தொண்டைமான் அரசவையில் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள்

தொண்டைமான் அரசவையில் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள்
==============================================

புதுக்கோட்டை  தொண்டைமான் மன்னர்களின் ஆதரவின் கீழ் உருவான தமிழ் பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கும்மி, அம்மானைப் பாடல்கள் பலவாகும் அவற்றுள் ஒரு சில

.

• சிவத்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ்

• சிவத்தெழுந்த பல்லவராயன் உரை

• ராய தொண்டைமான் அனுக்கிரக மாலை

• ராய தொண்டைமான் இரட்டை மணிமாலை


• பஞ்சரத்தினம் என்று அழைக்கப்பட்ட

ஏழைபங்காளி ,
கருணைக்கடைகண்,
பிறவியில்லாத அருள் ,
மனத்துயர் தீர்த்தருள்,
தருணமிதம்மா,

என்ற இந்த ஐந்து பாடல்களும், திருகோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் (1730 -1769 ) பாடியதாகும் ( மேலும் பல கீர்த்தனைகளை பாடியுள்ளார்).

• அம்புநாட்டு வளந்தான்

• வெங்கண்ண சேர்வை வளந்தான்

• விராலிமலைக் குறவஞ்சி

• விரலியின் காதல்

• திருமலைராயன் கப்பல்

• ஆண்டப்பவேளான் குறவஞ்சி

• உடையப்பவேளான் குறவஞ்சி

• திருமலை ராயன் கலித்துறை

• நல்லப் பெரியாள் கலியுகக் குழுவல் நாடகம்

• நாவலங்க நல்லக்குட்டி குழுவல் நாடகம்

• திருக்களம்பூர் முத்து வைரவன் சேர்வை கும்மி

• கபிலை நாடகம்

• ஆவூர் குழுவல் நாடகம்

• இயன்மொழி வாழ்த்து

• பிரகதாம்பாள் கும்மி

• வாராப்பூர் வளர்ந்தான்

• மழவராயனேந்தல்

• அபிஷேக மாலை ( இது ஒரு முஸ்லீம் புலவர் எழுதியது )

• குமரேசசதகம் (குமர மாலை முருகன் புகழ் பாடும் பாடல் )

• ஆவுடையார் கோவில்புராணம்

• மிழலை சதகம்

• கானநாட்டுச் சதகம்

• கேரளா நாட்டை ஆண்ட மன்னர் சுவாதி திருநாள் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் பல பாடல்களை பாடியுள்ளார் இப்பாடல் இன்றும் திருக்கோகர்ணம்  கோவிலில் பாடப்படுகின்றன .

தொண்டைமான் மன்னரும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பெயரில் பல பாடல்களை இயற்றி தமது புலமையை வெளிக்காட்டி இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்