முக்குலத்தோர் படைபற்றுகள்

சோழ -பாண்டிய நாடுகளின் எல்லையாக. விளங்கிய புதுக்கோட்டையில் இருந்த முக்குலத்தோர் படைபற்றுகள் கிபி 1600 வரை
----------------------------------------------------

----------------------------------------

*சோழ, பாண்டிய நாடுகளின் எல்லையான தென் வெள்ளாறு, புதுக்கோட்டை யின் நடுவில் சென்று சோழ பாண்டிய நாடுகளின் எல்லையை பிரிக்கிறது. பாண்டிய நாட்டில் இருந்து சோழர் தலைநகரமான தஞ்சையை விரைவில்  அடைய புதுக்கோட்டை வழியாகவே செல்ல வேண்டும். இருநாட்டின் எல்லாயாக அமைந்த புதுக்கோட்டை மாறி மாறி சோழர் பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டுள்ளதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நாட்டு எல்லையை பாதுகாத்து, ஊடுருவல் மற்றும் போர் ஆகியவற்றை சந்திக்க,படைவீரர்களை எந்நேரமும் தயார் நிலையில் எல்லையில் வைத்திருக்க எண்ணிய பேரரசர்கள், வெள்ளாற்றை மையமாக கொண்டு படைபற்றுகளை அமைத்தனர். படைபற்றுகள் என்பது ( Millitary regiment/ millitary station) போர் வீரர்களின் குடியிருப்புகள் மற்றும் ஆயுதங்கள் அமைந்துள்ள பகுதியாகும். யானைபடை, குதிரைப்படை, காலாட்படை, வில்படை போன்ற பல்வேறு படையினர்க்கு எந்நேரமும் பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருக்கும் பகுதியாகும்.போர்தொழில் தவிர வேறொன்றும் செய்யாத, போர் வீரர்களை கொண்ட இடம் இந்த படைபற்றுகள். கிபி 1600 வரை புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கும் படைபற்றுகளை நோக்கும்போது, 10 க்கும் மேற்பட்ட படைபற்றுகள் நமக்கு கிடைக்கிறது. வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள படைபற்றுகளில் கள்ளர்களும், வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள படைபற்றுகளில், மறவர்களும் திருமயத்தை மையமாக கொண்டு பணியாற்றியுள்ளனர். இந்த படை பற்றுகளில்,  கள்ளர் மற்றும் மறவர் அரையர்களாக,முதலிகளாக, அரசு மக்களாக, படைபிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
***********************
IPS-644-விராச்சிலை மறவர் படைபற்று-ஸ்ரீவல்ல தேவர் கிபி 1130, கானாட்டு படைபற்று விராச்சிலை மறவரில் அரசுமக்களில் சிங்கத்தேவன்".விராச்­­­­­சிலை மறவர் படைபற்றில் இருந்த மறக்குல அரையர்கள் குறிக்கப்படுகின்றனர்­­­­­.

--------------------------------------

IPS- 346 - விராச்சிலை மறவர் படைபற்று---கிபி 1253- சுந்தரபாண்டியதேவர் ஆட்சி-- "கானநாட்டு படைபற்று விராச்சிலை மறவர்" அளித்த கொடைகள் பற்றி கூறுகிறது

--------------------------------------

IPS-402---- மலையாளங்குடி மறவர் படை பற்று----குலசேகர பாண்டிய தேவர், கிபி 1285, திருமயம், பேரயூர்:"கானாடான விருதராஜ வளநாட்டு மலையாளங்குடி படைபற்று, அரையர்களும், மறமுதலிகளும், வில்லி வீரமழகியதேவன்" என மறவர்கள் அரசு மக்களாகவும், வில் வீரர்களாவும் குறிக்கப்படுகின்றனர்­­­­­.

----------------------------------------

IPS-403,412- மலையாளங்குடி மறவர் படைபற்று,குலசேகர பாண்டிய தேவர், கிபி 1287, திருமயம், பேரயூர் கானாடான விருதராஜ வளநாட்டு படைபற்று மலையாளங்குடி அரசுமக்களளும், அரசு சொக்கன் வீரமழகியதேவன், மறமுதலிகள்.

----------------------------------------
IPS-421- விராச்சிலை மறவர் படைபற்று-சுந்தரப்பாண­­­­­்டிய தேவர் கிபி 1280, திருமயம் விருதராஜ பயங்கர வளநாட்டு, "கானாட்டு படைபற்று, விராச்சிலை, மறவன், மறமாணிக்கன், அஞ்ஞூற்றுவப்பெரரயன் முதலானோர் குறிக்கப்பட்டுள்ளனர்­­­­­.

----------------------------------------

IPS-364-விருதராசவளநா­­­­ட்டு பெருங்குடி மறவர் படைபற்று-- வீரபாண்டிய தேவர்-கிபி 1257-ஆலங்குடி க.வெ- " விருதராஜபயங்கரவளநாட்­­­­டு கானாட்டு படைபற்று பெருங்குடி". பெருங்குடி மறவர்கள் அரையர்களாக இன்றும் திருவிழாக்களில் முதல் மரியாதை பெறுகின்றனர்.

----------------------------------------
IPS-425- கோயிலூர் கள்ளர் படைபற்று--சுந்தரப்பா­­­­­ண்டிய தேவர் ஆட்சி கிபி 1265, ஆலங்குடி கோயிலூர் படைபற்று,;இராசராசசொழ­­­­­வளநாட்டு கள்ளப்பற்றில் இரண்டு வகை அரையர்களும்"என செங்காட்டு நாட்டு கள்ளர் படைபற்றின் அரையர்கள் குறிக்கப்படுகின்றனர்­­­­­.

----------------------------------------
IPS-515 - குளத்தூர் கள்ளர் படைபற்று--சுந்தரபாண்­­­­­டிய தேவர் கிபி 1240, குளத்தூர்,"கள்ள பற்றில் வில்லி நல்லனும், வில்லி வீரனும்"என கள்ளர் படைபற்றில் இருந்த வில் வீரர்கள் குறிக்கப்படுகின்றனர்­­­­­.

----------------------------------------
IPS-683- கள்ளப்பால் நாடான திருக்கட்டளை கள்ளர் படைபற்று-வீர சயன்ன உடையார் கிபி 1351,கோயிலூர், ஆலங்குடி தாலுகா" கள்ளப்பால் கற்குறிச்சி கவிநாட்டு படைபற்று சிங்கமங்கலத்து அரையர்களில்" என சிங்கமங்கல அரையர்கள் மழவராயன், வடக்கிலரயன், தெற்கிலரயன் போன்றோர் குறிக்கப்படுகின்றனர்­­­­­.

----------------------------------------
IPS-689-விருப்பன்ன உடையார், கிபி 1371,குண்ணன்டார் கோயில், ;கள்ள வேளைக்காரர் எனும் வேளைக்காரர் படையில் பணியாற்றிய கள்ளர் குறிக்கப்படுகிறார்.

----------------------------------------
IPS- 462-விருதராஜபயங்கரவள­­நாட்டு கோட்டையூர் மறவர் படைபற்று- மாறவர்மன் வீரபாண்டியதேவர் -கிபி 1371- திருமயம்- " கானாட்டு படைபற்று கோட்டையூர் " என மறவர் படைபற்று குறிக்கப்படுகிறது.

----------------------------------------
IPS-453- விருதராஜபயங்கரவளநாட்­­­டு மேலக்குருந்தன் பிறை மறவர் படைபற்று-- மாறவர்மன் வீரபாண்டியதேவர்- ஆதனூர் திருமயம்- கிபி 1377- " விருதராஜ பயங்கர வளநாட்டு மேலைக்குருந்தன்பிறை படைபற்று"அரையர்கள் அளித்த கொடை பற்றி கூறுகிறது.இது திருமயம் மறவர் படைபற்றுகளில் ஒன்று.

----------------------------------------
IPS- 647- இளைஞ்சார் மறவர் படைபற்று- கோச்சடைபன்மர்- திருபுவனசக்கரவர்த்தி­கள்- திருமயம் க.வெ- " விருதராஜவளநாட்டு இளைஞ்சார் படைபற்று" என மறவர் படைபற்று குறிக்கப்படுகிறது.

----------------------------------------
IPS-711- திருக்கட்டளை கள்ளர் படைபற்று-ஸ்ரீரங்க பல்லவராயர் பெருங்களூர் பல்லவராயர் அரசு; கிபி 1462,திருக்கட்டளை ,; பல்லவராயர் கவிநாடு படைபற்று, கள்ளப்பால் கற்குறிச்சி பற்று ஈஸ்வரனுக்கு அளித்த பல்லவன் சந்தி ; என பல்லவராயர் கள்ளர் நாட்டின் படைபற்றிலுள்ள கோயிலுக்கு அளித்த கொடை பற்றி கூறுகிறது.

---------------------------------------
IPS 744- சிறுவயல் நாட்டு கள்ளர் படைபற்று--விசங்கி நாட்டு கள்ளர்கள்:-வீரபிரதாப­­­­­ன் மகாராயர் (விஜயநகர), கிபி 1537, குளத்தூர் தாலுகா (கீரனூர்), நார்த்தாமலை சீமை,வடசிறுவயல் நாடு படைபற்று கீரனூர் உடையவர்க்கு என விஜயநகர மன்னன்,; சிறுவயல் நாட்டு படைபற்றிலுள்ள ஆலயத்திற்கு அளித்த கொடைகளை பற்றி கூறுகிறது. இந்த வடசிறுவயல் நாடு புதுக்கோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்று..சிறுவயல் நாட்டு கள்ளர்கள், கீரனூர் மற்றும் நாரத்தாமலை, சிவன் கோயில்களில் கூடுவது வழக்கம். இந்த சிறுவயல் நாட்டு, விசெங்கி நாட்டு கள்ளர்கள் வாழும் பகுதியின் ஒரு பிரிவாகும்.குளத்தூர்­­­­­­ தாலுக்காவில் வாழும் உஞ்சனைநாட்டு கள்ளர்கள்,அஞ்சுநிலைப­­­­­­்பற்று சர்தார்கள் (அ) சேர்வைகாரர்கள் என அழைக்கப்பட்டு கிபி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டைமான் படையில் பணியாற்றினர்.16ஆம் நூற்றாண்டில் விஜய நகர பிரதிநிதி நார்த்தாமலை சீமையில் இருந்த விசங்கி நாட்டு கள்ளர்களை அடக்க இங்கு தங்கியதாகவும், பல்லவராய இளவரசி, கச்சிரயார் தலைமையில் கள்ளர் படையை அனுப்பி இந்த விஜய நகர பிரதிநிதியை கொன்றதாகவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது(Manual of pudukkottai state vol2 part 2 pag 1170)

Comments

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ReplyDelete
  2. வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    ReplyDelete
  3. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்


    சேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.

    வில்லவர் உபகுலங்கள் இவை

    1. வில்லவர்
    வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் சின்னமுள்ள கொடியை ஏந்தியவர்கள்.

    2. மலையர்
    மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை சின்னம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.

    3. வானவர்
    வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.

    மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்

    4. மீனவர்
    மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தியவர்கள்.

    இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வர் குலங்களை உருவாக்கியது.
    எனவே நவீன வில்லவர் மக்கள் உருவாயது அனைத்து வில்லவர்களின் குலங்களின் இணைப்பின் விளைவாகும்.

    திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
    வில்லவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.


    ____________________________________________


    நாகர்கள்

    நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

    நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஓலியர், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.


    முற்குகர்

    பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.

    மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை

    1. முற்குகர் அல்லது முக்குவர்
    2. மறவர்
    3. கலிங்கர்-சிங்களவர்.

    முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.

    காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
    முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.


    இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.

    ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
    மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.

    ReplyDelete
  4. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்


    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர் ஆவர்.
    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலுக்குப் பிறகு குலசேகர பாண்டிய கி.பி 1335 வரை மதுரையில் இருந்து ஆட்சி செய்தார். ஆனால் மதுரை சுல்தானகம் எனப்படும் மாபார் சுல்தானகம் என்ற துருக்கிய சுல்தானகம் கி.பி 1335 இல் நிறுவப்பட்டது. அதன் பிறகு வில்லவர்கள் தெற்கே சிவகாசிக்கு குடிபெயர்ந்தனர், அவர்களின் தலைநகரம் திருவாடானை ஆனது. திருவாடானையிலிருந்து வடக்கே கோடியக்கரையையும் தெற்கே கன்னியாகுமரியையும் பாண்டிய வம்சத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருநெல்வேலியும் தூத்துக்குடியும் பாண்டியர்களின் கோட்டைகளாக இருந்தன. பாண்டிய வில்லவர்களின் பண்டைய அரச வீடான தென்காசியிலிருந்து மற்றொரு பாண்டிய குலத்தினர் ஆட்சி செய்தனர்.


    விஜயநகர நாயக்கர் தாக்குதல்

    1376 இல் விக்ரம பாண்டியன் வேணாட்டின் துளு-நேபாள குல அரசர் ஆதித்யவர்மா சர்வாங்கநாதன் உதவியுடன் துருக்கிய படையெடுப்பாளர்களை வெளியேற்ற முயன்றார். ஆனால் விஜயநகர நாயக்கர்கள் கி.பி 1377 இல் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து கீழ்ப்படுத்தினர் மற்றும் அவர்கள் பாண்டியர்களாக வேடமணிந்த வாணாதிராயர் என்ற தெலுங்கு பாணர்களை மதுரை மன்னர்களாக்கினர்..


    சேர வில்லவர் குலங்களின் இடம்பெயர்வு

    சேர, பாண்டிய, சோழ வில்லவர்கள் வேணாட்டின் எல்லையில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, கோட்டையடி ஆகிய இடங்களில் வரிசையாகக் கோட்டைகளைக் கட்டினர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.


    சந்திரசேகர பாண்டியருக்கும் உலகுடைய பெருமாளுக்கும் இடையேயான போட்டி

    1520களில் சந்திரசேகரராவ் மதுரையை மீட்டு மதுரையில் இருந்து ஆட்சி செய்து வந்தார். சந்திரசேகர பாண்டியரின் போட்டியாளர் கன்னியாகுமரியில் வசித்து வந்த உலகுடையப்பெருமாள். உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர் சிறிது காலம் மதுரையின் அரசரானார், அதே நேரத்தில் சந்திரசேகர பாண்டியன் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்தார். உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் பட்டாணி ராகுத்தனுக்கு எதிரான போரில் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். ஆனால் சந்திரசேகர பாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் கைப்பற்றினார். உலகுடையப்பெருமாளையும், சரிய குலப் பெருமாளையும் துதித்து வில்லுப்பாட்டு வடிவில் பல்லவிகள் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகின்றன.


    உறையூர் சோழர்கள் மற்றும் மதுரை பாண்டியர்களின் முடிவு

    உறையூரில் இருந்து ஆட்சி செய்த வீரசேகர சோழன் 1529 இல் விஜயநகர நாயக்கர்களால் இடம்பெயர்ந்தார். வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியனால் ஆளப்பட்ட பாண்டிய அரசை ஆக்கிரமித்தார். கிருஷ்ணதேவராயர் அனுப்பிய நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியனுக்கு மீட்டு கொடுக்கவில்லை. நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் தனது தந்தையைத் தோற்கடித்து அவரைக் கைது செய்து ஹம்பிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    ReplyDelete
  5. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    வெங்கல தேவன்

    வீரசேகர சோழன் மகன் வெண்கலதேவனும் மகளும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.
    பல ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசியர்களின் எதிர்ப்பைச் சந்தித்த அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கன்னியாகுமரி அருகே வெங்கலராயன் கோட்டை என்று ஒரு கோட்டையைக் கட்டினார்.
    ஆனால் வேணாட்டின் துளு-ஆய் மன்னராக இருக்க்கூடிய ஒரு உள்ளூர் மன்னன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயனிற்கு அவனது திருமண விருப்பம் பிடிக்காமல் குரும்பூர் சென்றார். குரும்பூரிலும் நளன் என்ற குட்டி அரசன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயன் தனது மகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்து கொண்டார். வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார்களின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்