“அம்பலகாரன்”

“பல ஊர்கள் இனைந்து ஒரு நாடாகி, அந்த நாட்டுக்கு ஒரு ஆற்றல்மிக்க தலைவன் “அம்பலகாரன்” என்ற பெயரால் அழைக்கப்பட்டு, அவனது ஆணைக்குக் கட்டுப்பட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். “அம்பலகாரன்” என்பது ஒரு வகுப்பாரை குறிக்கும் சொல்லாக சில நேரங்களில் பயன்படுத்த்ப்பட்டாலும் கூட கள்ளர் நாடுகளின் தலைவர்களை தான் “அம்பலகாரர்” என பட்டம் சூட்டி அந்தந்த நாடுகளில் மக்கள் போற்றி வந்தனர். அந்த அம்பலகாரர்கள் குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்காக ஒன்றாக கூடி கலந்துரையாடி சிக்கல்களை கலைவகுத்தனர். அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளின் ஆலயங்களில் பட்டுப்பரிவட்ட மரியாதைக்கு உரியவர்களாக மதிக்கப்பட்டார்கள். “அட்டமாசத்தி அருளிய பட்டமங்கை” என கூறுகிற அம்மனின் தளம், அது தான் பட்டமங்கலம். அந்த பட்டமங்கல அம்பலகாரருக்கு திருக்கோஸ்டியூர் தேர் திருவிழாவில் பட்டுப்பரிவட்டம் கட்டி சிறப்பு செய்வார்கள். பாகனேரி அம்பலகாரருக்கு அந்நாட்டு சிவன் கோவில், அம்பாள் கோவில்களில் எல்லா உரிமைகளும் மரியாதைகளும் உண்டு. அம்பலகாரர் என்னும் தகுதியை பணம் முதலிய எந்த சாதனத்தினாலும் திடீரென ஒருவர் பெற்றுவிடுவதில்லை. அது பரம்பரையாக வந்துகொண்டிருப்பதாகும். ஒருகால் அம்பலகாரருக்கு சந்ததி இல்லாமல் போய்விட்டால் அவரை சார்ந்த தகுதி உடைய வேரொருவரை ஊரார் தேர்ந்தெடுப்பர். குடிமக்களிடம் வரிகளை பெற்று ஊரையும் வளப்படுத்தி, ஊர்க்காவலையும் வலுப்படுத்தி, குறுநில மன்னர்களுக்கு அடுத்த நிலையில் தங்கள் நாடுகளில் ஆட்சி செலுத்திய அம்பலகாரர்கள்- கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் மூன்று குழுக்களில் இருந்தார்கள் என்றாலும் இவர்கள் அனைவரும் ஒரே வகுப்பினர் என்னும் உணர்ச்சியை வேங்கடசாமி நாட்டார் அவர்கள் வெளிப்படுத்துகிறார்.”------தமிழ்-ஆங்கில அகராதி-வின்கலோவின்:

அம்பலம்: an open building in a village for public concourse or for transacting affairs of justice, சபை

அம்பலக்காரன்: chief of the Kallar caste, கள்ளச்சாதித் தலைவன், he who publishes the decrees of the assembly

கள்ளச்சாதி: ஒரு சாதியர், அம்பலகாரச்சாதி

கள்ளநாடு: பாண்டி நாட்டில் கள்ள ஜாதியார் வசிக்கும் மேலூர் முதலிய பிரதேசம்

அம்பலக்காரன்: கள்ளச்சாதித் தலைவன், சபையின் தீர்மானத்தை வெளியிடுவோன்

அம்பலம்: சபை, சாதிக்கூட்டம்

மறவர்: படை வீரர், பாலைநிலமாக்கள், வேடர், படைத்தலைவர், கள்வ

மறவன்: சிலேஷ்மம், பாலை நிலத்தான், வேடன், மறக்குடியான், வீரன், படைத்தலைவன், கொடியோன், கள்ளன்

தமிழ்மொழியகராதி- நமசிவாய முதலியாரவர்கள், ஐந்தாம் பதிப்பு:

அம்பலக்காரன்: கள்ளச்சாதிதலைவன், சபையின் தீர்மானம் வெளியிடுவோன்

அம்பலம்: சபை, சித்திரக்கூடம்

அம்பலவன்: சிவன்------
---------------------------------------------------------------------------------------------------------நாட்டரசர் என்ற் கள்ளர் தான் அம்பலக்காரர் என அறியவும்.-------------------பாண்டியர் ஆட்சி இயல்--
நாட்டியல்--
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது.மேற்கே சேர நாடும்,மலை நாடும்;கிழக்கே கடல்,வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும்;தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.

"முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு"

—(புறம்-110)

"வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே"

—(புறம்-242)
என்ற புறப் பாடல்கள் ஊரும்,நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள்,கூற்றங்கள்,வளநாடுகள்,மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும்-- ஊர்கள் கூற்றம்,நாடுகளில் அமைந்தன.--,
இரணிய முட்டநாடு , குடநாடு , புறப்பறளைநாடு , ஆரிநாடு , களக்குடி நாடு , திருமல்லிநாடு
தென்புறம்புநாடு , கருநிலக்குடிநாடு , வடபறம்புநாடு , அடலையூர்நாடு , பொங்கலூர்நாடு , திருமலைநாடு,
தென்கல்லகநாடு , தாழையூர்நாடு செவ்விருக்கைநாடு கீழ்ச்செம்பிநாடு , பூங்குடிநாடு, விடத்தலைச்செம்பிநாடு,
கீரனூர்நாடு , வெண்புலநாடு, களாந்திருக்கைநாடு, பருத்திக் குடிநாடு , அளநாடு , புறமலை நாடு,
துறையூர்நாடு , துருமாநாடு, வெண்பைக் குடிநாடு , இடைக்குளநாடு , நெச்சுரநாடு , கோட்டூர்நாடு,
சூரன்குடிநாடு , பாகனூர்க்கூற்றம் ,ஆசூர்நாடு ,தும்பூர்க்கூற்றம் ,ஆண் மாநாடு, கீழ்வேம்பநாடு,
மேல்வேம்பநாடு , தென்வாரிநாடு , வடவாரிநாடு ,குறுமாறைநாடு , குறுமலைநாடு, முள்ளிநாடு,
திருவழுதிநாடு , முரப்புநாடு , தென்களவழிநாடு ,வானவன் நாடு , கீழ்களக்கூற்றம் , கானப்பேர்க்கூற்றம்,
கொழுவூர்க்கூற்றம் , முத்தூர்க்கூற்றம், மிழலைக்கூற்றம் ,மதுரோதயவளநாடு , வரகுண வள நாடு, கேளர சிங்கவளநாடு,
திருவழுதி வளநாடு , வல்லபவள நாடு ,பராந்தகவள நாடு ,அமிதகுண வளநாடு,
(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு) பாண்டியர்களின் இயற்பெயரும்,சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்