Posts

Showing posts from July, 2018

படித்துறை விஸ்வநாதர் கோயில்

Image
படித்துறை விஸ்வநாதர் கோயில். மயிலாடுதுறை. மூலவர்:காசி விசுவநாதர் தாயார்:விசாலாட்சி முக்தி தலம் காசி. அதற்காகவே காசிக்குச் சென்று வருவார்கள் பக்தர்கள். அந்தக் காசி இருப்பது வடநாட்டில். அங்குள்ள பிரதான தெய்வம் காசி விஸ்வநாதர். அவரே இங்கு தென்னாட்டில், மயிவாடுதுறையில் குடி கொண்டு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம் காசி விஸ்வநாதர்  பாவங்களை போக்குபவர். காசி விசாலாட்சி விசாலாட்சி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள். , காவிரி தென் கரையில் அமைந்துள்ளது அருமையான அமைதியான கோவில். திருத்தருமபுரம் மடத்தின் பொறுப்பில் உள்ள கோயில் இதுவாகும் இந்த ஆலயத்தில் உள்ள மங்கள சனி பகவான் கிழக்கு நோக்கி இருப்பதால் எதிரில் தந்தையான சூரிய பகவானும், குருவாகிய பைரவரும் இருப்பதால் சாந்த மூர்த்தியாக மங்களகரமாக அருள் பாலிக்கின்றார். சனி பகவானை பிரார்த்தித்தால் திருமண தோஷம் விலகும். புத்திரப்பேறு கிடைக்கும், நோய் நொடி இல்லாத ஆயுள் கிடைக்கும். மூன்று நிலை ராஜகோபுரம் முன்புறம் அணி செய்கிறது. அதனை அடுத்து முகப்பு மண்டபமும் உள்ளது. சிறிய முகப்பு மண்டபத்துடன் இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்க

கள்ளர் குடியினரின் சோழ பட்டங்கள்

Image
கள்ளர் குடியினரின் சோழ பட்டங்கள் ======================================= பெருவீரத்தோடு போரிட்டு பல நாடுகளை கைப்பற்றிய தம் குலமரபினருக்கு சோழர்கள் வழங்கிய பட்டங்கள் அருவாநாட்டான் (அருவாநாடு) கங்கைநாட்டான் (கங்கபாடி) தக்கோலாக்கியர் (தக்கோலம்) குச்சிராயர் (குஜராத்), கொல்லமுண்டார் (கொல்லம்) பாண்டியராயன் (பாண்டியர்-மதுரை) மண்ணையார் (மண்ணைக் கடக்கம்) ஈழம்கொண்டார் (ஈழம்) கடாரம்கொண்டார் (கடாரம்) மாணக்கவாரர் (மாணக்கவாரம்) பன்னையார் (பன்னையூர்) சீனத்தரையன் (சீனா) ராசகண்டியன் (கண்டி, இலங்கை) அங்கராயர் (அங்கம்) ஈழத்தரையர் (ஈழம்) கோட்டைமீட்டார் மாளு(வ)சுத்தியார் (மாளுவம்) விசயதேவர் (ஸ்ரீவிசயம்) • அருவாநாட்டான் கரிகால் சோழன் வழி வந்தவர்கள். காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. கரிகால் சோழன் அருவா நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது. (30 கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் கள்ளர் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. இப்பட்டமுட