நடராஜா போற்றி

வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள் துணித்த மைந்தா போற்றி வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி. தெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி. பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்று எம் சதுரா போற்றி சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி. பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும் சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்