பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பதினாறு செல்வங்கள்: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப்
பதினாறு எவை?
அதன் விளக்கம் :-
1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய
கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத்
தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல்
வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச்
செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள்
இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய
பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத
கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம்,
சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும்
கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)
இந்த பதினாறும்
பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ
முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்.
உண்மைதானே?

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்