகளுக்குப் பின் மொட்டை அடித்துக் காது குத்துதல் ஆகியவை இன்னமும் வழக்கத்தில் உள்ளன.
திருவிழாக் காலங்களில் அன்னதானம் தாய்லாந்தில் காணப்படுகிறது.
திருவிழாத் தொடக்கத்தில் கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் ஆகிய பழக்கவழக்கங்கள் உள்ளன. இறைவழிபாட்டின்போது பழங்களைப் படைப்பதும், பூக்களால் வழிபடுவதும் நடைமுறையில் இருக்கின்றன.
திருப்பாவை, திருவெம்பாவை விழாவினை மார்கழி மாதக் கடைசியில் தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மலேசியாவில் நன்னிகழ்ச்சிகளில் மலர், வெற்றிலை-பாக்கு கொடுத்தல் செய்யப்படுகிறது.
சிங்கப்பூரில் விருந்தினர்களை வழியனுப்பும்போதும், பெரியோரிடம் பேசிவிட்டுத் திரும்பும்போதும் ஏழு அடி பின்சென்று திரும்புகின்றனர். மன்னரை வாழ்த்தும் மரபு சிங்கப்பூரில் தமிழர்களின் வழக்கத்தைப் போலவே அமைந்திருக்கிறது.
மலாய் மக்களின் திருமணச் சடங்கில் ஓம் என்னும் மந்திரம் ஓதப்படுகிறது. மலாக்காவில் தீமிதித்தல் திருவிழா நடைபெறுகிறது.
பாலித் தீவில் பொங்கலைப் போன்று அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
போர்னியோவில் தமிழ் மாதங்களின் பெயர்களே வழக்கில் இருந்து வருகின்றன.
பியூனானில் இறந்தவரை அடக்கம் செய்தலில் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிவருகின்றனர்.
காம்போசத்தில் இறப்பு நிகழுமாயின் 15 நாட்கள் துக்கம் காத்தல் வழக்கத்தில் உள்ளது. 16.ஆம் நாள் தலை மழித்தல் சடங்கும் நடத்தப்படுகிறது.
சம்பாவில் இறந்தவருக்காக உறவினர், பங்காளிகள் தலையை மழித்துக் கொள்கின்றனர். தாய்லாந்தில் ஈமச்சடங்குகள் தமிழர்களின் சடங்குகளைப் போலவே நடைபெறுகின்றன.
பாலியில் சவ அடக்கத்தில் எலும்புகளைப் பானையிலிட்டு கடலில் விடுவது வழக்கமாக இருக்கிறது.
போர்னியோவில் புருனா என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் தமிழ்நாட்டு சைவசமயச் சித்தாந்தக் குறிப்புகள் கிடைத்துள்ளன. பாலியில் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள் தமிழர்களுடையவை போன்றே உள்ளன. தாலாட்டுப் பாடல் பாடுவதும், பொன்னால் செய்யப்பட்ட தாலியைக் கட்டுவதும் அங்கே உள்ளது.
குழந்தைகளுக்கு பெயரிடுதல், தொட்டிலில் இடும் சடங்கு முதலியன தமிழ்நாட்டைப் போன்றவையாக அமைந்திருக்கின்றன.
மியான்மர் எழுத்துக்களில் 33 உயிர் எழுத்துகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான எழுத்துகள் அப்படியே தமிழ் எழுத்துகளால் குறிக்கப்படுகின்றன. 33 மியான்மர் உயிர் எழுத்துக்களும் தமிழ் உயிர் எழுத்துகளின் ஒலியையே கொண்டிருக்கின்றன.
சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலை பற்றிய குறிப்புகள் உண்டு. மலாய் தீபகற்பத்தில் இருந்தவர்கள், மலாய் தீவுகளில் இருந்தவர்கள்தான் வெற்றிலையைத் தமிழ்நாட்டுக்கு முதலில் கொண்டு வந்தார்கள் எனக் கருதப்படுகிறது.
சுமத்திராவில் வாழும் மக்களிடையே காணப்படும் பழங்குடிப் பெயர்கள் தமிழகத்தினைப் பின்பற்றியவை ஆகும். சோழியன், பாண்டியன், பல்லவன், தக்கன் முதலிய பெயர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்