உருத்திரங் கண்ணனார்

இவ்வாறு பூம்புகாராகிய பட்டினத்தைச் சிறப்பித்துப்பாடிய உருத்திரங் கண்ணனார் கரிகால் வளவனுடைய வீரத்தையும் பிற இயல்புகளையும் விரிவாகப் பாடினார். அவன் பகைவருடைய சிறையில் இருந்ததையும், அதனினின்றும் விடுதலை பெற்று அரசுரிமையைப் பெற்றதையும், பல போரில் வெற்றி பெற்றதையும், ஒளியர், அரு வாளர், வடநாட்டார், குடநாட்டார், பாண்டியன், பொதுவர், இருங்கோவேள் ஆகியவர்களைப் புறங் கண்ட சிறப்பையும் பாடினார்.

    காட்டை அழித்து நாடாக்கிய நலத்தைப் புகழ்ந்தார். குளங்களை வெட்டி வளம் பெருக்கினான் கரிகாலன். உறையூரை விரிவாக்கி அங்கே அரண் மனையைக் கட்டிப் பல குடிமக்களைக் கொண்டு வந்து நாட்டினான். மதிலைக் கட்டி அங்கங்கே அம்புகளை வைக்கும் மறைவிடங்களை அமைத்தான். இவ்வாறெல்லாம் அவன் நகர நிர்மாணம் செய்ததையும் உருத்திரங் கண்ணனார் அழகாகப் பாடினார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்