வைத்தியநாதர்_திருமழபாடி

#வைத்தியநாதர்_திருமழபாடி




இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச #நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. 

நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும் என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், #இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.இங்குள்ள #பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. 

சிவன் பிரகாரத்தில் இரண்டு #தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. 

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது.பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் #நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். 

மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் #மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

தஞ்சாவூர் மற்றும் லால்குடியிலிருந்து 28கி.மீ தூரத்தில் உள்ளது.


 

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

திருவண்ணாமலை மலை ஒரு எரிமலை