அருள்வாய் இன்பம்

அருள்வாய் இன்பம்
                          1403
உறங்கா துறங்கியும் நின்றும் புவிக்கு
அருளும்  திருமாலே, நாரணா , பாரும்
வளத்தில் அறத்தில் சிறந்தோங்க ஆசி
அளித்தருளும்  நாதா  சரணம் .

சரணம்  சரணமே  அத்தி வரதா
அருளும் பொருளும்  அருளும் திருவே
திருமாலே  பாரினைக் காப்பாய் சிறந்து .
தரணியும் ஏத்துதே ,நின்  பாதம் .

பாதம் பணிந்தே பரந்தாமா  ,பாவத்தைப்
போக்குதே ,பக்குவம் பெற்றுச் சிறக்குதே
நாரணா ,வாமனா , கூர்மா ,நரசிம்மா ,
பேரருள்  செய்வாய்   உயிர்க்கே .

உயிர்க்குலம் உய்யவே ஓதினாய் கீதை ,
உலகிற்கே நீதிநெறி போதித்தாய் ,ஓங்கு
அறங்காத்தாய் ,வேங்கட நாதா ,அய்யா
அருள்வாயே மங்களம் எங்கும் .

எங்கெங்கும் நீயாய் ஒளிர்கின்ற காசினியில்
மங்களம் பூக்கும் பெருமாளே , சங்குடை
சக்கரத் தாரியே, என்றென்றும் ஆனந்தம்
மக்களுயிர்  வாழத்தான்  செய்வாய் .

செய்வாய் சிறப்பென்று எண்ணம்
மணந்தாலும் ,
சுற்றும் உலகினில்  ஆதிக்கம் மேயுதே ,
முற்றும் கெடுவினைகள்  ஆளுதே , நல்லாரும்
பெற்றாரே. துன்பத்தை  நாதா .

நாதனே நீர், நீரில்  நாற்பதாண்டு வாழ்ந்தாலும்
பூ தலத்தில் மண்டலம் வாழ்ந்தாலும்
நாளுமே
நின்னருள்   சீவனைக்    காக்கும்  , அறிவோமே ,
நிர்க்குணனே பூகாப்பாய் நீயே .

நீயே நெடுஞ்சுடர் ஆற்றலாய் பூரித்து
தீயர்  வினையை  எரிப்பாய் ,நெடுமாலே
தீராப் பிணியோடு ஏழ்மைப் பிணிகளை
சீரருளால்  மாய்ப்பாயே நன்று  .

நன்றதும் வாழ்வில் மலருமென எண்ணியே
மண்ணுயிரும் ஏங்குது , மானுடத்துள்
நின்றாளும்
மேல்கீழ் மதப்பேத ஆதிக்க  கீழ்மையை
காலமும் கொல்லுவாய்  நீயே .

நீயே எதிலுமெங்கும் நீர்நிலை நாட்டிடு
நீயே பொதுவுடமைக் காத்திடு , நாரணா
நீயே நிலம்நீர் நிலைத்தோங்கி காத்திடு
நீயருள்வாய்...

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்