கள்ளர்களின் வரலாறு

கள்ளர்களின் வரலாறு

1. சங்க இலக்கியங்களில் கள்ளர் என்ற சொல் மன்னர்களை அழைக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. சீவக சிந்தாமணியில் 741-ம் செய்யுளுக்கு உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரை எழுதும்பொழுது கள்ளர் என்ற சொல்லுக்கு அரசர் என்றே பொருள் கூறியுள்ளார்.

3. இது போன்ற எண்ணற்ற சங்ககால இலக்கியச் சான்றுகள் வரலாற்று நெடுகிலும் காணக் கிடைக்கின்றன.

4. 1311-ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து
தாக்கியுள்ளனர்.

5. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள்.

6. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார்.

7. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக் கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய மொழியில் சேக சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார்.

8. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை அடக்க முயன்று தோற்று இறுதியில் சமரசம் செய்து கொண்டதே வரலாறு.

9. 1739-ம் ஆண்டு பிரஞ்சு கவர்னர் டியூப்ளே தன்னரசு கள்ளர்களுக்கு கடிதம் எழுதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் கூட்டணி சேரக் கேட்டுக் கொண்டார்
என்று ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

10. 23.03.1754-ல் அப்போதைய தாலுகா தலைநகரான உசிலம்பட்டி அருகில் உள்ள ஆனையூரில் தன்னரசு கள்ளர்கள்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக
வெள்ளையர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை துவக்கினர்.

11. 1755-ம் ஆண்டு வெள்ளையனுக்கு எதிராக பூலித்தேவன் நடத்திய போருக்கு தன்னரசு கள்ளர்கள் படை ஆதரவு கரம் நீட்டினர்.

12. 20.05.1756-ல் கான் சாகிப் கள்ளர்களை கருவறுக்க திட்டமிட்டு தோற்றுப்போனார்.

13. 12.11.1760-ல் பீட்டர்மாட்ரின் பாதிரியார் விகேயின் பாதிரியாருக்கு எழுதிய கடிதத்தில் கள்ளர்கள் மதுரையை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்து
இருந்தனர் என்று எழுதியுள்ளார்.

14, 1784-ல் கள்ளர்கள் மராட்டிய தளபதி முராரிராவை கொலை செய்து விட்டு மதுரை மாநகரை பரிபாலனம் செய்தனர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்