ஸ்ரீ உலகாட்சியம்மன் திருவிடைமருதூர்.




ஸ்ரீ உலகாட்சியம்மன்
திருவிடைமருதூர்.

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான்.

களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது .

அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.

பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .

முடிவில் பராந்தகன் மதுரையை
கைக்கொண்டான்
போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான்.

பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.

இவ் ஆலயம்
முதல் பராந்தக சோழனால் கட்டப்பட்டது

கற்றளியாக கட்டப்பட்டு காலங்களால் அழிக்கப்பட்டு கீற்று கொட்டகையில் நெடு நாள் இருந்தவளை
இன்று சிறு கோவில் கட்டி வைத்துள்ளனர்.

திருவிடைமருதூர் சிங்கநீர் மேடு என சொல்லப்படும் பெரிய குளக்கரையில்
இவ் உலகத்தை ஆட்சி செய்யும்
உலகாட்சியம்மனாய் அருள்பாலிக்கிறார்.

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க பெருமான் தன்னை தானே பூஜித்து கொண்டு   ஏகநாதனாய் இவ்வூர் தலத்தில் இருப்பது போல உலகமே எனது ஆட்சியில் தான் என சொல்வது
போல இவ்வூரில் உலகாட்சியம்மனாய் இருக்கிறாள் சக்தி. 

அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம்.

எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.

எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.

அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள்.

தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள்.

சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும்.

தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது.

இதனால் அகிலாண்டேசுவரி என்றும்
ஆதிசக்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
அகிலாண்டேசுவரி என்றால் உலகை ஆட்சி செய்பவர்
உலகாட்சியம்மன்தானே.

சிங்கநீர் குளம் இப்போது தூர்வாரப்படுவது மகிழ்ச்சியான செய்தி.

மேலும் நம்மை ஆட்சி செய்பவளின் கோவிலின் பின் புறம் கொஞ்சம் சுத்தமாக வைத்துக்கொள்வதும் ஒவ்வொரு மானுடக் கடமை. 
இளைஞர்கள் கொஞ்சம் கவனம் கொள்க.

திருவிடைமருதூர் தெற்கு வீதியில் இக் கோவில் அமைந்துள்ளது.

திருவிடைமருதூர்
கும்பகோணத்தில் இருந்து 10km தூரத்தில் உள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்