Posts

Showing posts from 2018

அண்ணல் பேயத்தேவர்

Image
அண்ணல் பேயத்தேவர் ========================= கர்னல் பென்னிகுக் தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் மறைந்திருக்கும் இரத்த சரித்தித்தை பற்றி யாருக்கும் தெரியாது. முல்லை பெரியார் அணை கட்டும் போது அதன் உடனிருந்து அனை கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மற்ற சமூகத்தவரை காட்டிலும் 4000 கும் மேற்பட்ட கள்ளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அந்த காலகட்டத்தில் வனவிலங்கு மற்றும் மலேரியா காய்ச்சலுக்கும் பலியானோர் எண்ணிக்கை கணக்கில்லா. இதில் அதிகம் உயிர் தியாகம் செய்தவர்கள் கள்ளர்களே, மேலும் கர்னல் பென்னி குக் துணையாகவும், பாதுகாப்பகவும் இருந்தவர்கள் கள்ளர்களே. அதில் முதன்மையனவர் அண்ணல் பேயத்தேவர். உசிலம்பட்டி வட்டாரம் அம்மன் முத்தன்பட்டி என்ற கிராமத்தில் 178 ஆண்டுகளுக்கு முன் 1840 இல் மொக்கையதேவருக்கு ஒரே மகனாக பிறந்தார் அண்ணல் பேயத்தேவர். அவரது தாயார் இவரை பெற்று எடுத்து கொடுத்த பெருமையோடு உடல்நல குறைவால் இறைவனடி சேர்த்துவிடுகிறார்.

துலுக்கரிடம் இருந்து சோழ தேசத்தை காத்த புதுக்கோட்டை தொண்டைமான்:-

Image
துலுக்கரிடம் இருந்து சோழ தேசத்தை காத்த புதுக்கோட்டை தொண்டைமான்:- சாதாரண சிப்பாயாக இருந்து படிப்படியாக மைசூரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஐதர் அலி மாபெரும் படைபலத்தை பெற்று தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினான். ஆங்கிலேயரும் ப்ரெஞ்சுகாரரும் அதிகாரப்போட்டியில் இருந்தப்போது ப்ரெஞ்சு அரசாங்கத்துக்கு பேராதரவை அளித்து வந்தான். கிபி 1779 ல் ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு காரர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவு பற்றி எரிய, போர் மேகங்கள் தென்னிந்தியாவிலும் சூழ்ந்தது. ப்ரெஞ்சு காரர்களின் மாகே துறைமுகத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், இதனால் ஐதர் அலிக்கு வெளிநாட்டில் இருந்து வந்துக்கொண்டிருந்த போர் தளவாடங்களின் வருகை நின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக ப்ரெஞ்சு காரர்கள் தலைமையில் பெரும் கூட்டணியை உருவாக்க எண்ணினார் ஐதர் அலி. கிபி 1780 , ஜுலை மாதம் பெரும்படை கொண்டு மைசூரில் இருந்து கிளம்பிய ஐதர், இரு வாரங்களில் பல குறுநிலமன்னர்களை வென்றான். அடுத்து மதுரையை தாக்கிய ஐதர் அலி 11 கிராமங்களை தீக்கிரையாக்கினான். நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்களை தன்னுடன்

ஸ்ரீ கந்தழீஸ்வரர் ஆலயம். குன்றத்தூர்

Image
ஸ்ரீ  கந்தழீஸ்வரர் ஆலயம். குன்றத்தூர் சென்னை. சோழர்காலக் கோயில் இது குன்றத்தூரானது பெரியபுராணம் படைத்த சேக்கிழார் பிறந்த ஊர் இது. ஒரு காலத்தில், சைவ,வைணவ, சாக்த, கொளமார வழிபாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்ட  இடம் குன்றத்தூர் ஆகும்.  'கந்து' என்றால் மரம். ஆதிகாலத்துமுதல், மரத்தைக் கடவுளாக பாவித்து வந்த மக்கள், பின்னர் அம்மரம் முதிர்ந்த பின் அதை மையமாக வைத்துக் கோவில் எழுப்பியுள்ளனர். அந்தக் கோயிலே கந்தழீஸ்வரர் ஆலயம். முருகன் பூஜித்த சிவன்: தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழித்து பின் மனம் அமைதி பெற திருத்தணி நோக்கி புறப்பட்டார் முருகன். குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார். கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது.  முருகன் கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில், வலது புறம் சேக்கிழாரின் கோவில் உள்ளது. இடப் புறம் அடுத்தடுத்து சிவ, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. சேக்கிழ

கல்லீரல்

Image
#கல்லீரல்_பிரச்சனைக்கு #உணவு_முறைகள் - #இயற்கை_மருத்துவம் பைல் சுரப்பு என்பது பித்தமே! தேவைக்கு அதிகமான பைல் சுரப்பு அல்லது சுரப்பின் ஓட்டத்தில் ஏற்படும் தேக்கம் ஆகியன பித்தம் அதிகமாவதையே காட்டுகிறது. ஆயுர்வேத முறைப்படி கல்லீரல் ‘அக்னியின் இருப்பிடம்’ ஆகவே சுலபமாக உஷ்ணம் அடைந்து பலதரப்பட்ட வீக்கம் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றது. கல்லீரலில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நொதிகள் செரிமானம் ஆன உணவை, உடலின் ஐம்பொறிகளின் கட்டமைப்புக்குத் தேவையான ஐந்து மாற்றுகின்றது. பித்த சமநிலை மாறுவதால் உண்டாகும். எதிர்மறை எண்ணங்கள் கோபம், பொறுமை, எரிச்சலடைதல் ஆகியன. பித்த தோ‌ஷம் சரியாக இருக்கும் போது வரும் நேர்மறை எண்ணங்கள், தைரியம், உறுதி, வைராக்கியம், உற்சாகம் ஆகியன. இந்த உணர்வுகளில் தடங்கல், தடுமாற்றம் நேரும் போது, கல்லீரல் செயல்பாடுகளில் மாறுதல் உண்டாகின்றது. #காமாலை கல்லீரலில் சுரக்கும் பைல் சுரப்பு தேவை போக சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் சேர்ந்து வெளியேற்றப்படும். பைல் சுரப்பியில் அல்லது குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அது சிறுநீர், மலத்துடன் சென்றடைய முடியாமல் ரத்தத்தில் கலந்துவ

கிள்ளிக்கொண்டார்

Image
கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் ================================= புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றாண்டார் கோவில் வட்டாரத்தில் அமைந்துள்ளது கிள்ளனூர். இந்த ஊரில் கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் என்பவருக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றனர். இவரை பற்றிய ஆய்வில், அந்த பகுதி மக்களால் செவிவழி செய்தியாக கூறப்படுவது கிள்ளிநாச்சிமுத்து கிள்ளிக்கொண்டார் ஐந்து வெள்ளையர்களின் தலையை கூரிய ஈட்டியால் கொய்து ஊர் மந்தையில் வீசினாராம். வேறு விபரங்கள் எதுவும் தெரியவில்லை.அவர் பெயரால் கிள்ளிக் கோட்டை... கள ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்

இராமானுஜர்

Image
இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர். இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக் காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்.

வேங்கையின் மைந்தன்

Image
வேங்கையின் மைந்தன்-----சோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் கி.பி. 1012 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான். ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங

வாழைப்பழம்

Image
வாழைபழம் & வாழைப்பூவின் மருத்துவக்குணம் மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம் ----------------------------------------- முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும் கனிமங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளதால் இப்பழம் பல நோய்களை கண்டிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் "ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ், சக்ரோஸ்' ஆகிய மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து போன்ற முக் கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள்ளே கொண்டுள்ளது. மேலும், வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் ஆகிய சத்துக்களும் இருப் பதால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது. வாழைப்பழத்தின் வகைகள் ----------------------------------------- ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை

கருவூராரும் ராஜ ராஜ சோழனும்...

Image
கருவூராரும் ராஜ ராஜ சோழனும்...

மக்கள் குலவேந்தர் "மாணிக்கம் ஏற்றாண்டார்

Image
மக்கள் குலவேந்தர்  "மாணிக்கம் ஏற்றாண்டார்" ================================================ மக்கள் தொண்டர் மாணிக்கம் ஏற்றாண்டார் , திருச்சி மாவட்ட ஏற்றாண்டார்பட்டி (நடராசபுரம்) என்னும் சிற்றூரில் கள்ளர் குடியில்  உயர் திரு பரிமணம் ஏற்றாண்டார் உண்ணாமலை அம்மாள் தம்பதியினற்கு மகனாக 1917ம் வருடம் மாணிகம் பிறந்தார். இவரது பெற்றோர் மிகுந்த வளமிக்க விவசாய குடும்பதை சார்ந்தவர்கள், ஏற்றாண்டார் என்றால்  சிறப்பு உடையோர் என்பதற்கு ஏற்ப,  இக்குடும்பம்  கிராமத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் கொண்ட பாரம்பரிய குடுபமாகும். தனது பள்ளிப்படிப்பை ஈ.ஆர் உயர் நிலை பள்ளியில் துவங்கிய இவருக்கு இவருடன் படித்த சக பிராமண மாணவர்களின் நய்யாண்டி செயல்கள் ஆரம்ப முதலே பிடிக்கவில்லை. நீ இவ்வளவு பணக்காரனாய் இருந்துகொண்டு ஏன் இங்கு படிக்க வரவேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாத மாணிக்கம் இப்பள்ளியை விட்டு நீங்கி லால்குடியில் இருந்த அரசு மேல் நிலை பள்ளியில் சேர்ந்து தனது கல்வியை தொடர்ந்தார். இங்கு இவருடன் கல்வி பயின்ற சக மாணவருள் அன்பில் தருமலிங்கமும் ஒருவர். வருமையில் வாழும

செம்பியநாட்டு மறவர்

Image
செம்பியநாட்டு மறவர் பட்டம் கொடுத்தது ராஜராஜசோழன்...நாடாண்ட மறவர் கூட்டம்::-----தலக்காவல்,நாடு காவல்,திசைக்காவல் என்ற அறப்புறங்காவல் முறையிலே தமக்குரிய நாட்டை ஆண்டு வந்தவர்கள் மறவர் கூட்டம்.குறு நில மன்னர்களாக ராமநாதபுரம்,சிவகங்கை,சிவகிரி,சேத்தூர்,கொல்லங்கொண்டான்,நெற்கட்டும் செவ்வல்,தலைவன் கோட்டை சொக்கன் பட்டி,குருக்கள் பட்டி ,சிங்கம்பட்டி,ஊத்துமலை,அழகா புரி,நடுவக்குறிச்சி, சுரண்டை,ஊர்க்காடு,மணியாச்சி,கடம்பூர், ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களை ஆண்டனர்.1782 ல்  திருக்கரங்குடியில் கோட்டை கட்டி வாழ்ந்தவர் சிவராமத்தலைவர் எனும் பாளையக்காரர்.மறவர் குடும்பத்தில் பலம் வாய்ந்த தலைவர்.இவருக்குப்பிறகு இவரது வழியினரே தலைவர் என அழைக்கப்பட்டனர்.நெல்லை மாவட்டத்தில் இன்றும் காணலாம்.ராமநாதபுர மன்னர்களுக்கு செம்பி நாடன் என்றும்,சேற்றூருக்கு சோழகர் என்றும்,விக்கிரம சோழன் என்றும்,கொல்லங்கொண்டார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் காணும் போது இவர்கள் ஆதிகாலத்தில் கள்ளர்கள் என தெரிகிறது.1799 ல் 2113 கிராமங்கள் நெல்லை மாவட்டத்தில் 1635 கிராமங்கள் மறவர்களுக்கு சொந்தம். கி பி 1059 ல் இலங்கைக்கு படையெடுத்து சென்றான் ராஜ

மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு

Image
இந்திய சுதந்திரத்துக்கு அன்றே  குரல் எழுப்பிய மருதுபாண்டிய மன்னர்களின் வரலாறு வாஸ்கோட காமா கடல்வழிப் பயணமாக மேற்குக் கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு அருகில் 20-5-1498ல் முதன்முதலில் வந்த பின்னர்தான், ஐரோப்பியர்கள் தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் வணிக நிமித்தமாக வரத் தொடங்கினார்கள். வணிக நிமித்தமாக வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக இந்தப் பகுதியின் ஆட்சியையும், அதிகாரத்தையும், கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஐரோப்பியர்களில் குறிப்பாக ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸ் போன்ற  ஐரோப்பிய நாட்டவர்களைக் குறிப்பிட்ட சில எல்லைக்குள் கட்டுப்படுத்தி, பெரும்பாலான பகுதிகளைத் தங்களது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். தென்னிந்தியப் பகுதிகளில் வலு இழந்திருந்த ஆற்காட்டு நவாப்பையும், சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கி போன்ற நவீன ஆயுத பலத்தால் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். சில பகுதிகளில் அவர்களின் வாரிசு உரிமைகளிலும் தலையி

பசும்பொன் தேவர்

Image
"பசும்பொன் தேவருக்கு செய்த துரோகத்தின் பலனை காமராஜர் உட்பட அனுபவித்தார்கள்" "சிசுபாலனை வதம் செய்வது போல் தேவரை வதம் செய்வோம்" என்று பேசிய பக்தவத்சலம் படுதோல்வி அடைந்தார். இனக்லவரத் தீயை மூட்டி விட்டு முதுகுளத்தூரில் குளிர்காய நினைத்த காமராஜரும், கக்கனும், பெ.சீனிவாசன், ஓ.பி.ராமன் என்ற இளம்பிள்ளைகளால் தோற்கடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். விவசாய உற்பத்தி பண்ணுகிற பொருளுக்கு விலை வைக்கிற உரிமை விவசாயிக்கு வேண்டும். பங்குனி சித்தரை மாத வெயிலிலே முதுகெல்லாம் உப்புபரிய பருத்தியை ஏடுப்பது நம்முடைய தாய்மார்கள். அந்தப் பருத்திக்கு பொதி ஒன்றுக்கு இன்னதென்று விலை வைப்பவன் விருதுநகர் வியாபாரி. இந்த அநியாயம் ஒழிய வேண்டாமா? என்று 1957 தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் பேசியது எந்த அளவுக்கு காமராஜருக்கும் அவரது உறவினர்களுக்கும் கோபத்தை மூட்டியது என்பதுதான் மூட்டிவிடப்பட்ட முதுகுளத்தூர் கலவரம். அந்த கலவரத்தின் மூலம் தேவரையும் தேவரைப் பின்பற்றும் மக்களையும் அழிக்க அன்றைய காங்கிரஸ் ஆட்சி செய்த அக்கிரமங்கள், அட்டூழியங்கள், அடக்கு முறைகள், துப்பாக்கிப் பிரயோகங்கள் நாட்டையே சுட

சோழர்களின் வழித்தோன்றல் கள்ளர்கள்

Image
***சோழர்களின் வழித்தோன்றல் கள்ளர்கள்*** கிபி1279ல் சோழர்கள் ஆட்சி முற்றிலுமாக அழிந்துவிட்டாக பலரும் கருதுகின்றனர். ஆனால் கிபி1471 முதல் 1496வரை சோழர்களின் வழித்தோன்றல் காடவராயர் பட்டம் தாங்கிய கோனேரிராயன் என்ற மன்னர் தஞ்சை,புதுக்கோட்டை,ஆற்காடு பகுதிகளை உள்ளடக்கி ஆண்டு வந்தார். நரசம நாயக்க மன்னர் கோனேரிராயனை சோழன் என்றே தனது கல்வெட்டுகளில் குறித்துள்ளார். சரி இதற்கும் கள்ளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், தஞ்சையில் முதன் முதலாக நாயக்கர் மன்னர் கிபி1532ல் தஞ்சை மன்னராக முடிசூட்டிக்கொள்கிறார். அதாவது கோனேரிராயன் இறந்து சுமார் 36வருடங்கள் கழித்து சேவப்ப நாயக்கர் தஞ்சை மன்னராக முடி சூட்டிக்கொள்கிறார். இதனை நாயக்கர் வரலாற்று ஆய்வாளர் திரு.குருகந்தி சீத்தாராமைய்யா அவர்கள் தஞ்சை மண்டலத்தை நாயக்கர்கள் முழுமையாக கைப்பற்றுவதற்கு முன்பு தஞ்சையில் சோழர்களின் வழித்தோண்றலாகிய கள்ளர் பெருங்குடிகள் தஞ்சையில் பல இடங்களில் சிற்றசர்களாகவும்,குறு நில மன்னராகவும் சுருங்கிவிட்டனர் என்று கூறுகிறார். அவர் எழுதிய புத்தகத்தில் கள்ளர்களே சோழர்கள் என்றும் கூறுகிறார்.

வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !!

Image
வலி நிவாரண மாத்திரைகள் எச்சரிக்கை !! உடல்வலி மற்றும் தலைவலிக்காக பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவில் வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்பவர்கள் விரைவில் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ப்ரூபின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 1995 முதல் 2009 ஆம் ஆண்டுவரை 14 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 வயது முதல் 48 வயது வரை 62000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது. அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என

ப‌ச்சை‌ப் பரு‌ப்பு

Image
ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம். உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம். ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம். உட‌ல் வ‌லிமை பெற, மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி ப‌ச்சையாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

இராசராச சோழன்

Image
தஞ்சை பெரிய கோயிலைக்கட்டிய இராசராச சோழன்,விமானம் முழுவதும் தங்கத் தகடுகள் போர்த்தியதாக “ராஜராஜீஸ்வரமுடையார், ஸ்ரீவிமாநம் பொன் மேய் வித்தான்….” என்று தனது கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கி.பி.,1310 மற்றும் 1318ல் முறையே அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் கபூராலும் குஸ்ரூகானாலும் பெரிய கோயிலின் செல்வங்கள் யாவும் கொள்ளை அடிக்கப்பட்டன. பெருவுடையார் கோயிலில். ராஜராஜசோழன் தன் கல்வெட்டு ஒன்றில் “தாய்மண் காக்க உதிரம்கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலங்களை கொடையை அளித்துள்ளதை பொறித்து வைத்துள்ளார்.. மேலும்,போருக்குச்சென்ற தன்னுடைய படைத்தளபதிகள் உறுப்புகள் எவ்வித ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டுமென்று தஞ்சை பெருவுடையாரை (சிவனை)வேண்டி நிவந்தங்கள் விட்டுள்ள செய்திகளும் பெரியகோயில் கல்வெட்டுக்களில் உள்ளன.

ஸ்ரீ உலகாட்சியம்மன் திருவிடைமருதூர்.

Image
ஸ்ரீ உலகாட்சியம்மன் திருவிடைமருதூர். முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான். பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் . முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான் போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். இவ் ஆலயம் முதல் பராந்தக சோழனால் கட்டப்பட்டது கற்றளியாக கட்டப்பட்டு காலங்களால் அழிக்கப்பட்டு கீற்று கொட்டகையில் நெடு நாள் இருந்தவளை இன்று சிறு கோவில் கட்டி வைத்துள்ளனர். திருவிடைமருதூர் சிங்கநீர் மேடு என சொல்லப்படும் பெரிய குளக்கரையில் இவ் உலகத்தை ஆட்சி செய்யும் உலகாட்சியம்மனாய் அருள்பாலிக்கிறார். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க பெருமான் தன்னை தானே பூஜித்து கொண்டு   ஏகநாதனாய் இவ்வூர் த