இடுகம்பாளையம் ஆஞ்சநேயர்



இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க, அவற்றுக்கு மத்தியில் கோயில்கொண்டு அருள்கிறார் அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட திருக்கோயில் இது. சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை தரிசிக்கலாமே!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இடுகம்பாளையத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. கோயிலை அடைந்ததுமே மனதில் பூரண அமைதி குடிகொண்டுவிடுகிறது. கோயில் சுற்றுச் சுவர்களின் உட்புறத்தில் நம் வாழ்வை வளப்படுத்தும் வாழ்க்கை நெறிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஜெயமங்கள  ஆஞ்சநேயருக்குத் தென்புறத்தில் விநாயகரும், கன்னிமூலையில் ராமலிங்கேஸ்வரரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்