திருவண்ணாமலை  மலை ஒரு எரிமலையாகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ  குழம்பு நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.  கோவில்நகரம்  சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். பிற தலங்களில், சிதம்பரம ் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.   திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும்.  இது தவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில்,  தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக  சிறப்பானதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர்  (December) மாதம் வரும்.  இத்திருவிழா, பத்து நாட்கள்  கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை  தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம்  ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில்  நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்து பதினோறு நாட்கள்  எரியக்கூடியது.  இத்திருவிழா மட்டு...
 
Comments
Post a Comment