பசும்பொன் தேவர்

"பசும்பொன் தேவருக்கு செய்த துரோகத்தின் பலனை காமராஜர் உட்பட அனுபவித்தார்கள்"

"சிசுபாலனை வதம் செய்வது போல் தேவரை வதம் செய்வோம்" என்று பேசிய பக்தவத்சலம் படுதோல்வி அடைந்தார். இனக்லவரத் தீயை மூட்டி விட்டு முதுகுளத்தூரில் குளிர்காய நினைத்த காமராஜரும், கக்கனும், பெ.சீனிவாசன், ஓ.பி.ராமன் என்ற இளம்பிள்ளைகளால் தோற்கடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

விவசாய உற்பத்தி பண்ணுகிற பொருளுக்கு விலை வைக்கிற உரிமை விவசாயிக்கு வேண்டும். பங்குனி சித்தரை மாத வெயிலிலே முதுகெல்லாம் உப்புபரிய பருத்தியை ஏடுப்பது நம்முடைய தாய்மார்கள். அந்தப் பருத்திக்கு பொதி ஒன்றுக்கு இன்னதென்று விலை வைப்பவன் விருதுநகர் வியாபாரி.

இந்த அநியாயம் ஒழிய வேண்டாமா? என்று 1957 தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் பேசியது எந்த அளவுக்கு காமராஜருக்கும் அவரது உறவினர்களுக்கும் கோபத்தை மூட்டியது என்பதுதான் மூட்டிவிடப்பட்ட முதுகுளத்தூர் கலவரம். அந்த கலவரத்தின் மூலம் தேவரையும் தேவரைப் பின்பற்றும் மக்களையும் அழிக்க அன்றைய காங்கிரஸ் ஆட்சி செய்த அக்கிரமங்கள், அட்டூழியங்கள், அடக்கு முறைகள், துப்பாக்கிப் பிரயோகங்கள் நாட்டையே சுடுகாடாக்கிய கோரத்தாண்டவங்கள் இவைகளுக்கு எல்லாம் பழிதீர்த்துக் கொண்டனர் தேவருடைய திருத்தெண்டர்கள்.

நைஷ்டீக பிருமச்சாரியான தேவரது உடல் நலம் குன்றியதே தேவர் புதுக்கோட்டை சிறையில் இருந்த போது அவருக்கு காங்கிரஸ் கட்சி செய்த வஞ்சக சதி திட்டத்தின் விளைவுதான் என்பதைத் துணிந்து சொல்கிறார் ஏ.ஆர்.பெருமாள்.

எப்படியும் தேவருடைய அரசியலையும், புகழையும் அழித்தே ஆக வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து தேவர் மீதும் தேவரை பின்பற்று மக்கள் மீதும் பாய்ந்தது.

காங்கிரசார் செய்கிற லஞ்ச லாவண்யங்களை கண்டித்தார். கள்ள மார்க்கெட் செய்யும் காங்கிரஸ்காரர்களை கடுமையாகச் சாடினார். கோட்டா, பெர்மிட், லைசென்ஸ் என்று நாட்டையே சூறை ஆடும் ஒரு கொள்ளைக் கூட்டமாக காங்கிரஸ் மாறி விட்டதை நாட்டு மக்கள் உணரும்படியாகப் பேசினார். கள்ளநோட்டு அடிக்கிற கும்பலுடன் கூட முதல் மந்திரி காமராஜர் தொடர்பு என்று பேசினார்.

தேவரின் இத்தகைய பேச்சுக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் காமராஜருக்கும் கோபத்தை உண்டாக்கியது. அதன் விளைவாகத்தான் மேலே சொன்ன இத்தனை அநியாயங்களும் நடந்தன.

தேவருக்கு காங்கிரஸ் கட்சி செய்த தீமைக்குத் தண்டனை தான். ஆட்சியை பறி கொடுத்து விட்டு பல ஆண்டுகள் கோட்டைக்குள்ளே நுழைய முடியாமல் பொட்டலிலே நின்று கூப்பாடு பொடுகிறது.

தேவருக்கு செய்த துரோகத்தின் பலனை காமராஜர் அனுபவித்தார். 1967-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்து விட்டு வீதயிலே நின்றார். அப்புறம் கோட்டைப் பக்கம் தலைவைத்துக் கூட காமராஜரால் படுக்க முடியவில்லை. காங்கிரசின் சரித்திரம் 1967-ம் ஆண்டு முடிந்தது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்