ஆதிசங்கரபகவத்பாதாள்

ஆதிசங்கரபகவத்பாதாள் தனது திக்விஜயத்திற்கு பிறகு,மோக்ஷபுரி என போற்றப்படும், காஞ்சிமாநகரத்தை வந்தடைகிறார்;; அங்கே தனக்கென ஒரு ஆஸ்ரமத்தை அமைத்திக் கொண்டார்;
தனது 32 வயதிற்குள் வியக்க தக்கும் வகையில் சாதனை புரிந்தார்.. அவரின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்:- பிறந்தது-- கலி வருடம் 2593(கி.மு 509);; சந்நியாசம் மேற்கொண்டது-- கலி 2603(கி.மு 499);; த்வாரகா மடத்தை அமைத்து அதன் தலைவராக ஹஸ்தமாலகரை நியமித்தது-- கலி 2611(கி.மு 491);; சீடர் தோடகாச்சாரியாரை தலைவராகக் கொண்டு ஜோதிஷ் மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2616(கி.மு 486);; பத்மபாதரை தலைவராக்கி கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2617(கி.மு 485);; சிருங்கேரியில் சீடர் சுரேஸ்வரை தலைவராக்கி சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார் ---கலி 2618(கி.மு 484);;;ஸர்வக்ஞ பீடமென காமகோடி பீடத்தை காஞ்சியில் உருவாக்கினார்--- கலி 2620(கி.மு 482);; ஆதி சங்கரர் காஞ்சியில் முக்தியடைந்தார்--கலி 2625(கி.மு477);; இவர் கைலாசத்திலிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களை கொண்டு வந்தார்;; அவைகள் இப்போதும் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:- முக்தி லிங்கம்--கேதார்நாத்;; வர லிங்கம்--நேபாளம்;; போக லிங்கம்--சிருங்கேரி மடம்;; மோக்ஷ லிங்கம்--சிதம்பரம்;; யோக லிங்கம்--காஞ்சி காமகோடி மடம்;;

1. ஆதி சங்கரபகவத்பாதாள் அவர்களே காஞ்சி மடத்தின் ஸ்தாபகர்;; இங்கு அவர் ஸர்வக்ஞ பீடத்தின் தலைமையை ஏற்றார்.. அங்கு அப்போது வந்திருந்த ப்ரம்மதேசத்தை சேர்ந்த சிறுவனின் மேதாவிலாசத்தைக் கண்டு, அவனை தனது சீடரின்(சுரேஸ்வரரின்) கீழ் பாடம் பயிலச் சொல்லி, பிறகு அவரே சுரேஸ்வரருக்கு, பிறகு பீடம் ஏறினார்;; அவருக்கு ஆதிசங்கரரே "ஸர்வக்ஞாத்மன்" என பெயர் சூட்டினார்;; ஆதிசங்கரர் தனது சிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டார்;; அதே போல் காஞ்சி மடத்திற்கு அதிபதியாகிறவர்கள் ப்ரம்மசரியத்திலிருந்து நேராக சந்நியாசம் பெறவேண்டும்;; அவர்களின் எல்லோருடைய திருநாமத்துடன் "இந்திர சரஸ்வதி" சேர்க்கப்படும்;;

2 ஸ்ரீ சுரேஸ்வர:- இவர் மஹிஸ்மதியை சேர்ந்தவர்;; மந்தனமிஸ்ரர் என்ற பெயரில் வாதிட்டு தோற்று, ஆதிசங்கரரின் சீடரானார்;; இவர் காஞ்சியில் முக்தி அடைந்தார்--கி.மு 407;;இவர் எழுதிய நூல்கள் வாதிக, நைஷ்கர்ம்ய சித்தி;; இவரின் சிலை காமகோடிபீடத்திலுள்ளது;; தினமும் அவருக்கு பூஜை செய்வர்;; இன்றும் மந்தனமிஸ்ர அக்ரஹாரம் காஞ்சியிலுள்ளது;;
3. ஸ்ரீஸர்வக்ஞாத்மன்:- தாமிரபரணி தீரத்திலிருந்து வந்தவர்;; ஏழு வயதில் சந்நியாசம் பெற்றார்;; ஸ்ரீ சுரேஸ்வரரின் கீழ் பாடம் பயின்றவர்;; இவர் எழுதிய நூல்கள்--ஸர்வக்ஞ விலாசம், சம்க்ஷேப ஸரீரகா;; காஞ்சியில் கி.மு 364ல் முக்தியடைந்தார்;;
4. ஸ்ரீஸத்யபோதேந்திர சரஸ்வதி:- இவர் சேர நாட்டை சேர்ந்தவர்;; இவரும் சங்கரரின் பாஷ்யத்திற்கு உரை எழுதியுள்ளார்;;காஞ்சியில் கி.மு268ல் முக்தியடைந்தார்;;
5. ஸ்ரீஞாநேந்திர சரஸ்வதி:- இவர் எழுதிய நூல் "சந்திரிகா";; காஞ்சியில் கி.மு 205ல் முக்தியடைந்தார்;
6. ஸ்ரீசுத்தானந்தேந்திரசரஸ்வதி:- வேதாரண்யத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.மு 124ல் முக்தியடைந்தார்;;
7. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- சேரநாட்டை சேர்ந்தவர்;; சங்கர பாஷ்யத்திற்கு உரை எழுதியவர்;; காஞ்சியில் கி.மு 55ல் முக்தியடைந்தார்;;
8. ஸ்ரீகைவல்யானந்த யோகேந்திரசரஸ்வதி:- திருப்பதியை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 28ல் முக்தியடைந்தார்;;
9. ஸ்ரீக்ருபா சங்கரேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;;ஆதிசங்கரரின் ஷண்மத
ஸ்தாபனத்தை உறுதிபடுத்தி அதை சீரிய முறையில் மக்களுக்கு அளித்தார்;; பகதி மார்க்கத்தை எளியமுறையில் செய்ய உதவினார்;; விந்திய பர்வதத்தில் கி.பி 69 ல் முக்தியடைந்தார்;;
10. ஸ்ரீசுரேஸ்வரசரஸ்வதி:-- மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 127ல் முக்தியடைந்தார்;;
11. ஸ்ரீசிவானந்த சித்கணேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; விருத்தாசலத்தில் கி.பி 172ல் முக்தியடைந்தார்;;
12. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(I):- பாலாற்றங்கரையிலிருந்து வந்தவர்;; சேஷாசல மலையில் கி.பி 235ல் மறைந்தார்;;
13. ஸ்ரீசத்சித் கணேந்திரசரஸ்வதி:- கடிலம் தீரத்திலிருந்து வந்தவர்;; அவதூதராக வாழ்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 272ல் முக்தியடைந்தார்;;
14. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;; உக்ரபைரவரை அடக்கியவர் என்பர்;; அகஸ்திய மலையில் கி.பி 317ல் முக்தியடைந்தார்;;
15. ஸ்ரீகங்காதரேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;; அகஸ்தியமலையில் கி.பி 329ல் முக்தியடைந்தார்;;
16. ஸ்ரீஉஜ்வல சங்கரேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; காஷ்மீரம் அருகிலுள்ள காலாபுரியில் கி.பி367ல் முக்தியடைந்தார்;;
17. ஸ்ரீசதாசிவேந்திரசரஸ்வதி:- காஷ்மீரத்தை சேர்ந்தவர்;; நாசிக் அருகிலுள்ள த்ரயம்பகத்தில் கி.பி 375ல் முக்தியடைந்தார்;;
18. ஸ்ரீயோகபிலக சுரேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; உஜ்ஜயினில் கி.பி 385ல் முக்தியடைந்தார்;;
19. ஸ்ரீமார்த்தாண்ட வித்யாகணேந்திரசரஸ்வதி:- கோதவரி தீரத்தில் கி.பி 398ல் முக்தியடைந்தார்;;
20. ஸ்ரீமூக சங்கரேந்திரசரஸ்வதி:- வானசாஸ்திர வல்லுநர்;; காஞ்சிகாமாட்சியின் கடாக்க்ஷத்தால் பேசியவர்;; கோதவரி தீரத்தில் கி.பி 437, முக்தியடைந்தார்;;
21. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(II):- வடகர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்;; காசியில் கி.பி 447ல் முக்தியடைந்தார்;;
22. ஸ்ரீ போதேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; ஜகந்நாதக்ஷேத்ரத்தில் கி.பி 481ல் முக்தியடைந்தார்;;
23. ஸ்ரீசச்சித் சுகேந்திரசரஸ்வதி:- ஆந்திரவிலுள்ள ஸ்ரீகாகுலத்தை சேர்ந்தவர்;; சுப்ரஹமண்ய பக்தர்;; ஜகந்நாதக்ஷேத்ரமருகில் கி.பி 512ல் முக்தியடைந்தார்;;
24. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்;; இவர் கொங்கணத்திலேயே வாழ்ந்தார்;;ரத்னகிரியில் கி.பி 527ல் முக்தியடைந்தார்;;
25.ஸ்ரீசச்சிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர்;; கோகர்ணத்தில் கி.பி 548ல் முக்தியடைந்தார்;;
26. ஸ்ரீப்ரஞான கணேந்திரசரஸ்வதி:- பெண்ணாற்றங்கரையை சேர்ந்த ஊர்; காஞ்சியில் கி.பி 565 ல் முக்தியடைந்தார்;;
27. ஸ்ரீசித் விலாசேந்திரசரஸ்வதி:-ஹஸ்தகிரியை சேர்ந்தவர்(ஆந்திராவிலுள்ளது);; காஞ்சியில் கி.பி 577ல் முக்தியடைந்தார்;
28. ஸ்ரீமஹாதேவ வேலேந்திரசரஸ்வதி:- ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தை சேர்ந்தவர்;; கி.பி 601, காஞ்சியில் முக்தியடைந்தார்;
29. பூர்ண போதேந்திரசரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 618ல் முக்தியடைந்தார்;;
30. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 655ல் முக்தியடைந்தார்;;
31. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- கடிலம் நதியிலுள்ள கிரமாத்தை சேர்ந்தவர்;; காஷ்மீர மன்னால் போற்றப்பட்டவர்;; காஞ்சியில் கி.பி 668, முக்தியடைந்தார்;;
32. ஸ்ரீசிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- காய்ந்த சருகுகளை உண்டே வாழ்ந்தவர்;; கி.பி 672ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
33. ஸ்ரீ சச்சிதாநந்தேந்திரசரஸ்வதி:- ஆந்திராவை சேர்ந்தவர்;; கி.பி 692ல் முக்தியடைந்தார்;;
34. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(III):- வேகவதி நதிக்கரையிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 710ல் முக்தியடைந்தார்;;
35. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- வேதாசலத்தை சேர்ந்தவர்;; சஹ்யமலையில் கி.பி 737ல் முக்தியடைந்தார்;;
36. ஸ்ரீசித் சுகாநந்தேந்திரசரஸ்வதி:- பாலாற்றங்கரையை சேர்ந்த கிராமம்;; கி.பி 758ல் கஞ்சியில் முக்தியடைந்தார்;;
37. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- சிதம்பரத்தில் கி.பி 795ல் முக்தியடைந்தார்;;
38. ஸ்ரீஅபிநவ சங்கரேந்திரசரஸ்வதி:- சிதம்பரத்தை சேர்ந்தவர்;; எல்லோராலும் போற்றப்பட்டவர்;; தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்;; காஷ்மீரநாட்டில் பீடமேறியவர் ;; கி.பி 840ல் இமாலயத்தில்(ஆத்ரேய மலையில்)முக்தியடைந்தார்;;
39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திரசரஸ்வதி:-கி.பி 873ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
40. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 915ல் முக்தியடைந்தார்;;
41. ஸ்ரீ கங்காதரேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 950ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
42. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- கி.பி 978ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
43. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- துங்கபத்திரா தீரத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 1014ல் முக்தியடைந்தார்;;
44. ஸ்ரீபூர்ண போதேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 1040. காஞ்சியில் முக்தியடைந்தார்;
45. ஸ்ரீபரம சிவேந்திரசரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 1061ல் முக்தியடைந்தார்;;
46ஸ்ரீசந்திரானந்த போதேந்திரஸ்ரஸ்வதி:- கதாசரித சாகரத்தை எழுதியவர்;; கி.பி 1098ல் அருணாசலக்ஷேத்ரத்தில் முக்தியடைந்தார்
47. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(IV):- மிகவும் போற்றப்பட்டவர்; அருணாசல க்ஷேத்திரத்தில் கி.பி 1166ல் முக்தியடைந்தார்;;
48. ஸ்ரீஅத்வைதாநந்த போதேந்திரசரஸ்வதி:- பெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்;; கி.பி 1200ல் சிதம்பரத்தில் முக்தியடைந்தார்;;
49. ஸ்ரீமஹா தேவேந்திரசரஸ்வதி:- தஞ்சாவூரை சேர்ந்தவர்;; கடில தீரத்தில் கி.பி 1247ல் முக்தியடைந்தார்;;
50. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- இவரும் கடில நதிதீரத்தில் கி.பி 1297ல் முக்தியடைந்தார்;;
51. ஸ்ரீவித்யா தீர்த்தேந்திரசரஸ்வதி:- பில்வாரண்யத்தை சேர்ந்தவர்; கி.பி 1385ல் இமாலயத்தில் முக்தியடைந்தார்;;
52. ஸ்ரீ சங்கராநந்தேந்திரசரஸ்வதி:- திருவடைமருதூரை சேர்ந்தவர்;; கி.பி 1417ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
53. ஸ்ரீபூர்ணாநந்த சதாசிவேந்திரசரஸ்வதி:-நாகாரண்யத்தை சேர்ந்தவர்;; கி.பி 1498ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
54. ஸ்ரீவ்யாசாசல மஹாதேவேந்திரசரஸ்வதி:- காஞ்சியை சேர்ந்தவர்;; கி.பி 1507ல் வ்யாசாசலத்தில் முக்தியடைந்தார்;;
55. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- தென்னாற்காடு மாவட்டைத்தை சேர்ந்தவர்;; கி.பி 1524ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
56. ஸ்ரீசர்வக்ஞ சதாசிவபோதேந்திரசரஸ்வதி:- வடபெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்;; கி.பி 1539ல் ராமேஸ்வரத்தில் முக்தியடைந்தார்;;
57. ஸ்ரீ பரமசிவேந்திரசரஸ்வதி:- பம்பாதீரத்தை சேர்ந்தவர்;; மஹான் சதாசிவப்ரம்மேந்திராளின் குரு;; கி.பி 1586ல் திருவெண்காட்டில் முக்தியடைந்தார்;;
58. ஸ்ரீஆத்ம போதேந்திரசரஸ்வதி:- விருத்தாசலத்தை சேர்ந்தவர்;;இவர் சதாசிவப்ரம்மேந்திராளை குருரத்னமாலிகாவை எழுத சொன்னவர்;; கி.பி 1638ல் தென்பெண்ணாற்றங்கரையில் முக்தியடைந்தார்;;
59. ஸ்ரீபகவன்நாம போதேந்திரசரஸ்வதி:- காஞ்சியை சேர்ந்தவர்;; நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை எடுத்துரைத்தவர்; கி.பி 1692ல் கோவிந்தபுரத்தில்(கும்பகோணமருகில்) முக்தியடைந்தார்;;
60. ஸ்ரீஅத்வைதாத்ம ப்ராகசேந்திரசரஸ்வதி:- கி.பி 1704ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
61. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கி.பி 1746ல் திருவொற்றியூரில் முக்தியடைந்தார்;;
62. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(V):- இவர் காலத்தில் தான் போரினால். மடத்தை கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது;; கி.பி 1783ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;;
63. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கும்பகோணத்தை சேர்ந்தவர்;; கி.பி 1813; கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;
64. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(VI):- இவர் கோவிந்த தீக்ஷதர் வம்சத்தை சேர்ந்தவர்;; கி.பி 1851ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;;
65. ஸ்ரீசுதர்சன மஹாதேவேந்திரசரஸ்வதி:- திருவடைமருதூரை சேர்ந்தவர்;; கி.பி 1891ல் இளையாத்தங்குடியில் முக்தியடைந்தார்;;
66. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(VII):- உடையம்பாக்கத்தை சேர்ந்தவர்;; கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;;
67. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- ஏழுநாட்களே பீடத்தில் இருந்தார்;; கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;;
68. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி.---மஹா பெரியவா
69. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
70. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி

தகவல்  உதவி:  Uma Balasubramanian‎

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்