ஷத்திரியர்

முதலாம் பராந்தகச் சோழனின் மாமனாரான குமரன் மறவனை
பழுவூர் கல்வெட்டு ஷத்திரியன் பழுவேட்டரையன் குமரன் மறவன்
என்று குறிப்பிட்டு..இவர் மறவர் இனம் என்பதைக் காட்டவே இவன்
முன்னோர்களும் வாரிசுகளும் ..தங்கள் பெயருடனேயே..மறவன்
என்ற இனப் பெயரையும் இணைத்தே வழங்கி வந்தனர். இக்குமரன்
மறவனின் அரசி..மழவரையர் பராந்தக வர்மர் உடன் பிறந்தவள்
என்பதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், முக்கியமாக
இன்றும் இவர் பெயரில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில், திருச்சி
மாவட்டம், நங்கவரத்தில் உள்ளது. அக்கோயிலின் கல்வெட்டில்
கோயிலைக் கட்டிய பழுவேட்டரையர் மறவன் கண்டன்..இக்கோயிலை.."மறவன் ஈசுவரம்" என்றே கல்வெட்டில்
வெட்டி வைத்துள்ளார். எனவே, பழுவேட்டரையர், மழவரையர்..
முதலியோர்..மறவர்(கள்ளர்) இனம் என தெளிவாக அக்கல்வெட்டு
குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு காலம் கிபி.893--913.கல்வெட்டு
எண்S.I.I.XIII Ins.No.298 A.R.R.355 of 1924. சத்திரியன் பழுவேட்டரையன் குமரன் மறவனுக்கும் மழவரையர் பராந்தக வர்மரின் சகோதரிக்கும்
பிறந்த நம்பிராட்டியார் அருள்மொழி நங்கையையே முதலாம்
பராந்தகச் சோழன் மணந்து அரிஞ்சய சோழனைப் பெற்றார் என
வரலாறு குறிப்பிடுகிறது. அரிஞ்சய சோழனுக்கும் வைதும்பராயர்
மகள் கல்யாணிக்கும் பிறந்தவரே..சுந்தர சோழ தேவர். சுந்தர சோழ
தேவருக்கும் திருக்கோயிலூர் மலையமான் சேதுராயர் மகள் வானவன்மாதேவிக்கும் பிறந்தவரே..அகில உலகம் போற்றும்
இராஜராஜ சோழன். இவர்கள் அனைவரும் முக்குலத்தோராகிய
கள்ளர், மறவர், அகமுடையோரே ஆவர். நம் முக்குலத்தைப் போன்று
போர்க்களம் சார்ந்த மக்களாக வேடமிடும் உள் நோக்கத்திலேயே
பள்ளிகள் கடந்த 50 ஆண்டுகளில் தங்களை..ஷத்திரியர் என
பள்ளிகள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பதிவு செய்தனர்.

உண்மையான ஷத்திரியர்கள்..போர்க்குடிகளான..கள்ளர், மறவர்,
அகமுடையோரே ஆவர். இம்முக்குலத்தோர் இன்றும் கொள்வினை
கொடுப்பினை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பள்ளிகளோடு, முக்குலத்தோருக்கு எவ்வித மண உறவும் கிடையாது
என்பதிலிருந்தே பள்ளிகள்..போர்க்குடிகள்(ஷத்திரியர்கள்) அல்ல
என்பதை தெளிவாக அறியலாம். மணவினையே வரலாற்றின்
உரைகல் ஆகும்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்