ஆரியப்படை_கடந்த #பாண்டியன்நெடுஞ்செழியன்

#ஆரியப்படை_கடந்த #பாண்டியன்நெடுஞ்செழியன் :

#கடைச்சங்ககால #பாண்டியர்களில் ஒருவரான இவர்  மதுரையை தலைநகரமாக கொண்டு பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்.

 தமிழகத்தை கைப்பற்ற வந்த ஆரியரை போரில் வென்று அடித்து துறத்தியதால் ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான்.

சேர, சோழர்கள் என பலரையும் வென்றவன், சேரன் செங்குட்டுவனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவன்.  கல்வியின் பெருமையை புறநானூற்றில் பாடலாக பாடி வரலாற்றுப் புகழ் பெற்றான்.

கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய உத்தரவிட்ட நெடுஞ்செழியன், கண்ணகியின் விளக்கம் கேட்டு தான் நீதி தவறியதை உணர்ந்து மனம் நொந்து

"யானோ அரசன்! யானே கள்வன்!
தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது"

எனத் தன் உயிரை விட்டான். இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றாா்கள்

மதுரை பாண்டிகோவிலில் கடவுளாக இருப்பது இவர்தான் என்றும் செவி வழிச்செய்தி உள்ளது.

 #மாநகா்மதுரை
#வீரம்வெளஞ்ச #மதுரை

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்