தேவர் திருமகன்

"பசும்பொன் தேவர் திருமகன் கற்ற கலைகள்"

தேவர் திருமகன் சிறுவயதிலேயே சிலம்பம், மற்போர், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், முதலிய வித்தைகளை கற்றார்.
சிறந்தவர் ஒருவர் மூலம் வர்மக்கலையும் கற்றார். சாதாரணமாக வர்ம அடிகளை மனிதனுக்கு மாத்திரமே பயன்படுத்திகிற முறையைத்தான் பலபேர் கற்றிருப்பர்.

தேவர் திருமன் மனிதனுக்கும் மாத்திரம் அல்ல மிருகங்களுக்கும் வர்ம அடியைப் பயன்படுத்துகிற முறையைக் கற்றிருந்தார். அதாவது காளை மாடு, குதிரை போன்ற மிருகங்களையும் நுரை தள்ளுகிற அளவில் அடித்து வீழ்த்துகிற முறையையும் தெரிந்து வைத்திருந்தார்.

தேவர் திருமகன் சிறுவயதில் எப்போதும் ஓடி அடி விளையாடுவார். சிறிது நேரம் கூட ஓய்ந்து இருக்கமாட்டார். அத்தனை சுறுசுறுப்பு. சடுகுடு(கபாடி), கிளித்தட்டு, கால் பந்தாட்டம், நீரில் நீந்தி விளையாடுதல், ஆகிய எல்லா விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்