தேவர் யார்...

(#தேவர் #யார்?)
#அவர்_ஒரு_சாதிக்கு_மட்டுமே
#தலைவர்_இல்லை!!
#சாதி_மதம்_கடந்து_வாழ்ந்த_மனிதன்...

அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்...

வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு:

#அதிசய_அரசியல்வாதி:

-34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

-நேதாஜியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். இருவரும் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப்போரட்டத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள்.

-நேதாஜி தனது அம்மாவிடம் "உங்களுடைய கடைசி மகன் இவன்" என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.

-"அடுத்த பிறவியில் தேவர் பிறந்த மண்ணில் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என்றார் நேதாஜி.

-தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.

-நேதாஜியும் தேவரும் காந்தியை எதிர்த்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.

-அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.

-நேரு விலைபேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.

-3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

-பிரச்சாரம் என்று தன் தொகுதிப்பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.

-எனக்கு, என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை; நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.

-பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

-ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.

-அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.

-அவர் ஒரு கருங்கல்லைக் கையைக் காட்டினாலும் அதை வாக்களித்து வெற்றிபெறவைக்கத் தயாராகவிருந்தனர் தென்னாட்டு மக்கள்.

-இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும், வென்றார்; பதவியேற்காமலே மறைந்தார்.

-அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.

-இரயிலில் இலவசமாகப் போகமாட்டார்.
-சம்பளம் எதுவும் வாங்கமாட்டார்.

-அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்கமாட்டார்.

-கையைத் தலைக்கு வைத்து திண்ணையில் தூங்குவார்.

-வாழ்வில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்.

-இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள், தாடி வளர்த்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.

-ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார். தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.

-சொத்துக்கள் பெரும்பகுதியை தாழ்த்தப்பட்டோருக்கு எழுதிக் கொடுத்தவர்.

-"சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்" என்றார்.

-"தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்" என்றார்.

-ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர். டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்; திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்; தூக்கிவைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.

-ஜோதிடம், சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் என அனைத்து வகைக் கலைகளையும் அறிந்தவர்.

-நேதாஜி இறந்துவிட்டார் என காங்ரசும் ஆங்கிலேயர்களும் கட்டிய கதையைத் தகர்த்தெறிந்தவர். இறுதிவரை நேதாஜி தேவருடன் மட்டுமே ரகசிய தொடர்பில் இருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

#ஆன்மிகத்தின்_அடையாளம்:
#இறுதிக்_காலத்தில்
#ஒரு_அறுவை_சிகிச்சை #செய்துகொண்டால்_தாங்கள்_
#இன்னும்_பல_ஆண்டு_காலம் #வாழலாம்_என்று_மருத்துவர்கள்_கூற, "#இறைவன்_கொடுத்த_உடலை #குறையின்றி_மீண்டும்_அவனிடம் #ஒப்படைக்க_வேண்டும்"
#என்று_கூறி_அறுவை_சிகிச்சையை #மறுத்து_உயிரை #மாய்த்துக்கொண்டவர்.....

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்