Posts

Showing posts from 2021

ஓம் ஸ்ரீ மீனாம்பிகை

Image
ஓம் ஸ்ரீ மீனாம்பிகை                போற்றி  ஆடி முளைக்கொட்டு விழாவில் அன்னை  பூப்பல்லக்கு சேவை மாதர்கள்    குலத்திலக      மரகத        மணியே! நாதர்தன்    அகந்திகழும்      நாணிலத்        தொளியே! வேதியர்     உளந்திகழும்      மாணிக்க        விழியே! பூதொடு    ரதந்திகழும்       புண்ணிய         வழியே...! 🌹மதுரை  

ஆடி மாதம்

Image
  அற்புதமான மாதம்: ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம். இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறைவனை வழிபடுவதில் கவனம் சிதிலம் அடையும் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.

ஜெய் ஸ்ரீராமஜெயம் !!

Image
*ஸ்ரீ ராமஜெயம்* *முதலில் எழுதியது யார்..!?* போரில் ராவணனை வீழ்த்திய ராமர், இந்த நல்ல செய்தியை யார் சீதையிடம் சென்றுக்கூறுவது என்று யோசிக்கும்பொழுது,  நான் நீ என்று பலர் முன்வந்தார்கள். ஆனால் ராமரோ ஆஞ்சநேயர்தான் இதற்குச் சரியான ஆள் என்று அனுமனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார் ! ராமரின் ஆணையை சிரமேற்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சநேயருக்கு, சந்தோஷ மிகுதியால்  பேச முடியவில்லை.  கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இதைக் கண்ட சீதைக்கோ ஏன் அனுமனின் கண்களில் கண்ணீர் என்ற கவலை ! இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன், சந்தோஷத்தில் வாய் பேச முடியவில்லை என்றால் என்ன,  ராமர் வெற்றி பெற்ற நற்செய்தியை எழுதி காண்பிக்கலாமே என்று  *"ஸ்ரீ ராமஜெயம்"* என்று மண்ணில் எழுத, அதைப்படித்த சீதாப்பிராட்டியாரும் செய்தியறிந்து சந்தோஷமடைந்தார்...! *ஜெய் ஸ்ரீராமஜெயம் !!  

பூண்டி ஐயா

Image
 தஞ்சை மாநகரத்தின் பெரும் பகுதி ஜமீனாக இருந்த #துளசி_அய்யா_வாண்டையார் குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டது தான். அவருக்கு சொந்தமான பூண்டி புஷ்பம்  கல்லூரியில் செயலாளராக இருந்து கடைசி வரை ஒரு பைசா கூட நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வித்திட்டவர். அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் பல அரசு பதவிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனால் டெல்டா பகுதியில் துளசி அய்யா வாண்டையாரை `#கல்வி_காவலர்’ என்றே அழைக்கின்றனர்.      காந்திய கொள்கையை உறுதியாக பற்றி கொண்டு கடைசி வரை கடைபிடித்தவர். #காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்து வந்தார். உணவு கட்டுப்பாடு, யோகா, தினசரி மூச்சு பயிற்சி என எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், கடைசி வரை மருத்துவமனைக்கு பக்கமே எட்டி பார்க்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர். .      தனக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அதை விட கூடுதலான பரிசை கொடுத்து அன்பால் திணறடிப்பார். நேரம் தவறாமைக்கு உதாரணமாக இருப்பார்.

துளசி ஐயா வாண்டையார்

Image
 கல்வித் தந்தை பூண்டி அய்யா மறைந்தார்.......🙏🙏🌸🌺🙏🙏                     உச்சி  வெயிலுல செல்லாத்தா... நம்ம உச்சந்தல கருகல. கொட்டுற மழையில செல்லாத்தா... நம்ம குடுசைங்க ஒழுகல. ஆண்டவனை வேண்டல செல்லாத்தா... மாண்டவனை வேண்டல. வாண்டையாரு வடிவத்தில செல்லாத்தா... வணங்குவோம்டி கடவுள!' நாற்று நடவு செய்யும் பெண்கள், அலுப்புத் தெரியாமல் இருக்க பெருங் குரலெடுத்துப் பாடுகிறார்கள் இன்றும் பூண்டியிலே. சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகள், நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. “அருள்மொழித்தேவன் வளநாடு - ராஜராஜன் வளநாடு - ராசாச்சரயன் வளநாடு - கேரளாந்தகன் வளநாடு” என்று பிரிக்கப்பட்டபொழுது, ‘நித்தவினோத வளநாடு’ என்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அந்த நித்தவினோத வளநாடுதான் பூண்டி மண்டலம். அந்த நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம். இந்தத் தஞ்சையில் எழுப்பப்பட்டு இருக்கிற பிரகதீஸ்வரர் ஆலயம், பொன்னியின் செல்வன் கட்டி

ஆதி சங்கரர்ஜெயந்தி

Image
 ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்  நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்..!! வேதம், வேதாந்தம், புராணம் ஆகியவைகளின் இருப்பிடமாக இருப்பவரும்,  அனைவருக்கும் எப்பொழுதும் மங்களங்களை அருள்பவரும்... கருணாமூர்த்தியான சங்கரரின் பாதாரவிந்தங்களைப் பணிகிறேன்...! இன்று  ஆதிசங்கரர் ஜெயந்தி ...!!

ஆதி சங்கரர்

Image
 1. சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும். 2. ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார். 3. விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன. 4. பத்ரிநாத், திருச்செந்தூர் உள்பட பல ஆலயங்களில் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் அர்ச்சகர்களாக இருந்து பூஜை செய்யும் முறையை ஆதிசங்கரர் உருவாக்கினார். 5. ராமேசுவரம் கோவிலில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கொண்டு வந்ததும் ஆதிசங்கரரே. 6. காசியில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நவனாப் புதிய சிந்தனை பெற்ற ஆதிசங்கரர் ‘மனீஷா பஞ்சகம்’ என்ற 5 சுலோகங்களை இயற்றினார். 7. ஒரு தடவை ஆதிசங்கரர் இமயமலையில் அடர்ந்த காட்டுக்குள் தியானம் செய்ய சென்றார். அப்போது அவர் கமண்டலத்தையும் தண்டத்தையும் தூக்கி வீசினார். அந்த தண்டம் மரமாகவும் கமண்டலம் நதியாகவும் மாறியது. 8. அம்பாளை 64 உபகாரங்களை அளித்து வழிபடு

கூசார் பட்டமும் செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி சோழனும்

Image
 கள்ளர் குடியினரின் #மோரியர் / #நந்தர் / #கூசார் பட்டமும் செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி சோழனும் 🔰😍 கள்ளர்களின் மிகவும் பழமையான பட்டங்களில் ஒன்று மோரியர் (மூரியர்) பட்டம் (மன்னர் வகையறா திரைப்படத்தில் கள்ளர் மரபினரின் "மூரியர் பட்டம்" கதநாயகன் குடும்ப பட்டமாகவும், "வாண்டையார் பட்டம்" கதாநாயகி குடும்ப பட்டமாகவும், "தேவர்" பட்டம் தாய் மாமன் பட்டமாகவும் காட்டப்பட்டிருக்கும்). செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி சோழன் (கி.மு. 320 - 270) காலத்திற்றான் தமிழகத்தில் மோரியர் படையெடுப்பு நடந்ததைப் பல பாடல்கள் குறிக்கின்றன. பழந்தமிழர், மோரியர்க்கு முற்பட்டுப் பாடலியைத் தலைநகரமாகக் கொண்டு மகத நாட்டை ஆண்ட நந்தர் என்பவரையும் நன்கறிந்திருந்தனர். தமிழ்ப் புலவர் தெளிவாக ‘மோரியர்’ எனக் குறித்தல் சந்திர குப்த மோரியர் மரபினரையே ஆகும். மாமூலனார் என்னும் நல்லிசைப் புலவர் சிறந்த வரலாற்று உணர்ச்சி உடையவராகக் காணப்படுகிறார். அவர் ஒரே செய்யுளில் நந்தரைக் குறித்துப் பின் மோரியர் படையெடுப்பையும் கூறியுள்ளார். புலவர் பலர் இச் செய்தியைக் குறித்துள்ளனர்: விண்பொரு நெடுங்குடைக் கொடித்த

வைத்தியநாதர்_திருமழபாடி

Image
#வைத்தியநாதர்_திருமழபாடி இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச #நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது.  நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும் என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், #இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.இங்குள்ள #பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன.  சிவன் பிரகாரத்தில் இரண்டு #தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது.  அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது.பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் #நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர்.  மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் #மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு. தஞ்சாவூர் மற்றும் லால்குடியிலிருந்து 28கி.மீ தூரத்தில் உள்ளது.  

போர்க்குடிகள்

Image
பிரிட்டீசார் பார்வையில் முக்குலத்தோர்:  100 தகவல்கள்..... கிபி 1891 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Census of india- Madras எனும் நூலில் போர்க்குடிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ் சாதிகள் முக்குலத்தோர் மட்டுமே.  கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார்கள் போர்க்குடிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். முக்குலத்தோரான கள்ளர்,  மறவர் மற்றும் அகமுடையாரின் வாழ்வியலை பற்றிய தகவல்கள் கிபி 1906 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Caste and tribe's of southern india எனும் தெளிவாக தரப்பட்டுள்ளது. பிரிட்டீசார் தாங்கள் நேரில் கண்டவற்றை தங்களது புரிதலுக்கு ஏற்ப பதிவு செய்துள்ளனர். இந்நூலில் உள்ள சில அரிய தகவல்களை காண்போம்.. 1906 ஆம் ஆண்டை நோக்கி செல்வோம்.... 👉01) தஞ்சாவூர்,  திருச்சிராப்பள்ளி,  மதுரை ஆகிய மாவட்டங்களிலும் புதுக்கோட்டைப் பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படும் நடுத்தர உடல்வாகும்,  கறுத்த நிறமும் கொண்ட பழங்குடி மக்கள் கள்ளர்கள்.  👉02) பல்லவர் நாடான தொண்டை மண்டலமே கள்ளர்கள் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த நாடாகும். இந்த வகுப்பின் தலைவரான புதுக்கோட்டை மன்னர் இன்றும் தொண்டைமான் என அழைக்கப்படுகிறார். 👉03) 1891 கணக்கெடுப்

முதலாம் ராஜேந்திரன்

Image
 முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.....        இலங்கை மன்னரிடமிருந்து #இரத்தினக்கிரீடத்தை (பாண்டியமணிமுடி) கைப்பற்றும் சோழவேந்தா் #ராஜேந்திரசோழதேவர் படம் : அண்ணன் Deiva Arts   #அற்புதமானபடைப்பு .....படம் உபயம்.....அமர்நாத் அருள்