Posts

Showing posts from 2014

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

Image
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் .

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

Image
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

"வேலு நாச்சியார்"

Image
- "வேலு நாச்சியார்" ----வடநாட்டில் ஜான்சி ராணி தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர். ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783 முடிசூட்டு விழா கி.பி 1780 பிறப்பு 1730 பிறப்பிடம் இராமநாதபுரம் இறப்பு 25 டிசம்பர், 1796 முன்னிருந்தவர் முத்து வடுகநாதர் அரச வம்சம் சேது மன்னர் உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரர்களை அடக்கி மண்டியிட வைத்தவர். வெள்ளையர்கள் மன்னிப்பு கேட்ட ு பட்டயம் அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிடம் மட்டும் தான் .வெள்ளையரை போரில் வென்ற முதல் மகாராணியும் இவர்தான். . "வேலு நாச்சியார்" இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்னும் ஊரில் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாருக்கு பிறந்தவர். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றாற் போல், வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் பத்து மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம் பெண் வே

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

Image
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 4 கிமீ தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயில் மண்டபங்களின் மேல் கூரையிலும் தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள். ஒரு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள குட்டி 'மினியேச்சர்' சிற்பங்களும் உண்டு. இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலைத் தன் உயிரைக் கொடுத்துக் கட்டியிருக்கிறான் இந்த சோழ மன்னன். இவனுடைய முன்னோர்கள ் ராஜராஜன் தஞ்சை கோயிலை 13 அடுக்கு கோபுரத்துடனும் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் 9 அடுக்கு கோபுரத்துடனும் சிவன் கோயில்களை அமைத்தனர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் ஐந்து அடுக்குகளுடன் ஐராவதேஸ்வரர் கோயிலின் கோபுரத்தை அடக்கமாக உருவாக்கினான். ஆனால் உள்ளே தேர்வடிவ முக மண்டபத்தை எழுப்பியும் காலத்தால் அழியாத அரிய சிற்பங்களையும் தூண்களையும் உண்டாக்கியும் தன் கலைச்செறிவினால் வரலாற்றில் தனியிடம் பெற்றான். ராஜராஜனும் ராஜேந்திரனும் "மகேஸ்வர சிவம்" என்னும் சிவனே உயர்ந்தவன் என்னும் கொள்கையைத் தழுவி, அதைப் போற்றும் வகையில் தங்கள் கோயில்களைக் கட்டி

தில்லை நடராஜர் கோயில் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது

Image
தில்லை நடராஜர் கோயில் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது..சிதம்பரம் , "தில்லை" என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

தில்லை நடராஜர் கோயில்

Image
தில்லை நடராஜர் கோயில்------இக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜ தேவன், மூன்றாங் குலோத்துங்கசோழதேவன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் திரிபுவனச்சக்கர வர்த்தி வீரபாண்டியதேவன், சடாவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரகேரளனாகிய குலசேகரதேவன் இவர்கள் காலங்களிலும், பல்லவரில் அவனி ஆளப்பிறந்தான் கோப்ப ெருஞ்சிங்கதேவன் காலங்களிலும், விசய நகர வேந்தர்களில் வீரப்பிரதாபகிருட்டிணதேவமகாராயர், வீரப் பிரதாப வேங்கடதேவமகாராயர், ஸ்ரீ ரெங்கதேவமகாராயர், அச்சுத தேவமகாராயர், வீரபூபதிராயர் இவர்கள் காலங்களிலும், கொச்சி பரம்பரையில் சேரமான் பெருமாள் நாயனாரின் வழித் தோன்றிய இராமவர்ம மகாராசா காலத்திலும்; சாளுவ பரம்பரையில் வீரப் பிரதாபதம்முராயர் I காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளையன்றி இக்கோயிலைப் பற்றி வேற்றூர்களில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் இருக்கின்றன. .

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில்

Image
மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.

நடராசர் கோவில்

Image
பிரமாண்டமான பழமையான நடராசர் கோவில் 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பரத நாட்டிய கலையின் 108 வகை தோற்றங்கள் இந்த கோவிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் கூரையை தங்க தகடுகளால் சோழன் குலோத்துங்கன் அமைத்துள்ளான். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சீர்காழியில் பிரமபுரீஸ்வரர்,சட்டநாதர், கோனியம்மன் திருநிலை நாயகி கோவில்கள் உள்ளன.

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம்

Image
சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது. சிதம்பரம் கோயில் வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர். சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந

ஆங்கிலப்புத்தாண்டு------கிரெகொரியின் நாட்காட்டி

Image
ஆங்கிலப்புத்தாண்டு------கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது. இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்ட ில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்

தில்லை நடராஜர் கோயில்------மூர்த்திகளின் பெயர்கள்

Image
தில்லை நடராஜர் கோயில்------மூர்த்திகளின் பெயர்கள் இப் பெரும்பற்றப்புலியூரில் மூலத்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமூலத்தானமுடையார் என்றும், பேரம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் ஆளுடையார் என்றும், சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருச்சிற்றம்பலமுடையார், தில்லை நாயகத் தம்பிரானார், ஆநந்தத்தாண்டவப்பெருமாள், பொன்னம்பலக்கூத்தர், சிதம்பரேசுவரர் என்றும், அம்மன் சிவகாமசுந்தரியார் என்றும், அம்மனுக்குரிய திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாய்ச்சியார் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர்.

"முத்து ராமலிங்கம், என் தம்பி"

Image
நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவ ராக நேதாஜி தேர்ந்து எடுக்கப் பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார். கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார்.

தேவர்

Image
தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார். இந்நாட்டிற்ககாக வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர்.

அவனன்றி யோரணுவும்

Image
அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய ஆப்தர்மொழி யொன்றுகண்டால் அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை அறிந்தார்கள் அறியார்களார் மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுமவரார் மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும் வன்மையொ டிரக்கமெங்கே புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம் பூதபே தங்களெவிடம் பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு பொறைபொறா மையுமெவ்விடம் எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர் யாதுமுனை யன்றியுண்டோ இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி எங்குநிறை கின்றபொருளே------தாயுமானவர ்

தேசியமும் தெய்வீகமும்

Image
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் வீரமற்ற விவேகம் கோழைத்தனம் - விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்------தேவர்

இவரா ஜாதிய வாதி?

Image
அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு போடும் தினத்தன்று ஒரு வாக்குசாவடிக்கு செல்கிறார் அப்போதைய முதல்வர் காமராஜர் வரிசையிலே நான்கு பார்வையற்றவர்கள் அங்கு வந்தனர் அது 1957 ஆம் ஆண்டுகளில் இன்று மாதிரி ஓட்டு இயந்திரமெல்லாம் கிடையாது ஓட்டு சீட்டு தான் பார்வையற்றவர்கள் ஓட்டு போட அங்கிருக்கும் இருவர் உதவி செய்ய வேண்டும் அதாவது அவர்கள் சொல்லும் சின்னத்திற்கு ஒருவர் ஓட்டு போட மற்றவர் அதை உறுதி செய ்யவேண்டும் ஓட்டு பெட்டி இருக்குமிடத்திற்கு பார்வையற்றவர்களை அழைத்துச்செல்கிறார்கள் காமராஜரும் அங்கிருந்து வெளியேற சரியாக இருந்த நேரம் பார்வையற்றவர்கள் சொன்ன வார்த்தை காமராஜரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அப்படியே வந்து வண்டியில் ஏறியவர் தனது டிரைவரிடம் இந்த முறையும் அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் தோற்கும் என்றாராம் எப்படி என வினவிய டிரைவிரிடம் காமராஜர் கூறியது “பார்வையற்றவர்கள் தான் அங்கிருப்பது தெரியாமல் “சிங்கம்”சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என கத்தி சொன்னதை வைத்து தான் சொல்கிறேன் காதில் விழும் செய்தியை வைத்தே இவர்கள் மனது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அறிந்திருக்கிறது” மற்றவர்கள் ம

மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள்.

Image
மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள். ------ இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்) பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் . கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது.  இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார். சிறப்புப் பெயர்கள் - 42 1. இராசகண்டியன் 2. இராசசர்வக்ஞன் 3. இராசராசன் 4. இராசகேசரிவர்மன் 5. இராசாச்ரயன் 6. இராசமார்த்தாண்டன் 7. இராசேந்திரசிம்மன் 8. இராசவிநோதன் 9. இரணமுகபீமன் 10. இரவிகுலமாணிக்கன் 11. இரவிவம்சசிகாமணி 12. அபயகுலசேகரன் 13. அருள்மோழி 14. அரிதுர்க்கலங்கன் 15. பெரியபெருமாள் 16. அழகியசோழன் 17. மும்முடிச்சோழன் 18. பண்டிதசோழன் 19. நிகரிலிசோழன் 20. திருமுறைகண்டசோழன் 21. செயங்க

தெய்வத்திருமகனார் சாதித்தலைவரா?

Image
தெய்வத்திருமகனார் சாதித்தலைவரா?சொல்லுங்கள் இல்லை என்று.-----1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந் த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர். பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், தேவர் திருமகனாரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து தங்களது கல்வி உணவு உடை தேவைகளை சிறப்பாக பெற்றிருக்கிறார்கள். தேவர் திருமகனாரின் வீட்டின் சமையல் கூடத்தில் அவருக்கு உணவு படைத்ததவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரே. அந்த அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய மக்களை நேசித்தவர்.

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!!

Image
வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும்; தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத ்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும், சில ஆண்களையும் பருக்கள் படாத பாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும்; முகமும் பொலிவடையும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும். நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறை

வாளுக்குவேலித்தேவர்

Image
வாளுக்குவேலித்தேவர் தனது உதவியாளராக, மேலாளராக உடன் வைத்திருந்த மேகநாதன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர். தனது அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருந்த மேகநாதனுக்கு சமயலறை வரை சென்று மேலாண்மை செய்யும் உரிமையைக் கொடுத்திருந்த வாளுக்குவேலி அவரைத் தனக்கு நிகராக அமர வைத்தே பேசுவார். இது பிறநாட்டு அம்பலகாரர்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஒருமுறை "ஒரு தீண்டத்தகாதவனுக ்கு சரிக்கு சமமாக உரிமை கொடுத்து வைத்திருக்கும் பாகனேரி அம்பலகாரரின் வீட்டுக்கா சென்று உணவுண்பது!!!" என்று கூறி வாளுக்குவேலியின் வீட்டுக்கு விருந்துக்கு வர மறுத்தார் சக மன்னரான பட்டமங்கல அம்பலகாரர், வல்லத்தரையன். இவற்றையும் மீறி மேகநாதனுக்கு முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்து எப்போதும் உடனே வைத்திருந்தார் வாளுக்குவேலி. "இறைவனின் படைப்புகள் அனவரும் சமமே, எந்த ஏற்ற தாழ்வும் கடவுள் படைக்கவில்லை" என்பார் வாளுக்குவேலிஅம்பலம். எம்மினம் யாரையும் ஒடுக்க முனைந்ததில்லை, ஏற்ற தாழ்வு பார்த்ததில்லை, சமூக ஒருமைப்பாடையே முன்மொழிந்துள்ளனர் என்பதற்கு சான்றுகளாக வரலாற்றில் பறைசாற்றி நிற்கின்றன புலித்தேவன்-ஒண்டிவீரன், வாளுக்குவேலித்த