தேவர்

தேவர் அய்யாவின் பெருந்தன்மை -----1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர் . அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் பெருமகனார் நினைக்கிறார்

ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் பெருமகனார் கேட்கிறார்.

அப்படி பசும்பொன் பெருமகனார் கேட்டதற்குக் காரணம், இன்று போல் 18 வயது வந்தோரெல்லாம் அன்று வாக்களிக்க முடியாது. யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் பெருமகனார் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “தேவரையா! எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று தாயும் மறுத்த காலம் அந்த காலம்.

அதற்கு மேல் பசும்பொன் பெருமகனார் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் பெருமகனார்.

பசும்பொன் பெருமகனாரின் வழிகாட்டுதலும் தேர்தல் பணிகளாலும் இத்தேர்தலில் காமராஜரின் விருதுநகர் நகரசபை தேர்தலில் வெற்றியும் பெற்றார். ..

செட்டிநாட்டு வட்டாரத்தில் காங்கிரஸ் மானத்தைக் காத்த தேவர், விருதுநகர் வட்டாரத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்று கேள்விப்படுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் காமராஜரை பட்டப்பகலில் விருதுநகர் பஜார் தெப்பக்குளம் வீதியில், ஜில்லா போர்டு தேர்தல் நடந்த சமயத்தில் காமராஜரின் வேட்டியை உரிந்து விட்டு இரண்டு சண்டியர்கள் வேட்டியை இருபுறமும் மிதித்துக் கொண்டார்கள். வேறு இரண்டு சண்டியர்கள் சாணி உருண்டைகளை முகத்தில் எறிந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு மேலாக தற்போது இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டியிருக்கும் தகவல் பசும்பொன் பெருமகனாருக்குக் கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார்.

காமராஜரை சந்தித்து மேலே சொன்னவைகள் உண்மை தானா என்று கேட்கிறார். ‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர்.

அன்று இரவு விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் பெருமகனார் பேசினார். அவர் பேச்சில் தீப்பொறி பறந்தது.

“இங்கே இருக்கிற நாடார் உறவின் முறை மகமை கடைக்காரர்களுக்கு சொல்லுகிறேன். நீங்கள் சில லட்சங்களை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டுவதாக கேள்விப்படுகிறேன். இங்கிருக்கின்ற ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் வீட்டுக்கு வெள்ளைக்கார அதிகாரிகள் வந்து போவதை சாதகமாக நினைத்துக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு நடந்தால் அந்த அறியாமைக்காக அடியேன் வருத்தப்படுகிறேன். நாங்கள் வெள்ளைக்காரர்களையே எதிர்க்கும் கூட்டம், உங்களை எதிர்ப்பதும், உங்கள் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்கு முடியாத காரியமல்ல. விருப்பமான காரியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1936-ல் நடந்த தேர்தலின் போது காமராஜரை வேட்டியை உரிந்து படுத்திய பாட்டை கேள்விப்பட்டேன். சூழ்நிலை அந்த நேரம் இங்கு நான் வரமுடியாமல் போய்விட்டது. இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன்.

காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப் பேசினார்.

அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் பெருமகனாருடைய ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் வி.வி.ராமசாமி நாடார் கேட்டார்.

அதற்கு கலெக்டர் “உங்கள் வீட்டுக்கோ நடத்தும் பொதுக் கூட்டத்திற்கோ பந்தோபஸ்து கேட்டால் நாங்கள் தாராளமாகக் கொடுக்கலாம். நீங்கள் கேட்பது போல் ஓட்டுக்கேட்கப் போகும்போது போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தால், தேவர் சாதாரண மனிதரல்ல. போலிசோடு நீங்கள் ஓட்டுக் கேட்பதை போட்டோ எடுப்பார். ஜஸ்டிஸ் கட்சி போலீஸை வைத்து தேர்தல் நடத்துகிறது. போலீசாரை வைத்து மிரட்டி ஓட்டுக் கேட்கிறது என்று கோர்டுக்குப் போவார். அதன்பின் எங்கள் நிலை என்னவாகும்” என்று சொல்லி மறுத்தார்.

வி.வி.ராமசாமி நாடார் கிராமங்களுக்குப் போய் ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜ் நாடார் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜ் நாடாரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான்.     -----நன்றி----- தேவர் தளம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்